Chennai News Updates: ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dpi

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு, ரூ100.80-க்கும், டீசல், ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ91.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

  • May 26, 2025 22:22 IST

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் முக்கிய பணியிடங்கள் மாற்றம்

    பள்ளிக்கல்வித் துறையில் தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாடநூல் கழக செயலாளர் குப்புசாமி, தனியார் பள்ளிகள் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உஷா ராணி, பாடநூல் கழக செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



  • May 26, 2025 22:02 IST

    ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை

    தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நாளில் இருந்து முழுமையாக மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பள்ளிகளை தயார் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பள்ளி வளாகச் சுத்தம்: பள்ளி வளாகம் முழுவதையும் சுத்தப்படுத்தப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், கருப்பு பலகைகளை மையிட்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    நன்னெறி வகுப்புகள்: மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை நன்னெறி வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும். இது மாணவர்களின் ஒழுக்க வளர்ச்சிக்கு உதவும்.

    விழிப்புணர்வு செயல்பாடுகள்: 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் போட்டித் தேர்வுகள் குறித்து பேச்சு, கவிதை, துண்டுப் பிரசுரம், சுவரொட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும்.

    மதிய உணவு திட்டம்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் சரியானதாகவும், சுகாதாரமானதாகவும், தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    மதிய உணவு இடைவேளை: மதிய உணவு இடைவேளை முடிந்து 20 நிமிடங்களுக்கு மாணவர்கள் கதைப்புத்தகங்கள் மற்றும் பிற பருவ இதழ்களை படிக்க வைக்க வேண்டும்.
    ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துவதே இந்த புதிய நெறிமுறைகளின் முக்கிய நோக்கம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.



  • Advertisment
  • May 26, 2025 20:52 IST

    தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

    தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • May 26, 2025 20:18 IST

    அ.தி.மு.க இருக்கும் வரை ஸ்டாலின் கனவு நிறைவேறாது - இ.பி.எஸ் காட்டம்

    சின்னசேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு: “2026 தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கனவு காண்கிறார். அ.தி.மு.க இருக்கும் வரை முதல்வர் ஸ்டாலின் கனவு நிறைவேறாது. வாரிசு அரசியல், மன்னர் ஆட்சிக்கு 2026 சட்டப்பேரவை தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று காட்டமாகப் பேசினார்.



  • Advertisment
    Advertisements
  • May 26, 2025 19:19 IST

    இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

    நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.



  • May 26, 2025 19:18 IST

    யூடியூபர் மல்ஹோத்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

    பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து ஹிசார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது மின்னணு சாதனங்களின் தடயவியல் சான்றுகளுக்குப் பிறகு, அவரின் மொபைல் போன் மற்றும் மடிக்கணினியிலிருந்து 12டிபி-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் தரவை மீட்டெடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.



  • May 26, 2025 19:17 IST

    ஐ.பி.எல்.: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு

    ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டன. இருப்பினும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை பிடிப்பதற்கு இந்த ஆட்டத்தின் முடிவு அவசியமாகும். இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாசில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.



  • May 26, 2025 19:16 IST

    ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை

    இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 148 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 1 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 173 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 572 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 106 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 591 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 455 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 176 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.



  • May 26, 2025 18:32 IST

    மாநிலங்களவைத் தேர்தல்: ஜூன் 2 கமல் மனுத்தாக்கல்

    தமிழ்நாட்டில் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடியவுள்ளதால் ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் ஜூன் 2-ல் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 2-ல் தேர்தல் அறிவிக்கை, ஜூன் 9 வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • May 26, 2025 18:31 IST

    கால்பந்து போட்டியில் தமிழக மாணவிகள் வெள்ளி பதக்கம்

    பீகாரில் நடைபெற்ற தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு கால்பந்து போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவிகள் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.



  • May 26, 2025 18:16 IST

    ஜார்க்கண்ட்: மாவோயிஸ்ட் உயர்மட்ட தளபதி சுட்டுக்கொலை

    ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் உயர்மட்ட தளபதி மணீஷ் யாதவ் சுட்டுக்கொல்லப்பட்டார். மணீஷ் யாதவ் தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். 10 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் குந்தன் கெர்வார் கைது செய்யப்பட்டார்.



  • May 26, 2025 17:46 IST

    ”தமிழ்நாட்டில் விரைவில் கூடுதல் முதல்வர் படைப்பகங்கள்”

    தமிழ்நாட்டில் விரைவில் கூடுதல் முதல்வர் படைப்பகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே உள்ளதுபோல வை-பை, லேப்டாப் வசதியுடன் கூடுதல் படைப்பகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப மாணவர்களை அழைத்துச் செல்லும் வாயிற்கதவுதான் முதல்வர் படைப்பகம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்



  • May 26, 2025 17:42 IST

    மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,200 விலை சரிவு

    ஈரோட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,200 சரிந்து ரூ.13,700க்கு விற்பனையானது. கடந்த வாரத்தில் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000 விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.13,700க்கு விற்பனையாகிறது.



  • May 26, 2025 17:41 IST

    தமிழகத்தில் இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழை

    அடுத்த 3 மணி நேரத்துக்கு இரவு 7 மணி வரை தமிழ்நாட்டின் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 26, 2025 17:27 IST

    பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மே 30-ல் விஜய் பாராட்டு

    10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மே 30-ல் விஜய் பரிசளிக்கிறார்.முதல்கட்டமாக மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில், மாணவ-மாணவியருக்கு விஜய் பரிசளிக்கிறார்.முதல்கட்டமாக 88 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 2 கட்டங்களாக பரிசளிப்பு விழா நடந்த நிலையில் இம்முறை 3 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

     



  • May 26, 2025 16:46 IST

    நீட் முதுநிலை தேர்வு: விரைவில் உச்சநீதிமன்றம் விசாரணை

    நீட் முதுநிலை தேர்வை 2 ஷிப்டுகளில் நடத்த உத்தரவிடுவதற்கு எதிரான மனுவை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன் முறையிடப்பட்டது

    முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம் நடப்பு வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளது.

    நீட் முதுநிலை தேர்வு ஜூன் 15ம் தேதி 2 ஷிப்டுகளாக நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.



  • May 26, 2025 16:46 IST

    தடை நீட்டிப்பு

    குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை ஓராண்டு நீடித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

    2026 மே 23 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.



  • May 26, 2025 16:40 IST

    ‘மார்கன்’ பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா- வித்தியாசமான கெட் அப்பில் வந்த விஜய் ஆண்டனி

    Credit: Sun News 



  • May 26, 2025 16:18 IST

    நீலகிரியில் தொடரும் கனமழை

    நீலகிரியில் பெய்துவரும் கனமழையால் இதுவரை 43 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாகவும், 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல்.

    மரம் முறிந்து விழுந்ததில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிப்பு



  • May 26, 2025 15:59 IST

    நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: உச்சநீதிமன்றம் மறுப்பு

    கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான விசாரணை அறிக்கையை ஆர்டிஐ சட்டத்தில் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு



  • May 26, 2025 15:17 IST

    கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    கேரளாவில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நாளை (மே 27) அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மலப்புரம், திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • May 26, 2025 14:33 IST

    பா.ஜ.க தேசிய தலைமை கூறுவது போன்று முடிவு செய்வோம் - நயினார் நாகேந்திரன்

    மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க-விற்கு உறுதியாக ஆதரவு அளிப்போம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். எனினும், பா.ஜ.க தேசிய தலைமை கூறுவதன் அடிப்படையில் முடிவு செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • May 26, 2025 14:30 IST

    தமிழகத்தில் மே 30 வரை கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் மே 30 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை (மே 27) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், மே 30-ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.



  • May 26, 2025 14:00 IST

    விஜய்யுடன் கூட்டணியா? பவன் கல்யாண் பதில்

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் தற்போது வரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.



  • May 26, 2025 13:39 IST

    நாடு முழுவதும் 1009 பேருக்கு கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை  தகவல்

    நாடு முழுவதும் 1009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதில் டெல்லியில் மட்டும் 104 பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் அங்கு 99 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • May 26, 2025 13:13 IST

    ஜூன் 19இல் தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல்

    தமிழ்நாட்டில் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடியவுள்ளதால் ஜூன் 19இல் மாநிலங்களவை தேர்தல் மாநிலங்களவை தேர்தலுக்கு ஜூன் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு; ஜூன் 2இல் தேர்தல் அறிவிக்கை, ஜூன் 9 மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 



  • May 26, 2025 12:43 IST

    சிறப்பு விருந்தினராக பவன் கல்யாண் பங்கேற்பு

    சென்னையில் பாஜக சார்பில் நடைபெறும் “ஒரே நாடு ஒரே தேர்தல்'' தொடர்பான கருத்தரங்கு. ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு வேல்-ஐ பரிசளித்த தமிழிசை சௌந்தரராஜன்



  • May 26, 2025 12:35 IST

    டெல்லியில் குடிசைப் பகுதி இடிக்கப்படாது: முதல்வர்

    டெல்லியில் ஒரு குடிசை கூட இடிக்கப்படாது; குடிசைப் பகுதிகளில் வடிகால், கழிப்பறை, பூங்கா வசதிகளை ஏற்படுத்த ரூ.700 கோடி ஒதுக்கீடு டெல்லி மக்களின் நலன், குடிசைவாசிகளின் நலனுக்காக அரசாங்கம் செயல்படுகிறது என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார். 



  • May 26, 2025 12:18 IST

    ரூ.53,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்- மோடி தொடங்கி வைப்பு

    குஜராத்தில் ரூ.53,000 கோடி மதிப்பு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் தாஹோத்தில் 9,000 குதிரைத் திறன் கொண்ட ரயில் எஞ்சினை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ரயில் எஞ்சினை நாட்டுக்கு அர்ப்பணித்தார்



  • May 26, 2025 12:13 IST

    கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை - மாநகராட்சிக்கு உத்தரவு

    கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்க கோரி விண்ணப்பம்.  4 வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு. அதுவரை கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • May 26, 2025 11:58 IST

    ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி- 3 பேர் கைது

    சென்னை: திருவான்மியூரில் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து நூதன கொள்ளை முயற்சி; கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட உ.பி.யை சேர்ந்த குல்தீப் சிங், சுமித் யாதவ், பிரிஜ் பான் கைது செய்யப்பட்டுள்ளனர். 



  • May 26, 2025 11:43 IST

    மும்பையில் வரலாறு காணாத மழை - 107 ஆண்டுக்குப் பின் மே மாதத்தில் 135 மி.மீ மழை பதிவு 

    மும்பையில் இன்று 135 மிமீ மழை பெய்து, மே மாதத்திற்கான 107 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது. இன்று திங்கட்கிழமை மும்பையில் கனமழை போன்ற சூழ்நிலைகளும், கருமேகங்களும் ஏற்பட்டன. கொலாபாவில் உள்ள கடலோர ஆய்வகத்தில் காலை 8.30 மணி வரை 135 மிமீ மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாண்டாகுரூஸ் ஆய்வகத்தில் 33 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    ந்திய வானிலை ஆய்வு மையம் பதிவுகளின்படி, கொலாபா ஆய்வகத்தில் மே மாதத்தில் 295 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது 1918 மே மாதத்தில் பதிவான 279.4 மிமீ மழையின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. சாண்டாகுரூஸ் நிலையத்தில் இந்த மாதம் இதுவரை 197.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. மே மாதத்தில் இதுவரை அதிகபட்சமாக 2000 ஆம் ஆண்டில் 387.8 மிமீ மழை பதிவாகியுள்ளது.



  • May 26, 2025 11:40 IST

    கடலில் கவிழ்ந்த கப்பல்- பேரிடர் மீட்புக் குழு விரைவு

    கேரளா: கொச்சி அருகே கடலில் கவிழ்ந்த கப்பலை மீட்க அரக்கோணம் பேரிடர் மீட்பு படையில் இருந்து 30 பேர் கொண்ட குழு கொல்லம் சென்றது கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கொல்லம் அருகே கரை ஒதுங்கிய நிலையில் மீட்பு பணிக்காக விரைந்து வந்தனர். 



  • May 26, 2025 11:38 IST

    நகர்ப்புற நிதிப் பத்திரங்களை பட்டியலிடும் விழா

    நகர்ப்புற நிதிப் பத்திரங்களை பட்டியலிடும் விழாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் தேசிய பங்குச் சந்தையில் ரூ.200 கோடி மதிப்பு நகர்ப்புற நிதிப் பத்திரங்களை பட்டியலிடும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவை மணி ஒலித்து முதல்வர் தொடங்கி வைத்தார்



  • May 26, 2025 11:35 IST

    ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்: நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

    ரிசர்வ் வங்கி விதிமுறைகளை திரும்பப் பெற மத்திய நிதி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், "எளிய மக்கள், சிறு வணிகர்களின் கடைசி புகலிடத்துக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது. கந்துவட்டிக்காரர்கள், நகைக் கடன் வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தள்ளும் நிலை. கடன் அளவு குறைப்பு, பயன்பாட்டுச் சான்று, வருமான தகுதி நிபந்தனை என கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுமாறு கோரி ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.



  • May 26, 2025 11:29 IST

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: திருவனந்தபுரம் வானிலை மையம் 

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது என திருவனந்தபுரம் வானிலை மையம் அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.



  • May 26, 2025 11:14 IST

    சென்னை டைடல் பார்க் சாலை பள்ளம் - 90% பணிகள் நிறைவு

    சென்னை டைடல் பார்க் சாலையில் பள்ளம் ஏற்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், மீதமுள்ள
    பணிகள் விரைவில் முடிக்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளம் ஏற்பட்டதற்கு மெட்ரோ பணி காரணம் 
    இல்லை என்றும் தெரிவித்துள்ளது. 

    விசாரணைக்கு பிறகே பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் போலீசார் கூறியுள்ளார்கள். 



  • May 26, 2025 10:40 IST

    சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் - தமிழக அரசு உத்தரவு 

    சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி துணை ஆணையர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 



  • May 26, 2025 10:18 IST

    வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

    வங்கக் கடலில் நாளை (மே 27) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகலாம் என்றும், அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம் என்றும் கூறப்பட்டுள்ளது



  • May 26, 2025 10:16 IST

    இன்றைய தங்கம் விலை 

    இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8950க்கும், வெள்ளி விலை ஒருகிராம் ரூ.111க்கும், ஒருகிலோ ரூ.1,11,000க்கும் விற்பனையாகிறது.



  • May 26, 2025 10:14 IST

    சென்செக்ஸ் 750 புள்ளிகளுக்கு மேல் உயர்வு 

    தொடக்க நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 765 புள்ளிகள் உயர்ந்து 82,486 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 215 புள்ளிகள் உயர்ந்து 25,068 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.



  • May 26, 2025 10:00 IST

    திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம். 

    திருப்பதியில், பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், சுமார் 18 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், கடந்த 2 நாளில் 1.80 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம், உண்டியல் வருவாய் ரூ.6.90 கோடியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,



  • May 26, 2025 09:23 IST

    உணவு வாங்க முண்டியடிக்கும் அவலம்

    காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 30 பேர் மரணமடைந்த நிலையில், 77 சதவிகித பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதனால் காசாவில் உணவுக்காக பாலஸ்தீனர்கள் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.



  • May 26, 2025 08:52 IST

    கப்பலோடு கடலில் மூழ்கி கொல்லம் பகுதியில் கரை ஒதுங்கிய கண்டெய்னர்

    கேரளா மாநிலம் கொச்சியில் கப்பலோடு கடலில் மூழ்கிய கண்டெய்னர்களில் ஒன்று கொல்லம் பகுதியில் கரை ஒதுங்கியது. ராதாபுரம் முகாமில் இருந்து ஆய்வாளர் கலையரசன் தலைமையில் 30 பேர் கொண்ட  மீட்புப்படையினர் கேரளா விரைந்தனர்



  • May 26, 2025 07:44 IST

    கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    கேரளாவில் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, கோட்டயம், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு  11 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.



  • May 26, 2025 07:39 IST

    சென்னையில் விமானத்தின் மீது லேசர் லைட் அடித்த மர்மநபர்: போலீஸ் விசாரணை

    துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் தரையிறங்க முயன்றபோது, சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, தற்போது விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்ததால் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • May 26, 2025 07:35 IST

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: மும்பை - பஞ்சாப் இன்று மோதல்

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் 69-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே 16 புள்ளிகள் பெற்றுள்ளதால் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காண இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.



  • May 26, 2025 07:32 IST

    தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மிதமான மழை பொழியக்கூடும். தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது,



Live Updates Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: