/indian-express-tamil/media/media_files/2025/10/06/amithsha-2025-10-06-07-17-15.jpg)
மகளிர் கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா; தேசம் பெருமை கொள்வதாக அமித்ஷா பாராட்டு
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை ஏரிகளின் நீர்நிலை விபரங்கள்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 5 மாதங்களுக்குப் பிறகு நீர் இருப்பு 8 டி.எம்.சி. ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணா நதி நீர் வரத்து மற்றும் தென்மேற்குப் பருவமழையால் நீர் இருப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 8.023 டி.எம்.சி. ஆக நீர் இருப்பு உள்ளது.
- Oct 06, 2025 07:37 IST
பாக்., வீழ்த்திய இந்தியா: தேசம் பெருமை கொள்வதாக அமித்ஷா பாராட்டு
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி குறித்து தேசம் பெருமிதம் கொள்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
A perfect strike.
— Amit Shah (@AmitShah) October 5, 2025
Dominating display of India's cricketing might by our Women's Cricket team in today's match in the ICC Women's World Cup.
Nation is proud of our team. Best wishes for your upcoming matches.#CWC25pic.twitter.com/HRZP9GxqTvஇது ஒரு கச்சிதமான வெற்றி, ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையில் நேற்று நடந்த போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்களின் கிரிக்கெட் வலிமையை ஆதிக்கம் செலுத்தும் வகையில் வெளிப்படுத்தியது. வரவிருக்கும் உங்க அனைத்து போட்டிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று அமித்ஷா குறிப்பிட்டு உள்ளார்.
- Oct 05, 2025 21:06 IST
‘ஆதிக்க வெறியர்களுக்கு எதிராக தமிழ்நாடு போராடும்’; ஆளுநர் ரவி விமர்சனத்துக்கு ஸ்டாலின் பதில்
ஆளுநர் ரவி விமர்சனத்துக்கு ஸ்டாலின் பதிலளித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது; “தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்.
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 5, 2025
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி,… https://t.co/yW1ZGVLwDK - Oct 05, 2025 20:51 IST
கரூர் துயரச் சம்பவம்: ஒரு நபர் விசாரணைக் குழு முழுமையாக விசாரிக்க இ.பி.எஸ் வலியுறுத்தல்
ஆங்கில நாளேட்டைச் சுட்டிக்காட்டி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: “விஜய் பேச ஆரம்பித்தவுடன் மின் தடை ஏற்பட்டதாக லில்லி என்பவர் கூறியுள்ளார். ஒரு நபர் விசாரனைக் குழு முழுமையாக விசாரிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழா ஏற்பாட்டாளர்களிடம் ஏன் கேட்கப்படவில்லை. பாதுகாப்பு ஏற்பாடு குறித்து எஸ்.பி கூட்டம் போட்டாரா? மேலும், மேலும் மக்களைக் கூட்டப் பகுதியில் அனுமதித்தது ஏன்? கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ கூற முடியாது” என ஆங்கில நாளேட்டை சுட்டிக்காட்டி பதிவிடுட்ள்ளார்.
- Oct 05, 2025 20:02 IST
‘எனது பெயரைச் சொல்லி பணம் கேட்டு வெளியான வீடியோவுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ - அண்ணாமலை
அண்ணாமலை பெயரைச் சொல்லி பணம் கேட்டதாக கோவையைச் சேர்ந்த நபர் முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், “எனது பெயரைச் சொல்லி பணம் கேட்டதாக வெளியான வீடியோவுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
- Oct 05, 2025 19:52 IST
தமிழ்நாடு அரசு இலச்சினை அணிவது ஏன்? - அஜித் குமார் பேட்டி
தமிழ்நாடு அரசு லோகொ (SDAT) அணிவது ஏன் என்று நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் கூறுகையில், “சென்னையில் கடந்த ஆண்டு ‘ஸ்ட்ரீட் ரேஸ்’ கார் பந்தயத்தை தமிழ்நாடு அரசு நடத்தியது. என்னைப் போன்ற மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்கு பெரிய உந்துதலாக இருந்தது. அதுமட்டுமின்றி வேறு பல விளையாட்டுகளுகும் தமிழ்நாடு அரசு உதவி வருகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை நாங்கள் உடையில் அணிகிறோம்” என்று கூறியுள்ளார்.
- Oct 05, 2025 18:51 IST
பருவ மழை தொடர்பாக பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டிவைத்து அங்கு மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். மழையின் போது பள்ளியின் சுற்றுச் சுவரின் 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், மூடப்பட்டு உள்ளதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் பழுதுபட்ட மின்சாதனப் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என பருவமழை தொடர்பாக பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது
- Oct 05, 2025 18:20 IST
அமெரிக்காவின் வரி, இருதரப்பு வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது - அமைச்சர் ஜெய்சங்கர்
அமெரிக்காவின் வரி, இருதரப்பு வர்த்தகம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவுடனான எரிசக்தி ஒப்பந்தத்தை குறிப்பிட்டு வரி உயர்த்தியது நியாயமற்றது என அமெரிக்காவிடம் பகிரங்கமாக எடுத்துரைத்துள்ளோம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்
- Oct 05, 2025 17:43 IST
விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்
தொடர் விடுமுறை முடிந்ததால் தென் மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னை நோக்கிப் புறப்பட்டனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் அதிகளவு வாகனங்கள் கடந்து செல்வதால், கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
- Oct 05, 2025 17:22 IST
இலங்கைக்கு இனிமேல் வாரத்தின் 7 நாட்களும் கப்பல் சேவை
ஏற்கனவே 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் நாகை - காங்கேசன்துறை இடையிலான பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 05, 2025 17:21 IST
சென்னையில் கனமழை - 20 விமான சேவைகள் பாதிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. கொழும்புவில் இருந்து 149 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. கொழும்புவில் இருந்து 149 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூரு திருப்பி விடப்பட்டது. 10 விமானங்கள் சென்னையிலிருந்து தாமதமாக புறப்பட்டு சென்றதுக முடியாமல் பெங்களூரு திருப்பி விடப்பட்டது. 10 விமானங்கள் சென்னையிலிருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது
- Oct 05, 2025 17:19 IST
மழைக்காலம்: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
பள்ளிக் கல்வித்துறை, மழைக்காலத்தில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வழங்க வேண்டிய சில அறிவுரைகளைப் பட்டியலிட்டுள்ளது:
பள்ளிக்கு மிதிவண்டிகளில் வரும்போது சகதியில் வழுக்கி விழும் அபாயத்தை எடுத்துரைக்க வேண்டும். பள்ளியின் சுற்றுச்சுவருக்கு 20 அடி தொலைவு வரை மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதைத் தவிர்த்திட அறிவுறுத்த வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளதா என்று அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். தொடர் மழை காரணமாக மின் கசிவு, மின் கோளாறுகள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளி வளாகத்தில், கட்டட பராமரிப்புப் பணி, புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் மாணவர்கள் செல்லத் தடை விதிக்கவும்!
- Oct 05, 2025 17:16 IST
டிடிவி உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது: உதயகுமார்
டிடிவி தினகரனின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது; திமுக-வை பாராட்டுவது பச்சைத்துரோகம். அம்மாவின் ஆன்மா இதை மன்னிக்குமா?–
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
- Oct 05, 2025 17:15 IST
காரைக்குடி கிராம மக்கள் கோரிக்கை
காரைக்குடி அருகே சங்கம் திடல் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான கட்டுமான பணிகள் தொடங்கின. அந்தப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது . இதனால் விரைவில் பணிகள் முடித்து நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- Oct 05, 2025 16:35 IST
அண்ணன், தம்பிக்கு நேர்ந்த சோகம்!
திருவண்ணாமலை - சேத்துப்பட்டு அருந்ததி பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மகன்கள் யுவராஜ் (வயது 14), திஷாந்த் (வயது 8) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்று ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.
- Oct 05, 2025 16:12 IST
கரூர் சம்பவம்: மெளன அஞ்சலி செலுத்திய தவெக நிர்வாகிகள்
குளித்தலையில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்களை வைத்து தவெக நிர்வாகிகள் மெளன அஞ்சலி செலுத்தினர்.
- Oct 05, 2025 16:11 IST
தி.மு.க.வுக்கு 'ஜீரோ மதிப்பெண்: ராஜேந்திர பாலாஜி
2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் ஏமாந்து விட்டால் மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு தி.மு.க.வின் அட்டூழியங்கள் தொடரும்; இந்த நிலை மாற தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட சங்கடங்கள், கஷ்ட நஷ்டங்கள், துன்பங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறிய நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு மானியம், மதுவிலக்கு அமல்படுத்துதல், மின் கட்டணம் மாதம் தோறும் கணக்கிடுவது உள்ளிட்ட 10 முக்கிய அறிவிப்புகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை; பத்தும் பொய்யிலியர் ஆகிவிட்டது.
தி.மு.க ஆட்சிக்கு 'ஜீரோ மதிப்பெண்'; ஒன்றுமே செய்யாத தி.மு.க., பிறர் மீது குற்றம் சொல்லி கட்சியை நடத்துகிறது."
ராஜபாளையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி முகாமில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசினார்.
- Oct 05, 2025 15:25 IST
தென்காசியில் சூறைக்காற்றுடன் கனமழை
தென்காசி: வாசுதேவநல்லூர் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது; முழங்கால் அளவிற்கு பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
- Oct 05, 2025 15:24 IST
கரூர் சம்பவம் - அஸ்ரா கார்க் பேட்டி
“கரூர் சம்பவம் குறித்து இன்று விசாரணையை தொடங்கியிருக்கிறோம், விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது விசாரணை விவரங்களை மேற்கொண்டு நானே சொல்கிறேன்'.
அஸ்ரா கார்க் பேட்டி
- Oct 05, 2025 15:21 IST
சென்னையில் பரவலாக மழை
சென்னையில் ஈக்காட்டுத்தங்கல், மேற்கு மாம்பலம், வடபழனி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
- Oct 05, 2025 15:19 IST
காந்தாரா போல் வேடமணிந்து திரையரங்குக்கு வந்த ரசிகர்
Video: Puthiya Thalaimurai
திண்டுக்கல்: காந்தாரா பாகம் 1 படம் பார்க்க வந்த ரசிகரொருவர் காந்தாரா போல் வேடமணிந்து திரையரங்கிற்கு வந்ததுடன், படத்தில் வருவது போலவே நடனமாடியுள்ளார்.#KantaraMovie | #KantaraChapter1 | #Dindigulpic.twitter.com/sACLcdrfIl
— PttvOnlinenews (@PttvNewsX) October 5, 2025 - Oct 05, 2025 15:17 IST
கைகுலுக்கிக் கொள்ளாத கேப்டன்கள்
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. டாஸின்போது இரு நாட்டு கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது.
- Oct 05, 2025 14:44 IST
அஜித்துக்கு உதயநிதி வாழ்த்து
இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம்.
நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம்.
— Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) October 5, 2025
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும்… pic.twitter.com/zzleaHeYbV - Oct 05, 2025 14:44 IST
நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்: வரும் 12ம் தேதி மதுரையில் தொடக்கம்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணம் வரும் 12ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறது. இதன் முதற்கட்ட சுற்றுப்பயணம் நவம்பர் 22ஆம் தேதி தூத்துக்குடியில் நிறைவடையும். அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் நவம்பர் 24ஆம் தேதி தேனியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 05, 2025 14:41 IST
டார்ஜீலிங் பால விபத்து: அனைத்து உதவிகளும் வழங்கப்படும்- மோடி
மேற்கு வங்க மாநிலம் டார்ஜீலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்பகுதி முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி பதிவு
- Oct 05, 2025 13:48 IST
தீபாவளி நேரத்தில் நடைபெறும் ரிசர்வ் வங்கி தேர்வை தள்ளிவைக்க வேண்டும் - சு.வெங்கடேசன்
ரிசர்வ் வங்கியின் கிரேட் பி பதவிக்கான தேர்வு வரும் 18,19-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தீபாவளியை ஒட்டிய நாட்களில் சென்னைக்கு வந்துபோவது எவ்வளவு இன்னல்களை தரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன் - சு. வெங்கடேசன் எம்.பி
- Oct 05, 2025 12:55 IST
குள்ளநரித்தனமாக அரசு மீது குற்றம் சாட்டுகிறார் இ.பி.எஸ்-டிடிவி தினகரன்
த.வெ.க-வை கூட்டணிக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக கரூர் துயரத்திற்கு அரசுதான் காரணம் என குள்ளநரித்தனமாக குற்றச்சாட்டு முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
- Oct 05, 2025 12:24 IST
விஜயின் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
இரு சக்கர வாகனம் மீது மோதியது தொடர்பாக வேலாயுதம் பாளையம் காவல் நிலையத்தார் வழக்குப்பதிவு செய்தனர். பி.என்.எஸ் பிரிவில் 281 மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அல்லது மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் அவசரமாக வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு
- Oct 05, 2025 12:21 IST
நடிகர் ரஜினிகாந்த் இமையமலை பயணம்
நடிகர் ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல்.
- Oct 05, 2025 12:20 IST
எழுத்தாளர் சாரு நிவேதிதா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை அடையாறில் உள்ள எழுத்தாளர் சாரு நிவேதிதா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் 8-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதில் மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது
- Oct 05, 2025 12:18 IST
முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் முறையீடு
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன்ஜாமின் மறுத்த நிலையில் ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு
- Oct 05, 2025 11:57 IST
டார்ஜிலிங் அருகே கனமழை - பாலம் இடிந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு
- Oct 05, 2025 11:24 IST
கரூர் துயரம் - சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதலாக 8 அதிகாரிகள் நியமனம்
கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக 8 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- Oct 05, 2025 10:51 IST
கட்டுமான பணிகளுக்கு தடை - திருவண்ணாமலை கோயிலில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கோயில் பகுதியில் ஆய்வு செய்கின்றனர்.
- Oct 05, 2025 10:47 IST
சென்னையில் மாரத்தான் ஓடிய இளைஞர் பலி
சென்னை, கோட்டூர்புரத்தில் மாரத்தான் ஓடிய, தனியார் வங்கியில் பணியாற்றிய பரமேஷ்(24) வலிப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Oct 05, 2025 10:17 IST
இருமல் சிரப் விவகாரம் - மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சஸ்பெண்ட்
ராஜஸ்தானில் இருமல் சிரப் எடுத்துக்கொண்ட குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக, ராஜஸ்தான் மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசின் ஒப்பந்த நிறுவனம் தயாரித்த சிரப் உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ராஜாராம் சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,
- Oct 05, 2025 10:13 IST
கரூர் துயர சம்பவம் - விஜய்யின் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
விஜய் பிரசார பேருந்தில் தொண்டர்களின் பைக் மோதிய விவகாரம் தொடர்பாக, விஜய்யின் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் தவிட்டுப்பாளையம் சோதனைச்சாவடி அருகே விபத்து நடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- Oct 05, 2025 09:19 IST
பீகார் தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை
பீகாரில் ஒன்று அல்லது 2 கட்டங்களாக மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளன. மாநிலம் முழுவதும் வரும் 28-ந் தேதி வரை சத் பூஜை கொண்டாட்டங்கள் நடைபெறும் என்பதால், அதன்பிறகே சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவித்துள்ளன,
- Oct 05, 2025 09:17 IST
மணிக்கு 7,400 கி.மீ.வேகம் - புதிய ஏவுகணை சோதனை முயற்சியில் டி.ஆர்.டி.ஓ
ஒலியை விட 6 மடங்கு அதிக வேகத்தில் பறக்கக்கூடிய தவானி (Dhvani) என்ற புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை 2025 இறுதிக்குள் சோதனை செய்ய டி.ஆர்.டி.ஓ (DRDO) அமைப்பு திட்டமிட்டுள்ளது. மணிக்கு 7,400 கி.மீ.வேகத்தில் பறக்ககூடிய வகையில் உருவாக்கப்படும் இந்த ஏவுகணை இஸ்ரேலின், அயர்ஸ் டோம், அமெரிக்காவின் தாட் போன்ற அமைப்புகளால் கூட இடைமறித்து அழிப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.
- Oct 05, 2025 09:09 IST
2 நாட்கள் அரசுமுறை பயணம் - இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர்
2 நாட்கள் அரசுமுறை பயணமாக அரசுமுறை பயணமாக அக்.8ம் தேதி பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருகிறார். இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம், உள்ளிட்ட விவாகரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
- Oct 05, 2025 08:55 IST
தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 45 சதவீதம் வாக்குகள் உள்ளன - கே.எஸ்.அழகிரி
தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 45 சதவீதம் வாக்குகள் உள்ளன. மேலும் கூடுதலாக எங்கள் அணியால் வெற்றி பெற முடியும். எங்கள் வாக்கு வங்கிக்கு இணையாக வேறு எந்த கட்சியும் தமிழ்நாட்டில் இல்லை என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
- Oct 05, 2025 08:52 IST
வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம்: பூங்கா அதிகாரிகள் விளக்கம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 'லயன் சபாரி' பகுதியில் திறந்துவிடப்பட்ட 'சேரு' என்ற புதிய சிங்கம் மாயமானது. சபாரி பகுதியில் திறந்து விடப்பட்ட புதிய சிங்கம் மீண்டும் உணவு உட்கொள்ள வராததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 2 நாட்களாக சிங்கத்தைபூங்கா அதிகாரிகள் தேடி வந்த நிலையில், 'லயன் சபாரி' பகுதியில் சுற்றித்திரிவது தெரிய வந்துள்ளது. மாயமான சிங்கம் பூங்காவில் உள்ள 'லயன் சபாரி' பகுதியில்தான் இருப்பதாகவும், வெளியே செல்லவில்லை எனவும் அது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் சிங்கம் வெளியேற வாய்ப்பு இல்லை என பூங்கா அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
- Oct 05, 2025 08:19 IST
மகளிர் உலகக்கோப்பை - இன்று இந்தியா vs பாக். மோதல்
கொழும்புவில் இன்று நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. ஆசியக்கோப்பை தொடரில் இந்திய ஆடவர் அணி பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகொடுக்க மறுத்த நிலையில், மகளிர் அணியும் இதே நிலையை கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Oct 05, 2025 08:19 IST
ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார் சனே தகைச்சி
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக, முன்னாள் அமைச்சர் சனே தகைச்சி (Sanae Takaichi) பதவியேற்க உள்ளார். ஆளும் லிபரெல் டெமாக்ரடிக் கட்சி பெரும்பான்மையை இழந்ததால், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வரும் 15-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Oct 05, 2025 08:18 IST
படைகளை திரும்பப் பெற இஸ்ரேல் ஒப்புதல்
காசாவின் ஒருசில பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் நடைமுறைப்படுத்திய உடனே காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
- Oct 05, 2025 08:18 IST
நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனையில் புரளி என தகவல் வெளியாகியுள்ளது.
- Oct 05, 2025 08:17 IST
பீகாரில் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை - பிரதமர் அறிவிப்பு
பீகாரில், 5 லட்சம் பட்டதாரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துடன் இலவசமாக திறமை வளர்ப்பு பயிற்சியும் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- Oct 05, 2025 07:27 IST
இந்தியாவின் எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு - புதிய கின்னஸ் சாதனை!
லடாக்கின் மிக்-லாவில் கடல் மட்டத்தில் இருந்து 19,400 அடி உயரத்தில், உலகின் உயரமான இடத்தில் வாகனம் ஓட்டக்கூடிய சாலைகள் அமைத்து பி.ஆர்.ஓ அமைப்பு சாதனை படைத்துள்ளது, இதன் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு உம்லிங்-லா பகுதியில், 19,024 அடி உயரத்தில் சாலை அமைத்த தங்கள் சொந்த கின்னஸ் சாதனையை பி.ஆர்.ஓ அமைப்பு முறியடித்துள்ளது.
- Oct 05, 2025 07:23 IST
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி - இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
2025 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஷாட் புட்
F57 பிரிவில், சோமன் ராணா வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பெண்கள் கிளப் த்ரோ F51 போட்டியில், ஏக்தா பியான் வெள்ளிப் பதக்கம் வென்றார் - Oct 05, 2025 07:22 IST
காசாவில் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய இஸ்ரேல்
டிரம்ப் விதித்த கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, காசாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்
- Oct 05, 2025 07:21 IST
ஃபார்ஸ்ட்டேக் அல்லாத பயனர்களுக்கு கூடுதல் கட்டணம் - விதிகளில் புதிய மாற்றம்
ஃபார்ஸ்ட்டேக் (FASTag) இல்லாமல் கட்டண மையத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான கட்டண வசூலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, .பாஸ்ட்டேக் இல்லாத வாகன ஓட்டிகள் பணமாக செலுத்தினால் கட்டணத்தை விட கூடுதலாக ஒரு மடங்கு வசூலிக்கப்படும் நிலையில் யூபிஐ (UPI) மூலம் செலுத்தினால் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us