Chennai News Highlights: நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் - வானிலை மையம்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? இந்திய வானிலை மையம் தகவல்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • May 28, 2025 21:30 IST

    செபி அமைப்பின் முன்னாள் தலைவர் மாதபி பூச் மீதான புகார்களை முடித்து வைப்பு - லோக்பால் அமைப்பு உத்தரவு 

    செபி அமைப்பின் முன்னாள் தலைவர் மாதபி பூச் மீதான புகார்களை முடித்து வைத்து லோக்பால் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. மாதபி பூச் மீதான குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் அனுமானங்கள் அடிப்படையில் உள்ளன. அவை உறுதிப்படுத்தப்படவில்லை என லோக் பால் அமைப்பு கூறியுள்ளது.



  • May 28, 2025 20:48 IST

    தி.மு.க, பா.ஜ.க-வை தவிர யார் வந்தாலும் கூட்டணி - த.வெ.க நிர்வாகி ராஜ்மோகன்

    விஜய் கட்சிக்கு கடம்பூர் ராஜு, நயினார் நாகேந்திரன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்த நிலையில், த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன், “தி.மு.க, பா.ஜ.க-வை தவிர்த்து வேறு எந்த கட்சி  வந்தாலும் கூட்டணி அமைக்கத் தயார்; பாசிசத்தோடும் பாயாசத்தோடும் கூட்டணி கிடையாது என்பதில் உறுதி. எங்கள் கோட்பாடுகளை ஏற்று யார் வந்தாலும் அவர்களுடன் கூட்டணி வைக்கத் தயார்” என்று கூறியுள்ளார்.



  • Advertisment
  • May 28, 2025 20:45 IST

    ஜூன் 7-ம் தேதி பக்ரீத் கொண்டாட்டம் - தலைமை காஜி அறிவிப்பு

    இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை அடுத்த மாதம் ஜூன் 7-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • May 28, 2025 20:31 IST

    ராணிப்பேட்டை அருகே 16 வயது சிறுமி கொலை

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே 10-ம் வகுப்பு மாணவி குத்திக்கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட சிறுமியின் உறவினரான மற்றொரு 16 வயது சிறுமி வெட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை செய்த இளைஞரை சிறுமியின் உறவினர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



  • Advertisment
    Advertisements
  • May 28, 2025 19:48 IST

    கன்னட மொழி குறித்த கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

    கன்னட மொழி குறித்த கருத்துக்கு விளக்கம் அளித்த நடிகர் கமல்ஹாசன், “கன்னட மொழி குறித்து நான் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்கள் சொன்ன கருத்தையே நான் பகிர்ந்தேன். தமிழகத்தில் மேனன், ரெட்டி, கன்னட ஐயங்கார் என அனைவரும் முதலமைச்சராக இருந்துள்ளனர். கன்னட மக்கள் தக் லைஃப் படத்தை ஏற்றுக்கொள்வார்கள், அன்போடு சொன்னதற்கு மன்னிப்பு கேட்க தேவையில்லை” என்று கூறினார்.



  • May 28, 2025 19:26 IST

    அடுத்தட்டு மக்களுக்காகவும் சமூகநீதிக்காகவும் குரல் கொடுப்போம் - கவிஞர் சல்மா

    மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கவிஞர் சல்மா கூறியதாவது: “இந்த ஆட்சியின் சாதனைகளையும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும் அடுத்தட்டு மக்களுக்காகவும் சமூகநீதிக்காகவும் இந்த இயக்கத்தின் கொள்கைகளையும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மாநிலங்களவையில் குரல் கொடுப்போம்.” என்று கூறினார்.



  • May 28, 2025 19:17 IST

    தமிழ்தான் அகில உலகின் மூத்த மொழி; தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது - அன்புமணி ராமதாஸ்

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்: “அன்னைத் தமிழ்தான் அகில உலகின் மூத்த மொழி. தமிழில் இருந்துதான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி  ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது. இதன் மீது எவரும் வினா தொடுக்க முடியாது” என்று கூறினார்.



  • May 28, 2025 18:20 IST

    பாபநாசம்: 33 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே.புரம், வேம்பையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சென்று அட்டகாசம் செய்து வந்தன.  33 குரங்குகள் பாபநாசம் வனச்சரக வனப்பணியாளர்கள் மூலம் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் நல்ல முறையில் திரும்ப விடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



  • May 28, 2025 18:11 IST

    ம.நீ.ம செயற்குழு கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் இன்று கூடியது. இதில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 2-வது தீர்மானத்தில், மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல்ஹாசனுக்கு ஆதரவை வழங்கும்படி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • May 28, 2025 18:01 IST

    குமரி: ரூ. 5000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பணியாளர் கைது

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே புதிய வீடு கட்ட அனுமதி வழங்க ரூ. 5000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பணியாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். டிஎஸ்பி சால்வன் துரை தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.



  • May 28, 2025 17:50 IST

    பள்ளி விடுமுறை நிறைவு: 2,510 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    பள்ளி விடுமுறை நிறைவையொட்டி சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் விடுமுறை காரணமாக சொந்த ஊர் சென்ற மாணவர்கள் ஊர் திரும்ப உள்ளனர். இதை கருத்தில் கொண்டும், வார இறுதி விடுமுறையை கருத்தில் கொண்டும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 30, 31-ம் தேதிகளில் 2 ஆயிரத்து 510 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 



  • May 28, 2025 17:26 IST

    14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கடலூர், கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • May 28, 2025 17:15 IST

    கன்னியாகுமரி கடலோரங்களில் ஆட்சியர் நேரில் ஆய்வு

    கன்னியாகுமரி கடலோரங்களில் ரசாயன பொருட்கள் கரை ஒதுங்கியதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்கிறார். கொச்சி துறைமுகம் அருகே மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் இருந்த ரசாயனப் பொருட்கள் வெளியேறி குமரி கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கியதாக தகவல் வெளியானது.



  • May 28, 2025 17:12 IST

    கீரனூரில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தேர் வெள்ளோட்டம்!

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேர் அமைக்கப்பட்ட நிலையில், புதிய திருத்தேர் பிரதிஷ்டை மற்றும் வெள்ளோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உற்சாகத்துடன் தேரை இழுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.



  • May 28, 2025 16:59 IST

    நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பலி

    தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. உயிரிழந்த மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த மோகன் (60) என்பவரின் வீட்டைச் சுற்றி கிருமி நாசினி தெளிக்கவும், அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு தொற்று அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.



  • May 28, 2025 16:55 IST

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. மும்முறை தாண்டுதல் விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த பிரவின் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 16.09 மீ. தூரம் தாண்டி பிரவின் சித்ரவேல் வெள்ளிப்பதக்கம் வென்றார். 400 மீ. கலப்பு ஓட்டத்தில் இந்தியாவின் வெங்கடேசன் சந்தோஷ் விஷால் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர்



  • May 28, 2025 16:40 IST

    அண்ணா பல்கலை. வழக்கு தீர்ப்பு - விஜய் வரவேற்பு

    அண்ணா பல்கலை.மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கி ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தவெக வரவேற்கிறது என விஜய் தெரிவித்துள்ளார். .இந்த வழக்கில் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இன்னும் 10 மாதங்களில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி என்பதை நீதியின் பக்கம் நின்று, நெஞ்சுறுதி மிக்க மகளிர் பக்கம் நின்று தெரிவித்துக்கொள்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.



  • May 28, 2025 16:36 IST

    ஏமன் விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்

    இஸ்ரேலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று 7 ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திணா. இந்த ஏவுகணை, டிரோன்கள் இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பால் நடு வானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையம் மீது இஸ்ரேல் இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.



  • May 28, 2025 16:24 IST

    கமல் பேசியது உண்மை; சத்தியம் - சீமான் கருத்து

    கன்னட மொழி குறித்து கமல் பேசியது உண்மை; சத்தியத்திலும் சத்தியம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாமே தமிழில் இருந்து வந்த மொழிகள்தான். தன் வரலாற்றை அறிந்து கொள்ளாத, உண்மையை உணராத கூட்டம் அவரை எதிர்க்கிறது. கர்நாடகாவில் கமலுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.



  • May 28, 2025 16:23 IST

    தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் - திருமாவளவன்

    "தக் லைப்" இசைவெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் பேச்சை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை மொழியியல் வல்லுநர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். கன்னடம், மலையாளம் பேசுவோர் அந்த உண்மையை ஏற்க தயங்கலாம். ஆனால் வரலாறு இதுதான் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.



  • May 28, 2025 16:09 IST

    இந்தியர்களுக்கு விசா தேவையில்லை: பிலிப்பைன்ஸ் அரசு

    சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருகை தர விசா தேவையில்லை என பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, சுற்றுலா நோக்கங்களுக்காக மட்டும் 14 நாட்கள் வரை அங்கு தங்கலாம். விசா இல்லாத இந்த நுழைவை நீட்டிக்கவோ, வேறு வகையான விசாவாக மாற்றவோ முடியாது எனவும் பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளனர்.



