/indian-express-tamil/media/media_files/2025/06/15/kTYUCqVspTEoFlyjytoi.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jun 16, 2025 06:11 IST
சோனியா காந்தி டெல்லியில் மருத்துவமனையில் அனுமதி
அவர் இரைப்பை குடல் துறையின் பராமரிப்பில் உள்ளார், தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி வயிறு தொடர்பான நோய் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. அவர் இரைப்பை குடல் துறையின் பராமரிப்பில் உள்ளார், மேலும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார் என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், 78 வயதான தலைவருக்கு சரப்ராவில் உள்ள தனது தனியார் இல்லத்தில் அமைதியின்மை ஏற்பட்டதால், சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் (IGMC) MRI ஸ்கேன் செய்யப்பட்டது. அவரது இரத்த அழுத்தம் "இயல்பை விட சற்று அதிகமாக" இருந்தபோதிலும், அவர் "சாதாரணமாகவும் நிலையானதாகவும்" இருப்பதாக IGMC இன் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
-
Jun 15, 2025 21:19 IST
புனேவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: நிவாரணத் தொகை அறிவித்தா தேவேந்திர ஃபட்னாவிஸ்
மகாராஷ்டிராவின் புனே அருகே இந்திராயானி ஆற்றின் பாலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்ததில் 4 பேர் இறந்தனர். பல சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிச்ஸ் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
Jun 15, 2025 21:10 IST
புனேவில் பாலம் இடிந்து விழுந்து : 4 பேர் உயிரிழப்பு; 38 பேர் மீட்பு
மகாராஷ்டிராவின் புனே அருகே இந்திராயானி ஆற்றின் பாலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்ததில் 4 பேர் இறந்தனர். பல சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு பேர் கண்டுபிடிக்கப்படவில்லை என்று மாவட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, 10 முதல் 15 பேர் வரை நீரில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவசரகால நடவடிக்கையின் ஒரு பகுதியாக மீட்புப் படகுகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுவரை 38 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
-
Jun 15, 2025 21:04 IST
இந்தியா -பாக். போல இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த வேண்டும் - டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்: ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்; விரைவாக நல்ல முடிவு எடுத்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த நான் எடுத்த முயற்சிகளை ஏற்றுக்கொண்டு அந்த தலைவர்கள் செயல்பட்டது போல, இஸ்ரேல் மற்றும் ஈரான் தலைவர்களும் போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
-
Jun 15, 2025 19:51 IST
2026 தேர்தலில் நிச்சயமாக பா.ம.க அங்கமாக இருக்கும் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும் - அன்புமணி ராமதாஸ்
மதுராந்தகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர், “2026 தேர்தலில் நிச்சயமாக பா.ம.க அங்கமாக இருக்கும் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும்; கூட்டணி ஆட்சியில் அங்கமாக இருப்போம்” என்று கூறினார்.
-
Jun 15, 2025 19:29 IST
‘பா.ம.க-வுக்கு திருஷ்டி எல்லாம் போய்விட்டது’ - அன்புமணி ராமதாஸ்
மதுராந்தகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர், “நம் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து ஆளுங்கட்சிக்கு வயிற்றெரிச்சல்; அந்த வயிற்றெரிச்சலில் வந்த திருஷ்டிதான் கட்சியில் தற்போழுது நடக்கும் சம்பவங்கள்; ஆனாலும், அந்த திருஷ்டி எல்லாம் போய்விட்டது” என்று கூறினார்.
-
Jun 15, 2025 18:22 IST
மோடி சைப்ரஸ் நாட்டிற்கு அரசுமுறை பயணம்
பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். சைப்ரஸ் அதிபர் விமான நிலையத்தில் மோடியை வரவேற்றார்
-
Jun 15, 2025 17:38 IST
பிளக்ஸ் பேனர் விழுந்து பைக்கில் சென்றவர் காயம்
செங்கல்பட்டு அருகே படூரில் பிளக்ஸ் பேனர் விழுந்த விபத்தில் பைக்கில் சென்றவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சாலையோரம் உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என ஈ.சி.ஆர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-
Jun 15, 2025 17:06 IST
புனேவில் பாலம் இடிந்து விழுந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்; மீட்புப் பணிகள் தீவிரம்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 60 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தில் இருந்த மக்கள் கீழே விழுந்ததில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
-
Jun 15, 2025 16:47 IST
பாமகவில் நடப்பது மிகவும் கவலை அளிக்கிறது: ஜி.கே.மணி
தைலாபுரம் கூட்டத்திற்கு வந்த பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி கூறியதாவது: ஒருவாரத்திற்கு முன்னதாக ராமதாஸ் சென்னை வந்தார். அவரது சின்னப்பெண் கவிதா வீட்டில் அய்யாவும் நானும் பேசினோம். அப்போது காலம் தாழ்த்தாமல் சுமூகமான தீர்வுக்கு வரவேண்டும் என்று கூறினோம். சரி என்று ஒப்புக்கொண்டார். அவரும் அன்றே சுமூகமான தீர்வு வரும் என்று ராமதாஸ் கூறினார். இதற்கிடையில் பாமகவில் ஒருவார நிகழ்வுகளில் மிகவும் கவலை அளிப்பதாகவும் மிகவும் வேதனை அளிக்க கூடிய செய்தியாக தான் வந்தது. நாங்களும் எவ்வளவோ முயற்சி எடுத்து ஒரு நல்ல தீர்வு ஏற்படும் என நினைத்தோம் என்றார்.
-
Jun 15, 2025 16:42 IST
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
கோடை விடுமுறை முடிந்த பிறகும் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாதம் 15-ந் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் அதிகபட்சமாக 92 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். வெள்ளிக்கிழமை தோறும் ஏழுமலையானுக்கு அபிஷேக சேவை நடைபெறுவது வழக்கம். அபிஷேக சேவை காரணமாக 3 மணி நேரத்திற்கு மேல் தரிசனம் நிறுத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் 60 முதல் 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்து வந்தனர். ஆனால் தற்போது கூடுதலாக 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
Jun 15, 2025 16:40 IST
திருச்சியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்றும் நாளையும் தஞ்சை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். அதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி சென்றடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை, அமைச்சர்கள் கே.என். நேரு, ரகுபதி, கோவி. செழியன், அன்பில் மகேஷ் மெய்யநாதன் உள்ளிட்டோரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, அருண் நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர் .
-
Jun 15, 2025 16:36 IST
விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ருபானியின் உடல் அடையாளம் காணப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 12-ம் தேதி விபத்து நடந்த நிலையில், டி.என்.ஏ. பரிசோதனையின் மூலம் இன்று காலை உடல் அடையாளம் காணப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
-
Jun 15, 2025 16:30 IST
டாஸ்மாக் மது என்ன கோயில் தீர்த்தமா? -சீமான்
கள் விஷம் என்றால் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் பீர், விஸ்கி, ரம் எல்லாம் கோயில்களில் கொடுக்கப்படும் தீர்த்தமா? என்று தூத்துக்குடியில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
Jun 15, 2025 16:27 IST
துணை ஜனாதிபதி வருகை: சென்னையில் ட்ரோன் பறக்க தடை
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் இன்று( ஜூன்15) சென்னை விமான நிலையம் வந்து புதுச்சேரி புறப்படுகிறார். மீண்டும் ஜூன் 17ம் தேதி புதுச்சேரியிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார்.
-
Jun 15, 2025 16:21 IST
கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கத்தினர் வாழ்த்து
சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கமல்ஹாசனுக்கு அரசியல் சார்ந்தும், சினிமா சார்ந்தும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், அதன் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன், நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உள்ளிட்ட பலர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
-
Jun 15, 2025 15:54 IST
திமுக கட்சி நிகழ்ச்சியில் மாணவர்கள்- அண்ணாமலை கண்டனம்
கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சித்த திமுகவின் செயல்பாட்டினை கண்டிப்பதாக பாஜக முன்னாள தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
Jun 15, 2025 15:53 IST
உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு
உத்தரப் பிரதேசத்தில் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக் கிழமை இரவு ஒரு பூங்காவில் இந்த சம்பவம் நடந்தது. தகவல் பரவியவுடன், உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்தில் கூடியதால் பரபரப்பு நிலவியது.
-
Jun 15, 2025 15:52 IST
"குரூப் 1 தேர்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியிடப்படும்"
குரூப் 1 தேர்வை நடைபெறுவதை, டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர், சென்னை எழும்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்கே பிரபாகர் கூறியதாவது: நடப்பு ஆண்டு தேர்வர்கள் எளிய முறையில் விடையளிக்கும் வகையில், தேர்வு தாள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்னும் 2 மாதங்களில் வெளியிடப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.
-
Jun 15, 2025 15:35 IST
அமெரிக்காவை தாக்கினால் கடும் பதிலடி: டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவை ஈரான் தாக்கினால் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை; எந்த வகையிலும், வடிவிலும் ஈரான் தாக்கினால் அமெரிக்க ஆயுதப் படை முழு பலத்துடன் களமிறங்கும். இருப்பினும், ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றார் அவர்.
-
Jun 15, 2025 15:08 IST
ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 80 பேர் பலி
தெஹ்ரானில் உள்ள ஈரான் அரசின் அணு ஆயுத திட்டத்துடன் தொடர்புடைய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் ராணுவம் ஈரானியர்களை ஆயுத தொழிற்சாலைகளை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. இதற்கிடையில் ஈரானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈரானின் ஐ.நா. தூதர் தெரிவித்துள்ளார்.
-
Jun 15, 2025 14:39 IST
3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப் பயணமாக புறப்பட்டார் மோடி
சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி புறப்பட்டார். கனடாவில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
-
Jun 15, 2025 14:25 IST
13 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 15, 2025 14:17 IST
நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் (ஜூன் 17) நீலகிரி, கோவைக்கு மட்டும் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
-
Jun 15, 2025 14:08 IST
குஜராத் விமான விபத்து - 14 பேரின் உடல்கள் ஒப்படைப்பு
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி இன்று முதல் தொடங்கப்படுகிறது. டிஎன்ஏ மாதிரிகளின் உதவியால், உயிரிழந்தவர்களில் 14 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜனீஷ் படேல் தெரிவித்தார். டிஎன்ஏ பரிசோதனை, உடல்களை ஒப்படைக்கும் பணிகளில் மருத்துவகள், உதவியாளர்கள், ஓட்டுநர்கள் என சுமார் 600 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
-
Jun 15, 2025 13:59 IST
அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. இதுவரை மொத்தம் 20 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Jun 15, 2025 13:11 IST
ஒன்றிய அரசு என்று அழைக்கக் கூடாது - சி.பி. ராதாகிருஷ்ணன்
மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கக் கூடாது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றிய அரசு என அழைப்பதில் இருந்து தான் மோதல் போக்கு தொடங்குகிறது என்றும், கருணாநிதி கூட ஒன்றிய அரசு என்று அழைத்தது கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 15, 2025 12:54 IST
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், பிரிட்டிஷ் F35 போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் அவசர நிலையை காரணம் காண்பித்து, அந்த விமானத்தை உடனடியாக தரையிறக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இந்நிலையில், எரிபொருள் வழங்குவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
-
Jun 15, 2025 12:45 IST
பெண் காவலர்களுக்கான பணியிட மாற்றம் குறித்த அறிவிப்பு
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பணி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இதுவரை 209 பெண் காலவர்களுக்கு அவர்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 15, 2025 12:10 IST
மண் சரிவு காரணமாக ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் பாதியில் நிறுத்தம் - பயணிகள் அவதி
குஜராத்தில் இருந்து நெல்லை வரும் ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில், மண் சரிவு காரணமாக மங்களூரு - உடுப்பி இடையே சுமார் 5 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ரயிலில் இருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், உரிய நடவடிக்கை எடுத்து பயணத்தை தொடர வழிவகுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Jun 15, 2025 11:39 IST
மும்பை ஐஐடியில் ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிப்பு தேர்வாகியுள்ளார் மாற்றுத்திறனாளி மாணவி
டீக்கடையில் வேலை பார்க்கும் தந்தை.. பட்டாசு ஆலையில் வேலைப் பார்க்கும் தாய்.. மும்பை IIT-ல் படிக்கப் போகும் மகள்! 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சிபெற்று, மும்பை ஐஐடியில் ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிப்பு தேர்வாகியுள்ளார் மாற்றுத்திறனாளி மாணவி யோகேஸ்வரி.
-
Jun 15, 2025 10:46 IST
டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 1/1 ஏ முதல்நிலை தேர்வுகள் தொடங்கின 44 மையங்களில் 2.49 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர். 2 மாதங்களில் குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் அறிவித்துள்ளார்.
-
Jun 15, 2025 10:12 IST
மான் இறைச்சி என கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சி
அரிய வகை மான் இறைச்சி விற்றதாக இருவரை கைது செய்த கேரள வனத்துறை பிடிபட்டது மாட்டிறைச்சி என பரிசோதனையில் தெரியவந்த நிலையில், கைதான இருவரும் வனத்துறை மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
-
Jun 15, 2025 10:11 IST
ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்டில் பயணிகள் ஹெலிகாப்டர் விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். டேராடூனில் இருந்து கேதர்நாத் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் கௌரிகுண்ட் பகுதியில் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்தனர்.
-
Jun 15, 2025 09:10 IST
ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு: 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்
பிரதமர் நரேந்திர மோடி கனடா, சைப்ரஸ், குரோஷியா ஆகிய நாடுகளுக்கு
4 நாட்கள் அரசு முறைப் பயணம். கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், அங்கு நடைபெறும் ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார் -
Jun 15, 2025 08:18 IST
நகை வியாபாரியிடம் இருந்து 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளை
கோவை: கேரளாவைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் இருந்து 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடித்த வழக்கில், கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட லாரி சிக்கியது. கொள்ளை கும்பலை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.
-
Jun 15, 2025 08:17 IST
கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து ஹெலிகாப்டர் விபத்து
உத்திரகாண்ட் டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 6 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
Jun 15, 2025 08:13 IST
பள்ளி படிப்பை கைவிட்ட மாணவன்:நேரில் சென்று அறிவுரை கூறிய விருதுநகர் ஆட்சியர்
விருதுநகரில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் கள ஆய்வில் ஈடுபட்டு வரும் ஆட்சியர் ஜெயசீலன், மாணவனுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
-
Jun 15, 2025 07:37 IST
நெல்லை மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ
நெல்லை ராமையன்பட்டி மாநகராட்சி குப்பை கிடங்கில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றியதால்பரபரப்பு ஏற்பட்ட நிலையில், 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை முழுமையாக அணைத்தனர்.
-
Jun 15, 2025 07:35 IST
TNPL திருவிழா - இன்று 2 ஆட்டங்கள்
இன்று மாலை 3.15-க்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் திருப்பூர், திருச்சி அணிகள் மோதல். இரவு 7.15-க்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சேலம், நெல்லை அணிகள் பலப்பரீட்சை
-
Jun 15, 2025 07:16 IST
முடிவுக்கு வந்த மீன்படி தடைக்காலம்: மீன் பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்
மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, சென்னை காசிமேட்டில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.