/indian-express-tamil/media/media_files/2025/04/27/2MsfIAOiqhBu4Xw2pNoG.jpg)
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ91.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Apr 26, 2025 20:12 IST
ஓடுதளத்தில் விமானத்தின் டயர் வெடித்து விபத்து
சென்னையில் இருந்து 166 பயணிகளுடன் மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் டயர், ஓடுதளத்திலேயே வெடித்து விபத்து ஏற்பட்டது. எனினும், விமானியின் சாமர்த்தியத்தால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். பழுதடைந்த விமானத்தின் டயர் மாற்றப்பட்டு புறப்பட்டுச் செல்ல சுமார் 2 மணி நேரம் ஆனது.
-
Apr 26, 2025 19:30 IST
தெலங்கானாவில் தீ விபத்து - 30 குடிசைகள் எரிந்து சாம்பல்
தெலங்கானா மாநிலம், குட்லூரு கிராமத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. மேலும், ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
Apr 26, 2025 18:30 IST
மகாராஷ்டிராவில் 5,000 பாகிஸ்தானியர்கள்: 1000 பேர் உடனடியாக வெளியேற உத்தரவு
மகாராஷ்டிராவில் 5,000 பாகிஸ்தானியர்கள் வசித்து வருவதாகவும், அதில் 1000 பேர் குறுகிய கால விசாக்களில் வந்தவர்கள் என்றும், மத்திய அரசின் உத்தரவுப்படி நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிர அமைச்சர் யோகேஷ் கதம் தெரிவித்துள்ளார். இதில் சிலர் கடந்த 8-10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகின்றனர், சிலர் திருமணமானவர்கள், சிலர் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளா.
மெலும் எனது மதிப்பீட்டின்படி, 4,000 நீண்ட கால விசாக்கள் இருக்கலாம், அவற்றில் 1,000 சார்க் விசாக்கள், திரைப்பட வேலை, மருத்துவம், பத்திரிகை, தனிப்பட்ட வேலைக்காக மாநிலத்திற்கு வந்தவர்கள். குறுகிய கால விசாக்கள் உள்ளவர்கள் ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் மருத்துவ விசாக்கள் உள்ளவர்கள் வெளியேற இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கதம் கூறினார். -
Apr 26, 2025 18:27 IST
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தை சந்தித்த மராட்டிய முதல்வர்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட கவுஸ்துப் கண்போட் மற்றும் சந்தோஷ் ஜக்தலே ஆகியோரின் குடும்பத்தினரை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சனிக்கிழமை பிற்பகல் புனேவில் சந்தித்தார்.
அவர் முதலில் கோந்த்வாவில் உள்ள கண்போட்டின் வீட்டிற்குச் சென்று, வடக்கு யூனியன் பிரதேசத்தில் நடந்த தாக்குதலில் இருந்து தப்பிய புனேகரின் மனைவி சங்கீதாவிடம் பேசினார். 'ஃபர்சான்' (சிற்றுண்டி) வியாபாரம் வைத்திருந்த கண்போட், தனது மனைவி சங்கீதா மற்றும் நெருங்கிய நண்பர் சந்தோஷ் ஜக்தலேவின் குடும்பத்தினருடன் காஷ்மீருக்குச் சென்றிருந்தார்.
கன்போட்டைச் சந்தித்த பிறகு, ஃபட்னாவிஸ் கார்வேநகரில் உள்ள ஜக்டேலின் இல்லத்திற்குச் சென்று, ஜக்டேலின் மகள் அசவாரி மற்றும் மனைவி பிரதிபாவிடம்பேசினார். ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேரில் ஜக்டேல் மற்றும் கண்போட் ஆகியோர் அடங்குவர் . -
Apr 26, 2025 18:00 IST
சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டாம்: முதல்வர் உமர் அப்துல்லா
சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளின் பயத்தை அவர் புரிந்துகொண்டாலும், சுற்றுலாப் பயணிகள் வருவதை நிறுத்தினால், அது எதிரிகளின் வெற்றியாகச் மாறிவிடும் என்று அவர் கவலைப்படுவதாக கூறினார். ஜம்மு காஷ்மீரில் இருந்து சுற்றுலாப் பயணிகளை விரட்டுவதே தாக்குதலுக்குப் பின்னால் உள்ள முக்கிய நோக்கம் என்பது தெளிவாகிறது. தாக்குதல் வகுப்புவாதமாக மாறிவிட்டதா என்பது குறித்து, மதத்தைப் பொருட்படுத்தாமல் மாநில மக்கள் தாக்குதலுக்கு எதிராக எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்று அப்துல்லா கூறினார்.
-
Apr 26, 2025 17:36 IST
தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்: சி.எஸ்.கே பயிற்சியாளர்
ஐபிஎல் ஏலத்தில் திறமையான வீரர்களை அடையாளம் காணத் தவறிவிட்டதாக சென்னை அணியின் அணியின் பயிற்சியாளர் ஒப்புதல். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் மிக மோசமான செயல்பாட்டுக்கு பொறுப்பேற்பதாகவும் அறிவித்துள்ளார்.
-
Apr 26, 2025 16:50 IST
புஸ்ஸி ஆனந்த் காயம்
கோவையில் தவெக பூத் கமிட்டி கூட்டத்தில் நெரிசலில் சிக்கி தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் காலில் காயம்
காயமடைந்த ஆனந்துக்கு சிகிச்சையளிக்க சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்துள்ளது
-
Apr 26, 2025 16:48 IST
இரவு 7 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இன்று இரவு 7 மணி வரை தென்காசி, திருநெல்வேலி மிதமான மழைக்கும், கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம். தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
-
Apr 26, 2025 16:22 IST
2026 தேர்தலில் வெற்றி எங்களுக்குத்தான்- தங்கம் தென்னரசு
தேர்தல் நேரத்தில் மட்டும்தான் கூட்டணி என எஸ்.பி.வேலுமணி சொன்னதை பாஜக குறித்து வைக்க வேண்டும். 2026 தேர்தலில் யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுங்கள், வெற்றி எங்களுக்குத்தான்"
- அமைச்சர் தங்கம் தென்னரசு -
Apr 26, 2025 15:28 IST
தமிழக பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது: தங்கம் தென்னரசு
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, 4 ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத அளவில் சீராக உள்ளது. 7.8 சதவீதமாக இருந்த தமிழக பொருளாதார வளர்ச்சி, தற்போது 9.69 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 80 ஆயிரம் பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்க அரசு திட்டம்
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு நிச்சயம் எட்ட முடியும்.
- அமைச்சர் தங்கம் தென்னரசு
-
Apr 26, 2025 15:24 IST
காஷ்மீரில் மலையேற்றத்திற்கு முழுமையாக தடை
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுவதால் மலையேற்றத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
-
Apr 26, 2025 15:15 IST
போப் பிரான்சிஸின் அரசு இறுதிச் சடங்கில் முர்மு
ஏப்ரல் 21 அன்று காலமான புனித போப் பிரான்சிஸின் அரசு இறுதிச் சடங்கில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிற உலகத் தலைவர்களுடன்
#WATCH | Vatican City | President Droupadi Murmu, along with other world leaders, attends the state funeral of His Holiness Pope Francis, who passed away on April 21.
— ANI (@ANI) April 26, 2025
(Source: US Network Pool via Reuters) pic.twitter.com/3ECVRfRL8H -
Apr 26, 2025 14:53 IST
போப் பிரான்சிஸ் இறுதிப்பயணம்: டிரம்ப், மனைவி பங்கேற்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலனியாவுடன் பங்கேற்றுள்ளார்.
ஜோ பைடன், ஜெலன்ஸ்கி, கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட உலக தலைவர்கள், இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, மத்திய அமைச்சர்கள் கிரண்ரிஜ்ஜு, ஜார்ஜ் குரியன் ஆகியோர் பங்கேற்பு
-
Apr 26, 2025 14:51 IST
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 26, 2025 14:26 IST
போப் பிரான்சிஸ் உடல் சற்று நேரத்தில் நல்லடக்கம்
மறைந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல் சற்று நேரத்தில் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. போப் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்திற்கு அருகே கல்லறை தயார் செய்யப்பட்டுள்ளது.
-
Apr 26, 2025 14:14 IST
“தொகுதி மேம்பாட்டு நிதி - அரசே ஏற்கும்”
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடிக்கான 18% ஜிஎஸ்டி வரியை இனி தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Apr 26, 2025 13:49 IST
காஷ்மீரில் மலையேற்றத்திற்கு தடை
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுவதால் மலையேற்றத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
-
Apr 26, 2025 13:47 IST
பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரர் அல்ல - கனிமொழி
பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க மாட்டார்; ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்குபவன்தான் சுயமரியாதைக்காரன். ஆண், பெண், நிறம், பொருளாதாரம் என பல்வேறு வகைகளில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன; மதவாதிகள் சிலர் தாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உடைக்கக் கூடாது என நினைக்கின்றனர்; தவறான அரசியல் மூலம் தமிழ்நாட்டில் சாதி என்பது மெல்ல நுழைகிறது; அதை தவிர்க்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
-
Apr 26, 2025 13:23 IST
தமிழகத்தில் மே 2 வரை மழைக்கு வாய்ப்பு
"தமிழகம், புதுச்சேரியில் மே 2ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு" "ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்" என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 26, 2025 13:22 IST
'காவல்' பட இயக்குனர் நாகேந்திரன் காலமானார்
‘காவல்' பட இயக்குனர் நாகேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார் நெருங்கிய நண்பனை சட்டென இழந்ததால், நெஞ்சம் கலங்குகிறது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
Apr 26, 2025 13:11 IST
"பேரவையில் நையாண்டி செய்யக்கூடாது" - துரைமுருகன்
கேள்வி கேட்பதற்காக கையை தூக்கித் தூக்கி கை வலிப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்த அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி. சட்டமன்ற உறுப்பினர்கள் அவை மரபை காத்து பேச வேண்டும், நையாண்டி செய்யக் கூடாது அவை முன்னவர் துரைமுருகன் கண்டித்துள்ளார்.
-
Apr 26, 2025 12:45 IST
நடுநிலையான விசாரணைக்கு நாங்கள் தயார் - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
"பஹல்காம் தாக்குதல், பழி போடும் விளையாட்டிற்கான மற்றொரு உதாரணமாகி உள்ளது; இது முடிவுக்கு வர வேண்டும்; எனவே ஒரு பொறுப்பான நாடாக, இவ்விவகாரம் தொடர்பாக நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு நாங்கள் தயார்" சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தான் தலையீடு இருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
-
Apr 26, 2025 12:35 IST
முறையான பாதுகாப்பு கொடுக்கப்படுவதில்லை - எடப்பாடி பழனிசாமி
"கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தது, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும், முறையான பாதுகாப்பு கொடுக்கப்படுவதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகள் தொடர்கதையாகி விட்டன” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
Apr 26, 2025 12:26 IST
கடன் வழங்கும் நிறுவனங்கள், வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா!
தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். “கடன் வழங்கும் நிறுவனங்கள் அதனை வசூலிக்க முறையற்ற வழியை நாடுகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது!” என்று கூறியுள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
-
Apr 26, 2025 12:25 IST
முன்னாள் MLAக்களுக்கான ஓய்வூதியம் உயர்வு
முன்னாள் MLAக்களுக்கான ஓய்வூதியம் ரூ.30,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்வு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடும்ப ஓய்வூதியம் ரூ.15,000-ல் இருந்து ரூ.17,500 ஆக உயர்த்துவதாக தெரிவிப்பு. இம்மாதம் முதல் இந்த ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வருகிறது
-
Apr 26, 2025 12:17 IST
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் - அனந்த் அம்பானி நியமனம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஆனந்த் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோரை நிர்வாகமற்ற இயக்குநர்களாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனந்த் அம்பானி ரிலையன்சின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வணிகம் மற்றும் பிற துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். ரிலையன்ஸ் அறக்கட்டளையிலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் உள்ளன.
-
Apr 26, 2025 12:11 IST
51,000 பணி நியமன கடிதத்தை வழங்கினார் மோடி
அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட 51,000 பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி. 51,236 இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை காணொளி மூலம் வழங்கினார் பிரதமர் மோடி; நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்ற 15ஆவது வேலைவாய்ப்புத் திருவிழாவில் மோடி பங்கேற்கவுள்ளார்.
-
Apr 26, 2025 12:07 IST
ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?
பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை ரகுபதி தாக்கல் செய்தார். உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான மசோதாவை செந்தில் பாலாஜி தாக்கல் செய்வதாக இருந்தது; செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நிலையில் ரகுபதி தாக்கல் சட்டப்பேரவையின் இறுதி நாளன்றுதான் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சட்டமாகும்
-
Apr 26, 2025 12:02 IST
கடலூர் நிலத்தடி நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பைவிட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் அப்பகுதியில் மனிதர்கள் வாழ முடியாத நிலை உருவாகியுள்ள சூழலில், மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது கவலையளிக்கிறது.
என்எல்சியின் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களால் அப்பகுதியில் வாழும் மக்களின் உடல் நலனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டிருந்ததன் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வானதிராயபுரம் பகுதியில் அனுமதிக்கப்பட்டதை விட 62 மடங்கும், பக்கிங்காம் கால்வாய் பகுதியில் அதிக அளவாக 115 மடங்கும் கூடுதலாக பாதரசம் இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியும் என்.எல்.சியால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தப்பவில்லை. அந்த ஏரியில் உள்ள நீரிலும் பாதரசம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. காரணம், கடந்த 2023-ம் ஆண்டில் பூவுலகின் நண்பர்கள் என்ற தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் வடக்கு வெள்ளூர் என்ற கிராமத்தில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பது தெரியவந்திருந்தது. ஆய்வு நடத்தப்பட்ட 90% வீடுகளில் உள்ளவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறுநீரகம் தோல் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதும் உறுதியாகியிருந்தது. அவை இப்போது இந்த ஆய்வின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையங்களால் கடலூர் மாவட்ட மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தெந்த வழிகளில் எல்லாம் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கடலூர் மாவட்டம் முழுவதும் சுரங்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் என்எல்சியால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு ஆகும்.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதைக் காரணம் காட்டி தான் அந்த ஆலையை தமிழக அரசு மூடியது. ஆனால், சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல் நலத்திற்கும் ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய தீங்குகளை விட பலமடங்கு அதிக கேட்டை என்எல்சி ஏற்படுத்தியிருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தமிழக அரசு இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா? என்பது தான் எனது வினாவாகும்.
தனியார் தொண்டு நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் என்.எல்.சியால் பெரும் தீமைகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றில் நம்பிக்கை இல்லை என்றால், சென்னை ஐஐடி மூலம் கூட தமிழக அரசு மீண்டும் ஒருமுறை ஆய்வு நடத்திக் கொள்ளலாம். அந்த ஆய்விலும் என்எல்சியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால் அதனடிப்படையில் என்எல்சி நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
Apr 26, 2025 11:38 IST
கல்விதான் நமக்கான ஆயுதம்; எந்த இடர் வந்தாலும் அதை கைவிட்டு விடக் கூடாது - ஸ்டாலின் பேச்சு
கல்விதான் நமக்கான ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டு விடக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள். மாணவர்கள் மீதும், நான் முதல்வன் திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கை பலன் அளித்துள்ளது. நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23வது இடம் பெற்று சாதனை படைத்தார். இந்தியாவில் எங்கு பணியாற்றினாலும் சமத்துவம், சமூகநீதி, நேர்மையை மனதில் வைத்து மக்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Apr 26, 2025 11:05 IST
சமந்தாவை பாராட்டிய சுதா கொங்கரா
'இறுதி சுற்று', 'சூரரை போற்று' உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா. இவர் தற்போது சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வரும் 'பராசக்தி' படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கிடையில், சென்னையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் சுதா கொங்கரா கலந்து கொண்டார். அங்கு நடிகை சமந்தாவுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் சமந்தா குறித்து சுதா பேசினார். அவர் கூறுகையில், 'சமந்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய தைரியமும், எதிர்த்து போராடும் மனப்பான்மையும் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவருடன் ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. அது விரைவில் நடக்கும், "என்றார்
-
Apr 26, 2025 10:15 IST
இன்றைய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.72,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9,005க்கும், வெள்ளி விலை ஒருகிராம் ரூ.1 உயர்ந்து ரூ.112க்கும், ஒருகிலோ ரூ.1,12,000க்கும் விற்பனையாகிறது.
-
Apr 26, 2025 10:03 IST
பராமரிப்பு பணி காரணமாக ஏ.சி.மின்சார ரயில் சேவை இன்று ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (26-ந்தேதி) மதியம் இயக்கப்படும் ஏ.சி.மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில், "பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மதியம் 3.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ஏ.சி. மின்சார ரெயில், மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு கடற்கரை செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது." என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
Apr 26, 2025 09:31 IST
பஹல்காம் தாக்குதல் - பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். குல்காம் மாவட்டத்தில் பதுங்கி இருந்த 2 பேரை பாதுகாப்புப் படை கைது செய்தது. தீவிரவாதிகளுக்கு உதவிய மேலும் 2 பேரின் வீடுகளை ராணுவம் இடித்து தகர்த்தது.
-
Apr 26, 2025 08:54 IST
இந்தியாவை விட்டு வெளியேறும் பாகிஸ்தானியர்கள்!
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள்ளாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நேற்று முன்தினம் இந்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக ஏராளமான பாகிஸ்தானியர்கள் வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.
-
Apr 26, 2025 08:53 IST
நேஷனல் ஹெரால்டு வழக்கு: ED-க்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது. குற்றப்பத்திரிகையில் உள்ள சில குறைபாடுகளை சரிசெய்து, சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது
-
Apr 26, 2025 08:40 IST
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
இன்று காலை 10 மணிவரை தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலை 10 மணிவரை தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, திருநெல்வேலி, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 26, 2025 07:58 IST
எல்லையில் பாக். மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று இரவு அத்துமீறியுள்ளது. நள்ளிரவில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் சரியான பதிலடி கொடுத்துள்ளது. இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய தரப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 26, 2025 07:22 IST
ஐபிஎல்: கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு (சனிக்கிழமை) நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி (குஜராத், லக்னோ, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு அணிக்கு எதிராக), 3 தோல்வியுடன் (ராஜஸ்தான், ஐதராபாத், பெங்களூரு அணிகளிடம்) 5-வது இடத்தில் இருக்கிறது.
-
Apr 26, 2025 07:20 IST
மதுரை-கச்சிக்குடா சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிக்குடாவுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சேவை வருகிற ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கச்சிக்குடாவில் இருந்து திங்கட்கிழமை தோறும் மதுரைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.07191) வருகிற 12-ந் தேதி முதல் ஜூன் மாதம் 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து புதன்கிழமை தோறும் கச்சிக்குடாவுக்கு இயக்கப்படும் ரெயில் (வ.எண்.07192) வருகிற 14-ந் தேதி முதல் ஜூன் மாதம் 4-ந் தேதி வரை இயக்கப்படும்.
-
Apr 26, 2025 07:13 IST
போப் ஆண்டவர் உடல் இன்று அடக்கம்
உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த போப் ஆண்டவர் உடல் இன்று (சனிக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று, மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் ஆண்டவரின் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடக்கிறது.
-
Apr 26, 2025 07:11 IST
பராமரிப்பு பணி- ஏ.சி.மின்சார ரயில் சேவை ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மதியம் 3.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ஏ.சி. மின்சார ரயில், மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு கடற்கரை செல்லும் ஏ.சி.மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.