/indian-express-tamil/media/media_files/2025/02/14/se1819JTMmb6why9AgnR.jpg)
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ91.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா திரும்பும் தொழில்நுட்ப கலைஞர்கள்
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் பணியாற்றி வரும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தியா திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்த தொடரை இந்தியாவில் ஒளிபரப்பிய சேனல மற்றும் ஒடிடி தளம் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது,
-
Apr 25, 2025 22:21 IST
டாஸ்மாக் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
-
Apr 25, 2025 20:45 IST
புறநகர் ஏ.சி மின்சார ரயில் சேவை ரத்து
சென்னையில், நாளை புறநகர் ஏ.சி மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, நாளை மாலை 3:45 மணி முதல் இரவு 7:45 மணி வரை புறநகர் ஏ.சி மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
-
Apr 25, 2025 20:41 IST
சென்னைக்குள் நுழைய 3 ரவுடிகளுக்கு தடை
ஏ+ சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ராக்கெட் ராஜா, சூர்யா மற்றும் லெனின் ஆகியோர் சென்னைக்குள் வருவதற்கு காவல் ஆணையரகம் தடை விதித்துள்ளது. நீதிமன்ற வழக்கு, காவல் நிலைய விசாரணையை தவிர பிற காரணங்களுக்காக சென்னைக்குள் வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Apr 25, 2025 19:16 IST
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் பணியிட மாற்றம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநராக தேரணி ராஜன் மாற்றப்பட்டுள்ளார். மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்க கூடுதல் இயக்குநராக இருந்த சாந்தாராம், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Apr 25, 2025 18:51 IST
பஹல்காம் தாக்குதல் - மத்திய அமைச்சர்கள் ஆலோசனை
பஹல்காம் தாக்குதலை அடுத்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்துள்ள பதில் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளின் கருத்துக்கள் மற்றும் ஆதரவு குறித்தும் அமித்ஷாவிடம் விளக்கம் அளிக்கப்படுகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் தொடர்பாக ஜல் சக்தி துறை அமைச்சர் உடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்
-
Apr 25, 2025 18:32 IST
இ.பி.எஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
-
Apr 25, 2025 18:22 IST
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
நீர்வளத்துறை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா, பொதுப்பணித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை செயலாளர் ஜெயகாந்தன், நீர்வளத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
-
Apr 25, 2025 18:20 IST
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - இருவருக்கு நீதிமன்ற காவல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யாத 2 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். அப்போது குற்றப்பத்திரிகையுடன், சுமார் 5,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Apr 25, 2025 17:54 IST
டெல்லி மேயர் தேர்தல் – பா.ஜ.க வேட்பாளர் வெற்றி
டெல்லி மேயர் தேர்தலில் பா.ஜ.க.,வை சேர்ந்த ராஜா இக்பால் சிங், மொத்தமுள்ள 142 வாக்குகளில் 133 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
-
Apr 25, 2025 17:53 IST
ஆளுநர் ரவியின் மிரட்டல் குற்றச்சாட்டு - அமைச்சர் பதில்
மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் தான் ஊறிக் கிடக்கிறது. துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பது தான் எங்கள் டி.என்.ஏ-வில் இருக்கிறது. மோடி பிரதமரான பிறகு, பிடிக்காத மாநில அரசுகளுக்கு ஆளுநர்களை வைத்து குடைச்சல் கொடுக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அறிந்து மாநாட்டை துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசோடு மல்லுக்கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஆளுநர் ரவி துணை வேந்தர்கள் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்
-
Apr 25, 2025 17:24 IST
அவசர காலத்தை நினைவுபடுத்துகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி
துணைவேந்தர்கள் மாநாட்டில் துணைவேந்தர்களை பங்கேற்க விடாமல் செய்தது அவசரகாலத்தை நினைவூட்டுகிறது. துணைவேந்தர்களை தடுக்க காவல்துறையை முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தியுள்ளார். தமிழகத்தில் காவல்துறை ராஜ்ஜியமா நடக்கிறது? மாநிலத்திற்குள் நடைபெறும் கல்வி மாநாட்டில் பங்கேற்க துணைவேந்தர்களுக்கு சுதந்திரம் இல்லையா? என ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசை சாடியுள்ளார்
-
Apr 25, 2025 17:19 IST
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்பு
சென்னையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று வருகிறார். கட்சிப் பணிகள், பூத் கமிட்டி குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
Apr 25, 2025 16:59 IST
வக்பு சட்டத்திருத்தம் - மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்
வக்பு சட்டத்திருத்தம் என்பது ஒழுங்குமுறைப்படுத்த மட்டுமே; மத உரிமைகளை பாதிக்காது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. “அரசியலமைப்பின் கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறவில்லை. அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரங்களை வக்பு சட்டம் மீறவில்லை. வக்பு சட்டத்திருத்தம் என்பது வாரியத்துக்கான சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பானது. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது” எனவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 25, 2025 16:54 IST
அப்துல் கலாம் கல்வி உதவித்தொகை வதந்தி - தகவல் சரிபார்ப்பகம்
அப்துல் கலாம் கல்வி உதவித்தொகை என்று பரவும் செய்தி வதந்தி என அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. ‘10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவோருக்கு ரூ.10,000 என்பதும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 85 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.25000 என்பதும் வதந்தி. அப்துல் கலாம் பெயரில் மாணவர்களுக்கு உதவித்தொகை தர எந்த அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை’ என அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
-
Apr 25, 2025 16:50 IST
தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் ரத்து
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக திமுக எம்.பி, டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தி.மு.க எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க முன்னாள் எம்.பி. உதயகுமார் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
-
Apr 25, 2025 16:34 IST
ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி ஐகோர்ட் உத்தரவு
பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வீரா ராஜ வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ரூ.2 கோடி செலுத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆணையிட்டுள்ளது. காப்புரிமை விவகாரத்தில் ரூ.2 கோடியை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Apr 25, 2025 16:17 IST
'பஹல்காமில் நடந்தது மனிதகுலம் மீதான தாக்குதல்’ - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி
''பஹல்காமில் நடந்த தீவிரவாத சம்பவம் மனிதகுலத்தின் மீதான தாக்குதல். அன்பு, சகோதரத்துவத்தை அழிக்கும் வெட்கக்கேடான முயற்சி. பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்." என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
-
Apr 25, 2025 15:56 IST
சென்னை அருகே தைவான் தொழிற்பூங்கா
சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க, சென்னை அருகே தைவான் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு
-
Apr 25, 2025 15:30 IST
வீடுகளுக்கு இணைய சேவை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை போல, 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை ஏற்படுத்த திட்டம்.
மேலும், இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்க திட்டம் செயல்படுத்தப்படும்
- சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
-
Apr 25, 2025 14:53 IST
தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்கா- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு
சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக்கோரிக்கையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
நாகையில் 600 பேர் பணியாற்றும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் பூங்கா
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மேலும் புதிய சிப்காட் பூங்கா
தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்கா மற்றும் திருவாரூர், ராமநாதபுரத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்
தஞ்சை மாவட்டத்தில் கடல்சார் உணவு ஏற்றுமதி பூங்கா அமைக்கப்படும்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்கா 125 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்
-
Apr 25, 2025 14:52 IST
சென்னையில் 16 வயது சிறுமிக்கு அரிவாள் வெட்டு
சென்னை கொருக்குப்பேட்டையில் 16 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மதன் குமார் என்பவர் கடந்த 16ம் தேதி கைதானான். தனது தம்பி மீது புகார் அளித்ததால், சிறுமியை இன்று பின்தொடர்ந்த அண்ணன் பாபு, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
படுகாயம் அடைந்த சிறுமி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி. போலீசார் விசாரணை
-
Apr 25, 2025 14:27 IST
பாகிஸ்தானியர்களை வெளியேற்ற அமித்ஷா அறிவுறுத்தல்
மாநிலங்களில் உள்ள அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தானியர்கள் உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்புவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் அமித்ஷா பேச்சு
-
Apr 25, 2025 14:25 IST
லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் புதியதாக கட்டப்பட்ட வீட்டுக்கு சொத்துவரி ரசீது போடுவதற்கு ரூ.15,000 லஞ்சம் பெற்றபோது, நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
-
Apr 25, 2025 14:21 IST
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை
-
Apr 25, 2025 13:53 IST
நீட் வினாத்தாள் கசிவு - முக்கிய நபர் கைது
பிஹாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான சஞ்சீவ் முகியாவை பாட்னாவை சேர்ந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கடந்தாண்டு நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாளை கசியவிட்டதாக வழக்குப்பதிவு; நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஏற்கெனவே 6 பேர் கைதான நிலையில் சஞ்சீவ் முகியா பிடிபட்டார்
-
Apr 25, 2025 13:48 IST
ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என பேசியிருந்தார் ஈபிஎஸ்; இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு அவதூறு வழக்கு தொடர்ந்தார்
-
Apr 25, 2025 13:40 IST
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் (84), பெங்களூருவில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக பதவி வகித்த அவர், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்; பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார்
-
Apr 25, 2025 13:17 IST
மகளிர் உரிமைத்தொகை - ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்; இத்திட்டத்தில் இதுவரை 1.14 கோடி பேருக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது 9,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம் நடைபெறவுள்ளது; அதில் விண்ணப்பிக்கலாம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Apr 25, 2025 13:12 IST
சாவர்க்கர் அவதூறு வழக்கு ராகுலுக்கு இடைக்காலத் தடை
சாவர்க்கர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு அனுப்பிய சம்மனுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை. சாவர்க்கர் தொடர்பான அவதூறு வழக்கின் சம்மனை ரத்து செய்யக் கோரிய காங். மூத்த தலைவர் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை
-
Apr 25, 2025 12:59 IST
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது”
"பயங்கரவாத தாக்குதலில் கண்முன்னேயே என் தந்தையை இழந்த நான், என் இரட்டை குழந்தைகளை காப்பாற்ற நினைத்து அங்கிருந்து தப்பி ஓடிவந்தேன். அப்போது உள்ளூர்வாசியான முசாஃபிர் என்ற ஓட்டுநர்தான் எங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றார். முசாஃபிரும், மற்றொரு உள்ளூர் ஓட்டுநர் சமீரும்தான் மறுநாள் அதிகாலை 3 மணிவரை என் அப்பாவின் சடலம் இருந்த பிணவறையின் வெளியேவே நின்று, அவர்களின் தங்கையை போல் என்னை பாதுகாத்து, எல்லாவற்றிலும் உறுதுணையாக இருந்தனர். காஷ்மீர் எனக்கு இரண்டு சகோதரர்களை கொடுத்துள்ளது” என்று ஆரதி சரத் (பஹல்காம் தாக்குதலில் தந்தையை இழந்த பெண்) கூறியுள்ளார்.
-
Apr 25, 2025 12:34 IST
100% தேர்ச்சிப் பெறும் அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்!
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
-
Apr 25, 2025 12:17 IST
மேலும் ரூ. 1,000 கோடி முதலீடு செய்யும் சாம்சங்
தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சாம்சங் தொழிலாளர் பிரச்னையை முதலமைச்சர் திறம்பட கையாண்டார் என்றும் கூறினார். அதிமுக ஆட்சியில் கியா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வராமல் வேறு மாநிலத்திற்கு சென்றதாகவும் விமர்சித்துள்ளார்.
-
Apr 25, 2025 12:15 IST
மயோனைஸ் தடை ஏன்?- அமைச்சர் விளக்கம்
மயோனைஸ் சாப்பிடும் குழந்தைகளுக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்ததால் ஓராண்டு தடை. மயோனைஸ் சாப்பிடும்போது உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கியுள்ளார்.
-
Apr 25, 2025 12:13 IST
அமைச்சர் பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து
வருமானத்திற்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து. குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை 6 மாதங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
-
Apr 25, 2025 12:07 IST
முதல்வருக்கு மே 3ல் பாராட்டு விழா - கோவி செழியன்
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்கல்வித் துறை சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 3ம் தேதி மாலை 5 மணிக்கு பாராட்டு விழா நடைபெறும். துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மீட்டெடுத்து மாநில சுயாட்சியை உறுதிப்படுத்திய முதல்வருக்கு விழா என்று அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்
-
Apr 25, 2025 11:22 IST
ஆளுநர் மாநாட்டை கண்டித்து சென்னையில் போராட்டம்
துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி நடத்துவது உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது என குற்றஞ்சாட்டி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணைவேந்தர்கள் மாநாட்டை குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார்.
-
Apr 25, 2025 10:54 IST
ஹீரோ ஆகலாம்; கலைஞராக முடியாது - அன்பில் மகேஸ்
ஒப்பனை செய்தால் யாரும் ஹீரோவாகலாம் ஆனால் யாராலும் கலைஞராக முடியாது. தேர்தலின்போது அளித்த 32 வாக்குறுதிகளில் 24 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது. காகங்கள் அமரும் சிலைக்கு மத்தியில் மேகங்கள் அமரும் சிலையாக வள்ளுவர் சிலை உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
-
Apr 25, 2025 10:38 IST
ஆளுநருக்கு எதிரான வழக்கில் வெற்றி - 4 வழக்கறிஞார்களுக்கு முதலமைச்சர் விருந்து!
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக வாதிட்டு வெற்றி பெற்றதற்கு 4 வழக்கறிஞார்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஏப்ரல் 27 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
-
Apr 25, 2025 10:33 IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு- ஜூலை 12 நடைபெறும் என அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3935 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்வுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 25, 2025 10:11 IST
ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த துணைவேந்தர்கள்
உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தன.
-
Apr 25, 2025 10:09 IST
இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
இந்திய எல்லைப் பகுதியில் உள்ள சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Apr 25, 2025 09:48 IST
பஹல்காம் தாக்குதல்: காயமடைந்தவர்களை சந்திக்க காஷ்மீர் புறப்பட்ட ராகுல்காந்தி
டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு புறப்பட்டார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. பஹல்காம் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க உள்ளார்.
-
Apr 25, 2025 08:56 IST
அமெரிக்காவுடன் இரு தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக, இந்தியா
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு பிறகு, இரு தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக, இந்தியா இருக்கும் என்று, அமெரிக்க நிதியமைச்சர், ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் – அக்டோபரில் முதல் ஒப்பந்தம் கையெழுத்து ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Apr 25, 2025 08:53 IST
வாடிகன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
போப் ஆண்டவர் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் பங்கேற்க வாடிகன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. அவருடன் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
-
Apr 25, 2025 08:50 IST
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்த பிறகு அதிமுக நடத்தும் முதல் மாவட்ட செய்லாளர்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Apr 25, 2025 08:46 IST
உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு: துணை குடியரசு தலைவர் பங்கேற்பு
மத்திய மாநில தனியார் பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு, உதகையில் இன்று நடைபெறுகிறது. உதகை ராஜ்பவனில் நடைபெறும் இந்த மாநாட்டை துணை குடியரசு தலைவர், ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்க அவர் சிறப்பு விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
-
Apr 25, 2025 08:44 IST
சென்னையில் இன்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம்
சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சி பணிகள், தெகுதி பணிகள் தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Apr 25, 2025 07:58 IST
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிசூடு: இந்தியா பதிலடி
இந்திய எல்லை பகுதியில் சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் துப்பாக்கிசூடு நடத்தி வருகிறது. இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Apr 25, 2025 07:23 IST
இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி இன்று காஷ்மீர் பயணம்
இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு செல்கிறார். அங்கு பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற பகுதியை பார்வையிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், பதற்றமான சூழல் நிலவி வருவதால், ராணுவ தளபதியின் இந்த பயணம், முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
Apr 25, 2025 07:20 IST
வீட்டை வாடகைக்கு எடுத்து குட்கா குடோனாக பயன்படுத்திய நபர் கைது
சென்னை புளியந்தோப்பு பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைக்கும் குடோன்களாக மாற்றி விற்பனை செய்து வந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட புருசோத்தமன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.