  • May 28, 2025 16:04 IST

    4 மாநிலங்களில் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

    4 மாநிலங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்த போர்க்கால ஒத்திகையின்போது கட்டுப்பாட்டு அறை, வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பாடுகள் குறித்து சோதனை நடத்தப்பட உள்ளது. மேலும், மக்களை எச்சரிக்கும் வகையிலான சைரன் ஒலி, தீயணைப்பு, மீட்புக்குழுவினரின் செயல்பாடுகள், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • May 28, 2025 16:02 IST

    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

    நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,363-ஆக நிர்ணயம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சோளத்துக்கான [ஹைபிரிட்] குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.3,699ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேழ்வரகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.4,886ஆக நிர்ணயம் செய்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 13 வகை பருவமழை காலத்தில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.



  • May 28, 2025 15:30 IST

    மு.க.ஸ்டாலின் கோரிக்கை

    தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.
    இந்த வரைவு நெறிமுறைகள் கடன்களை தவறான வகைப்படுத்தலுக்கு வழிசெய்வதுடன், தணிக்கை தடைகளுக்கும் காரணமாக அமைந்து அதன் காரணமாக வங்கி மற்றும் கடனாளி இருதரப்பினருக்கும் பொறுப்பு அதிகரிக்கக் கூடும்" என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



  • May 28, 2025 14:57 IST

    கிரீஸ் நாட்டின் அதிகாரிகளுடன் கனிமொழி சந்திப்பு

    கிரீஸ், ஏதென்ஸ் | திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, கிரீஸ் நாட்டின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் டசோஸ் சட்சிவாசிலியூ மற்றும் பிற அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியது.



  • May 28, 2025 14:52 IST

    கமலுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்

    "தக் லைஃப்" இசைவெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் பேச்சை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது



  • May 28, 2025 14:26 IST

    பெரியார் பல்கலை. நிர்வாக குழு அமைத்து உத்தரவு

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க சிறப்பு ஆட்சி குழு கூட்டத்தில் நிர்வாக குழு அமைக்க உத்தரவு

    கல்லூரி கல்வி இயக்குனர் சுந்தரவள்ளி தலைமையில் நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது.



  • May 28, 2025 13:50 IST

    கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் - உதயநிதி ஸ்டாலின்

    மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ள கமலுக்கு அன்பு வாழ்த்துகள். கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கப்போவதை எண்ணி மகிழ்கிறோம்; தமிழ்நாட்டின் உரிமை, இந்திய அரசமைப்பை, பன்முகத்தன்மையை பாதுகாக்க கமல் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 



  • May 28, 2025 13:33 IST

    பெண்கள் பாதுகாப்பை எந்நாளும் உறுதிசெய்வோம் - முதல்வர்

    பெண்கள் பாதுகாப்பை எந்நாளும் உறுதிசெய்வோம். குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம் சட்டநீதியையும் - பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 



  • May 28, 2025 13:31 IST

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

    சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் உயிரிழப்பு. மறைமலைநகரை சேர்ந்த நபருக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு உறுதியானது; நேற்றிரவு வீட்டில் இருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 



  • May 28, 2025 12:59 IST

    பொள்ளாச்சி வழக்கு - நிவாரணம் வழங்கியது தமிழக அரசு

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்கியது தமிழக அரசு. பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் நிவாரணம். கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்த 85 லட்சம் ரூபாய் இழப்பீடு விரைவில் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  



  • May 28, 2025 12:42 IST

    பாடகி சுசித்ராவுக்கு எதிராக ஆர்த்தியின் தந்தை புகார்

    பாடகி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் ரவியின் மனைவியான ஆர்த்தியின் தந்தை புகார். ஆர்த்தி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் பேசுவதாக சுசித்ராவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார் புகார் அளித்துள்ளார். 



  • May 28, 2025 12:35 IST

    புதுச்சேரியில் மதுபானங்கள் விலை ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்வு

    புதுச்சேரியில் மதுபானங்கள் விலை ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்வு. பீர் வகைகள் ரூ.30 வரை விலை உயர்வு மதுபானங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக புதுச்சேரி கலால் துறை அறிவித்துள்ளது. 



  • May 28, 2025 12:11 IST

    மெரினாவில் ரோப் கார் - சாத்தியக்கூறு அறிக்கை தயாராகிறது

    சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள ரோப் கார் திட்டத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாராகிறது என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர் எழுப்பிய கேள்விக்கு சாத்தியக்கூறு அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்றும் மேயர் பிரியா பதிலளித்துள்ளார். 



  • May 28, 2025 11:55 IST

    மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை: முதல்வர்

    மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்; அதனால்தான் கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகுகளை மீட்க 76 முறை கடிதம் எழுதினேன்; நாம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இதுவரை 1,154 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்; விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வழங்கும் தொகை ரூ.8 லட்சமாக உயர்வு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 



  • May 28, 2025 11:46 IST

    திருவொற்றியூரில் மீன்பிடித் துறைமுகத்தை முதல்வர் திறந்தார்

    சென்னை திருவொற்றியூரில் ரூ.272 கோடி மதிப்பு மீன்பிடித் துறைமுகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 12 மீன்பிடித் துறைமுக கட்டமைப்பு வசதி, ரூ.170 கோடியில் 2 மீன் இறங்குதளங்கள் மேம்படுத்தப்பட்டன; ரூ.241 கோடியில் மீனவ மகளிர் நுண்கடன், பாக் வளைகுடா மீனவர்களுக்கு வாழ்வாதார திட்டம் தொடக்கம்; புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்



  • May 28, 2025 11:27 IST

    திமுக கூட்டணியில் தொடர்வோம்: துரை வைகோ

    2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம்; நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல, எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார் என்று மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். 



  • May 28, 2025 11:20 IST

    மாநிலங்களவைக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

    மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா மற்றும் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர். 



  • May 28, 2025 11:19 IST

    வைகோவுக்கு மாநிலங்களவை சீட் இல்லை

    தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை



  • May 28, 2025 10:49 IST

    என்.டி.ஏ. கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்: நயினார் நாகேந்திரன்

    தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க உள்ளிட்ட எதிர்கட்சிகள், கருத்துவேறுபாடுகளை மறந்து ஒரே அணியில் இணைய வேண்டும். என்.டி.ஏ. கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என்ற கடம்பூர் ராஜூவின் கருத்து தான் என் கருத்தும் என்று பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.



  • May 28, 2025 10:47 IST

    மாநிலங்களவை எம்.பியாக கமல்ஹாசன்

    மக்களவை தேர்தலில் செய்த உடன்பாடு அடிப்படையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக தி.மு.க. அறிவித்துள்ளது, இதன் மூலம் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பியாக உள்ளார்.



  • May 28, 2025 10:45 IST

    மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு

    மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க தரப்பில், பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • May 28, 2025 10:43 IST

    எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார்: துரை வைகோ

    நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம் என  மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.



  • May 28, 2025 09:41 IST

    சவுதி அரேபியா சென்ற குலாம் நபி ஆசாதுக்கு உடல்நலக்குறைவு

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் குழுவுடன் சவுதி அரேபியா சென்ற குலாம் நபி ஆசாதுக்கு உடல்நலக்குறைவு.  வெப்ப அலையால் ஏற்பட்ட பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை சீராக உள்ளது.



  • May 28, 2025 08:45 IST

    குற்றாலம் அருவிகளில் குளிக்க 4-வது நாளாக தடை நீடிப்பு

    தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், குற்றால அருவிகளில் கடுமையான வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக நீட்டிப்பு 



  • May 28, 2025 08:42 IST

    வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சுங்கச்சாவடி மீது லாரி மோதி விபத்து

    ஆவடி அருகே, வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், உள்ள பாலவேட்டி சுங்கச்சாவடியில், கண்டெய்னர் லாரி ஒன்று தாறுமாறாக வந்து மோதியதில், சுங்கச்சாவடி சேதடைந்தது. லாரி வருவதை பார்த்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறியதால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஓட்டுனர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியதாக கூறப்படுகிறது.



  • May 28, 2025 08:37 IST

    `விசா கிடையாது என்ற அமெரிக்க அரசு அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

    அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிதாக விசா வழங்க தடை விதித்த‌து டிரம்ப் நிர்வாகம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு 100 மில்லியன் டாலர் நிதி வழங்கும் ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளதால் மாணவர்கள் போராட்டம்.



  • May 28, 2025 08:04 IST

    கேரளாவில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும்,
    3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது



  • May 28, 2025 08:03 IST

    விமானத்தில் வெடிகுண்டு? - இரவு முழுவதும் சோதனை

    சீனாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் வெடிகுண்டுகள் கடத்தப்படுவதாக மர்ம இ-மெயில் வந்ததை தொடர்ந்து,சந்தேகிக்கப்படும் விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், உளவுப்பிரிவு, அதிரடிப்படை, பாதுகாப்புப் படை சோதனை மேற்கொண்டனர். விடிய விடிய நடந்த சோதனையில் சரக்கு விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை, வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்துள்ளது



  • May 28, 2025 08:00 IST

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து இன்று மாலை ஆலோசனை

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, தலைமைச் செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது. டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கொலை, கொள்ளை சம்பவங்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசித்து, அறிவுரை வழங்கப்பட உள்ளது



tamilnad Live Updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: