/indian-express-tamil/media/media_files/2025/05/30/80gaLSoKZBpbEKXESQNo.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
May 30, 2025 23:17 IST
இ.பி.எஸ் உடன் தே.மு.தி.க பொருளாளர் எல்.கே சுதீஷ் சந்திப்பு; ஒரு மணி நேரத்துக்கு மேல் பேச்சுவார்த்தை
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தே.மு.தி.க பொருளாளர் எல்.கே. சுதீஷ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜ்யசபா எம்.பி. சீட் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருவது அ.தி.மு.க-வின் கடமை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
May 30, 2025 23:11 IST
பா.ம.க-வில் ஏற்பட்டுள்ள பிளவு அரசியல், கொள்கை ரீதியானது அல்ல; குடும்ப பிரச்சினை - கார்த்தி சிதம்பரம்
சிவகங்கையில் எம்பி கார்த்தி சிதம்பரம் பேட்டி: “பா.ம.க-வில் ஏற்பட்டுள்ள பிளவு அரசியல் ரீதியானதோ கொள்கை ரீதியானதோ அல்ல, அது குடும்ப பிரச்சினை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
-
May 30, 2025 22:25 IST
கொரோனா பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறை பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும், தடுப்புப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, அண்மைக் காலமாக கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
-
May 30, 2025 21:49 IST
நகைக் கடன் விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை - மு.க.ஸ்டாலின் வரவேற்பு
நகைக்கடன்களுக்கான விதிகளை தளர்த்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்ததற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய நிதி அமைச்சருக்கு நான் எழுதிய கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த கொள்கையாக இருந்தாலும் மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
-
May 30, 2025 20:01 IST
மே ஊதியம் தரப்படவில்லை: சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
சென்னைப் பலகலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு மே மாதம் சம்பளம் இன்று (30.05.2025) வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கவில்லை. இதனால், ஓய்வூதியம் மற்றும் மாத சம்பளத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் அலுவலர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு ஊழியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க ஆணை செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உடனடியாக மே மாதத்திற்கான சம்பளம் வழங்கவில்லை என்றால் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களும் இன்று முதல் (30.05.2025) உள்ளிருப்பு போராட்டம் நடத்த ஜே.ஏ.சி முடிவு செய்துள்ளது என்று சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
-
May 30, 2025 19:41 IST
பா.ம.க நிர்வாகிகள் நியமனம் குறித்து எனது கடிதமே செல்லும் - அன்புமணி ராமதாஸ்
பா.ம.க நிர்வாகிகள் நியமனம் குறித்து எனது கடிதமே செல்லும் - அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்: “பா.ம.க-வில் சில குழப்பங்கள் நடக்கலாம். அவை அனைத்தும் சரியாகிவிடும் அவற்றை சரிபடுத்தி விடுவேன். உங்களில் யாரை நீக்கி அறிவிப்பு வந்தாலும் அடுத்த 10 நிமிடத்தில் நீங்கள் பொறுப்பில் தொடருவதாக நான் அறிக்கை வெளியிடுவேன். உரிமை மீட்பு பயணத்தை விரைவில் தொடங்க உள்ளேன். நான் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து மன உளைச்சலில் இருந்தேன் நேற்று தான், விடுதலை பெற்று சுதந்திரமடைந்தேன். என் உடன் இப்போது இருக்கும அணியை உருவாக்க 3-4 ஆண்டுகளானது, இந்தக் குழுவை கலைக்க சூழ்ச்சிகள் நடக்கிறது. உலகத்தில் நான் அதிகம் நேசிப்பது எனது அம்மாதான். அவரும் என்னை அதிகமாக நேசிக்கிறார். என் அம்மா மீது ஒரு துரும்பு கூட பட நான் விட மாட்டேன், இதுவரையும் விட்டதில்லை இனியும் விடமாட்டேன். புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் க்யூ ஆர் கோடு உள்ளது. கட்சியின் உறுப்பினர்கள் அதை ஸ்கேன் செய்து நிதி செலுத்தலாம். உறுப்பினர் அடையாள அட்டை பெற்றபின் க்யூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து 5 ரூ. உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும்.கட்சிக்கு அதிகளவிலான நிதி தேவைப்படுகிறது. எனவே உறுப்பினர் கட்டணமாக 5 ரூ.யுடன் கூடுதல் தொகையையும் உறுப்பினர்கள் செலுத்தலாம்.
சித்திரை மாநாட்டை நடத்தியது நான் அல்ல. உறுப்பினர்களாகிய நீங்கள்தான். சித்திரை முழு நிலவு மாநாடு வெற்றி பெற பாமக தொண்டர்களே காரணம். சிறு பிரச்சனை கூட இல்லாமல் லட்சம் தொண்டர்கள் கூடினர். சித்திரை மாநாட்டுக்கு பின் இளைஞர்களின் மனநிலை மாறி உள்ளது. சித்திரை மாநாட்டின் பின் பாமகவில் இணைவதற்கு அவர்கள் மனதளவில் தயாராக உள்ளனர். பனையூர் அலுவலகத்தில் இருந்து உறுப்பினர்கள் அனைவரின் செயல்பாடுகளையும் கண்காணிப்பேன். 2 ஆண்டுக்கு முன்பே இந்த வகை டிஜிட்டல் உறுப்பினர் அட்டையை தயார் செய்துவிட்டேன். ஆனால் அதை வெளியிடும் சூழல் இல்லாமல் இருந்தது. அது என்ன என்பது உங்களுக்கு தெரியும். பாமக உறுப்பினர் அடையாள அட்டைகளை அடுத்தடுத்து டிஜிட்டல் மயப்படுத்த உள்ளேன். சில குழப்பங்கள் நடக்கலாம். அவை அனைத்தும் சரியாகிவிடும். அவற்றை சரிபடுத்தி விடுவேன்.
திலகபாமாவை நீக்கியதாக அறிக்கை வந்த சில நிமிடங்களில் அவர்தான் பொருளாளர் என நான் அறிக்கை கொடுத்தேன். கட்சியில் இருப்பவர்களை பொதுக்குழு மூலமே நீக்க முடியும். நான் பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். பல பொறுப்புகளை நான் பார்த்து விட்டேன். நான் என்னை தலைவராக பார்க்கவில்லை. அடிமட்ட தொண்டனாகவே பார்க்கிறேன். உங்களுக்கு தலைமை தொண்டனாக நான் இருக்கிறேன். என் மனதில் நிறைய உண்டு இங்கு மீடியாக்கள் இருப்பதால் என்னால் இங்கு வெளிப்படையாக பேச முடியவில்லை. (விழுப்புரம் மத்திய மா. செ . பொறுப்பில் இருந்து சிவகுமாரை இன்று காலை ராமதாஸ் நீக்கி இருந்த நிலையில், மேடையில் சிவகுமாருக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டதற்கான கடிதத்தை வழங்கினார் அன்புமணி) நிர்வாகிகள் நியமனம் குறித்து எனது கடிதமே செல்லும்.” என்று கூறினார்.
-
May 30, 2025 18:52 IST
பா.ம.க அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி
அன்புமணி வெளியிட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் பா.ம.க அலுவலகத்தின் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, தி.நகர் தெருவில் உள்ள தனது வீட்டின் முகவரியை கட்சி அலுவலக முகவரியாக அன்புமணி மாற்றியுள்ளார்
-
May 30, 2025 18:18 IST
2வது நாளாக இ.பி.எஸ் ஆலோசனை
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை உட்பட 21 மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் 2 இடங்களுக்கு வேட்பாளர் தேர்வு, 2026 சட்டமன்றத் தேர்தல் பூத் கமிட்டியை வலுப்படுத்துவது குறித்து இ.பி.எஸ் அறிவுறுத்தல்களை வழங்கினார்
-
May 30, 2025 18:16 IST
பா.ம.க நிர்வாகி நீக்கம் – ராமதாஸ் நடவடிக்கை
பா.ம.க செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் பச்சையப்பன் நீக்கப்பட்டு, புதிய தலைவராக ஜோசுவா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். ஏற்கெனவே 4 மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு மாவட்ட செயலாளரை ராமதாஸ் நீக்கியுள்ளார்
-
May 30, 2025 18:14 IST
திரைப்படங்களுக்கு பொழுதுபோக்கு வரி குறைப்பு
திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி 8% இருந்து 4% குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திரைப்படத்துறையினரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசின் அரசாணைக்கு திரைப்படத்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்
-
May 30, 2025 17:41 IST
நேற்று முதல் விடுதலை பெற்று சுதந்திரம் அடைந்தேன் - அன்புமணி
உங்களை யாரும் நீக்க முடியாது, தைரியமாக இருங்கள். பொதுக்குழுவுக்கு மட்டுமே நிர்வாகிகள் நியமனம், நீக்கும் அதிகாரம் உள்ளது. நேற்று முதல் விடுதலை பெற்று சுதந்திரம் அடைந்தேன். எனக்கு நல்ல டீம் அமைந்துள்ளது, அதை கெடுக்க சூழ்ச்சி நடக்கிறது என நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்
-
May 30, 2025 17:04 IST
போரை நிறுத்துமாறு பாக். கெஞ்சியது: பிரதமர் மோடி
இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து, பயங்கரவாத முகாம்களை அழித்தது. நமது ராணுவம் துணிச்சலை காட்டியதால், பாகிஸ்தான் ராணுவம் போரை நிறுத்துமாறு கெஞ்சியது.
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை
கான்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
-
May 30, 2025 17:04 IST
ஸ்டாலின் வலியுறுத்தல்
நகைக்கடன் விவகாரத்தில் மாநிலங்களுடன் முன்கூட்டியே RBI கலந்தாலோசிக்க வேண்டும்
ஸ்டாலின் வலியுறுத்தல்
-
May 30, 2025 16:31 IST
அன்புமணி ராமதாஸ் உருக்கம்
Video Credit: Sun News
#WATCH | “எங்க அம்மா மீது சிறு துரும்பு கூட படவிட மாட்டேன்”
— Sun News (@sunnewstamil) May 30, 2025
சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கம்#SunNews | #PMK | #AnbumaniVsRamadoss pic.twitter.com/AIDXeMNGrp -
May 30, 2025 16:21 IST
தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கும்
தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி, ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
May 30, 2025 15:57 IST
தவெக கல்வி விருது விழாவில் 24 வகையான சைவ அறுசுவை விருந்து
தவெக கல்வி விருது விழாவில் சாம்பார், வெண்டைக்காய் கார குழம்பு, உருளைக்கிழங்கு, காரக்கறி, மோர், ஊறுகாய், அவியல், அப்பளம்,பாதாம் கத்திலி, சிப்ஸ், ஸ்பிரிங் ரோல், பேபி கார்ன் 65, ரைத்தா, ஆலு சப்ஜி, ருமாலி ரொட்டி, பால் பாயாசம், வாழைப்பழம், ஐஸ்கிரீம், சுண்டல், தக்காளி இனிப்பு பச்சடி.. என 24 வகையான சைவ அறுசுவை விருந்து பரிமாறப்படுகிறது.
-
May 30, 2025 15:14 IST
பழைய நடைமுறையையே தொடர வேண்டும் - இபிஎஸ்
தங்க நகைக்கடன்களுக்கான பழைய நடைமுறையையே ரிசர்வ் வங்கி தொடர வேண்டும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செயல்படும் நிதி சேவைகள் துறை, நகைக்கடன் வரைவு தரநெறிகளை முறைப்படுத்த ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்தது வரவேற்கத்தக்கது என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
-
May 30, 2025 14:51 IST
அம்மாவைதான் ரொம்ப பிடிக்கும் - அன்புமணி
உலகத்திலேயே எனக்கு என் அம்மாவைதான் ரொம்ப பிடிக்கும். அவர்மீது சிறு துரும்பும் பட விடமாட்டேன். தாய் மீது அன்புமணி பாட்டிலை வீசினார் என ராமதாஸ் நேற்று குற்றஞ்சாட்டிய நிலையில் இன்று அன்புமணி உருக்கமாக பேசியுள்ளார்.
-
May 30, 2025 14:18 IST
விரக்தியின் உச்சத்தில் உள்ளோம்
பாமக தொண்டர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளோம், கட்சிக்குள் நெருக்கடியான சூழல் நிலவுகிறது. மன உளைச்சலால் ராஜினாமா செய்ய முடிவு செய்தேன், என்னை ராஜினாமா செய்ய விடாமல் ராமதாஸ் தடுத்து விட்டார் என பாமக எம்எல்ஏ அருள் கூறியுள்ளார்.
-
May 30, 2025 14:07 IST
தந்தைக்கு செய்தி சொல்லும் அன்புமணி?
பாமக என்பது நீங்கள்தான்; நீங்கள் இல்லையென்றால் கட்சி இல்லை. இக்கட்சி என் சொத்தோ பாலு சொத்தோ அல்லது வேறு யாரின் சொத்தோ அல்ல. இக்கட்சியில் அடிமட்ட தொண்டனாக இருந்து செயல்படுவேன். பொறுப்புகள் வரும் போகும், ஆனால் உங்கள் அன்பும் பாசமும்தான் நிர்வாகிகள் என பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
-
May 30, 2025 13:40 IST
நாட்டுக்கு தேவை என்பதால் திமுக கூட்டணி - கமல்
முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம்; மாநிலங்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசினோம்; நாட்டுக்கு தேவை என்பதால் திமுக கூட்டணிக்கு வந்துள்ளேன். மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமல் முதல்வரை சந்தித்தப்பின் பேட்டி அளித்துள்ளார்.
-
May 30, 2025 13:18 IST
அறிவிப்பில் திடீர் மாற்றம் - 'பொருளாளராக திலகபாமா தொடர்வார்': அன்புமணி அறிக்கை
பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு. பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக சற்று முன் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
-
May 30, 2025 13:13 IST
தொண்டர்கள் இல்லாமல் பாமக கிடையாது: அன்புமணி பேச்சு
பா.ம.க.வின் பொதுக்குழு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆலோசனை கூட்டமே இன்று நடக்கிறது. பா.ம.க.வின் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் நான் என அன்புமணி பேசியுள்ளார். தொண்டர்கள் இல்லாமல் பாமக கிடையாது; பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களின் சொத்து தனிப்பட்ட நபரின் சொத்து அல்ல. ராமதாஸின் கொள்கைகளை மனதில் நிறுத்தி களத்தில் நாம் செயல்பட வேண்டும். பாமகவில் அடிமட்ட தொண்டனாக செயல்படுவேன், பொறுப்புகள் வரும் போகும். ஆனால் நிரந்தரமானது உங்களின் அன்பும் பாசமும்தான். அது என்றுமே போகாது என அன்புமணி கூறினார்.
-
May 30, 2025 13:05 IST
முதல் தொண்டனாக நான் இறங்குவேன் - ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி பேச்சு
ராமதாஸின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த நாம் வேகமாக இறங்குவோம். உங்களில் ஒருவனாக முதல் தொண்டனாக நான் இறங்கி நிற்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
May 30, 2025 12:50 IST
திலகபாமாவின் பதவியை பறித்தார் ராமதாஸ்
பாமக பொருளாளராக இருந்த திலகபாமாவிடம் இருந்து கட்சி பொறுப்பை ராமதாஸ் பறித்துள்ளார். பாமக மாநில பொருளாளராக சையத் மன்சூரை நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
-
May 30, 2025 12:49 IST
உச்சக்கட்ட மன உளைச்சல்: பாமக எம்எல்ஏ அருள்
பாமக தொண்டர்கள் உச்சக்கட்ட மன உளைச்சல், மன வருத்தத்தில் இருக்கிறோம் அரசியலே வேண்டாம் என்னும் அளவிற்கு அவ்வளவு மன வேதனையாக இருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க தைலாபுரம் இல்லத்திற்கு வந்த பாமக எம்எல்ஏ அருள் பேட்டியளித்துள்ளார்.
-
May 30, 2025 12:21 IST
திராவிட மாடல் அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, இந்திய அளவில் சாதனை
திராவிட மாடல் அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, இந்திய அளவில் பல புதிய சாதனைகள் படைத்துள்ளது. செஸ் ஒலிம்பியாட், சர்வதேச மகளிர் டென்னிஸ், ஸ்குவாஷ், ஃபார்முலா-4 கார் பந்தயம் சிறப்பாக நடத்தப்பட்டது. 75 சட்டமன்றத் தொகுதிகளில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
May 30, 2025 12:20 IST
திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
மதுரையில் நாளை மறுநாள் நடக்கவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகும் வகையில் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. பொதுக்குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்களை செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
May 30, 2025 12:20 IST
அவதூறு பரப்பும் எதிர்க்கட்சிகள்: முதல்வர் சாடல்
எதிர்க்கட்சிகள் இட்டுக்கட்டி அவதூறுகளை பரப்பி வருகின்றன; பொய்ச்செய்திகளை பூதாகரமாக்கி தோல்வியில் இருந்து மீட்டெடுக்க முடியுமா என எதிர்க்கட்சிகள் முயற்சி தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்துகின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
May 30, 2025 11:56 IST
விஜய் தொடர்பாக பேச அதிமுகவினருக்கு தடை?
விஜய் தொடர்பாக பேச அதிமுக-வினருக்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தடை விதித்திருப்பதாக தகவல். 2ஆவது நாளாக நடைபெறும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியினருக்கு இதை அறிவுறுத்தியதாகவும், திமுக மீதான விமர்சனங்களை தீவிரப்படுத்த உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
May 30, 2025 11:54 IST
ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து, நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை
ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து, பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொள்கிறார். அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும் ராமதாஸ் விமர்சித்திருந்தார்.
-
May 30, 2025 11:51 IST
மின்சார பேருந்துகள் சேவையை ஜூன் 3ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!
சென்னையில் மின்சார பேருந்துகள் சேவையை முதலமைச்சர் ஜூன் 3ம் தேதி தொடங்கி வைக்கிறார். 120 மின்சார பேருந்துகளில் சேவையை ஜூன் 3ம் தேதி முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 2025 இறுதிக்குள், சென்னை முழுவதும் 625 மின்சார பேருந்துகள் இயங்கும் வகையில் நடவடிக்கை. சுற்றுசூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில், நவீன வசதிகளுடன் மின்சார பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
May 30, 2025 11:51 IST
திருக்குறள் ஆன்மீக புத்தகம்: ஆளுநர்
திருக்குறள் ஒரு ஆன்மீக புத்தகம்; அதை ஆன்மீகத்தில் இருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள். மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் சனாதன தர்மம் மட்டும் ஒன்றுதான் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
-
May 30, 2025 11:44 IST
அன்புமணி ஆலோசனைக் கூட்டம் - 22 மாவட்டச் செயலாளர்கள் வருகை
ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 மாவட்டச் செயலாளர்கள் வருகை தந்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்க உள்ளது.
-
May 30, 2025 11:22 IST
அன்புமணி ஆலோசனை
ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து, பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.
-
May 30, 2025 11:15 IST
வைர காதணி - விஜய் கொடுத்த பரிசு
600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஓவியாஞ்சலி மற்றும் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சோபியாவுக்கு வைர காதணி வழங்கி த.வெ.க தலைவர் விஜய் கெளரவித்துள்ளார்.
-
May 30, 2025 11:06 IST
தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
May 30, 2025 11:01 IST
அடுத்த வருஷம் வண்டி வண்டியாக பணத்தை கொண்டுவந்து கொட்டுவார்கள் - விஜய்
"2026 தேர்தலில் வண்டி வண்டியா பணத்தை கொட்ட போகிறார்கள், பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் கலாச்சாரத்தை தவிர்க்க வேண்டும்"என்று கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
-
May 30, 2025 11:00 IST
வெயிலிலும், மழையிலும் சாதி இருக்கா?" - விஜய்
"பெரியாருக்கே சாதி சாயம் பூசுகிறார்கள். சாதி, மதத்தை ஒத்திவைக்க வேண்டும், சாதியை எவ்வளவு தூரமாக ஒதுக்க முடியுமோ ஒதுக்கி விடுங்கள்" என்று கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
-
May 30, 2025 10:57 IST
நீட் மட்டும் தான் உலகமா? - விஜய் பேச்சு
"படிப்புல சாதிக்கணும் ஆனா ஒரே ஒரு படிப்பில் மட்டும் சாதிக்கணும்னு நினைக்காதீங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க நீட் மட்டும் தான் உலகமா? நீட்ட தாண்டி சாதிக்க பல விஷயங்கள் இருக்கு" என்று கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
-
May 30, 2025 10:49 IST
விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க விண்கலம் அனுப்பிய சீனா!
செவ்வாய் கிரகம் அருகே உள்ள விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க சீனா விண்கலம் அனுப்பியது. விண்கல்லில் இருந்து மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர தியான்வென்-2 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. லாங் மார்க்3பி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ள விண்கலம் 311பி என்ற வால்நட்சத்திரத்தையும் ஆய்வுசெய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.
-
May 30, 2025 09:58 IST
இன்று முதல் 3 நாட்களுக்கு நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி மீது நிறுவனர் ராமதாஸ் சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், கூட்டணி, மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்து இன்று முதல் 3 நாட்களுக்கு நிர்வாகிகளை சந்திக்கிறார். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
-
May 30, 2025 09:54 IST
நகைகடன்களுக்கு புதிய விதி: கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை
நகைக்கடன்களுக்கான புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது, 2 லட்சத்திற்கு குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க, நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது, மேலும் புதிய விதிகளை ஜனவரி 1 2026 முதல் செயல்படுத்தலாம் என்று மக்கள் மற்றும் பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,
-
May 30, 2025 09:39 IST
த.வெ.க கல்வி விருது விழா : 24 வகையான அறுசுவை உணவு விருந்து
10, 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற 678 மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் பரிசுகள் வழங்குகிறார். விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு 24 வகையான சைவ அறுசுவை விருந்து, பாதாம் கத்லி, ஸ்பிரிங் ரோல், காளான் பிரியாணி, தயிர் ரைத்தா, ருமாலி ரொட்டி, பால் பாயசம், ஐஸ்கிரீம் உள்ளிட்ட விருந்துக்கு ஏற்பாடு
-
May 30, 2025 08:56 IST
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிகத்தில் 11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில்
மழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, -
May 30, 2025 08:47 IST
புதிய அரசு கல்லூரிகள் - முதலமைச்சர் அறிவிப்பு
கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் புதிய அரசு கல்லூரிகள் தொடக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, கே.வி.குப்பம், துறையூர், உளுந்தூர்பேட்டை, செங்கம் ஆகிய பகுதிகளில் புதிய கல்லூரிகள் அமைக்கப்படும். புதிதாக தொடங்கப்படும் கல்லூரிகள் மூலம்
1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -
May 30, 2025 08:44 IST
த.வெ.க. விருது நிகழ்ச்சி: பவுன்சர்கள்- போக்குவரத்து போலீசார் இடையே வாக்குவாதம்
த.வெ.க கல்வி விருது விஜய் இன்று வழங்குகிறார். மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வரும் பாஸ் இல்லாத வாகனங்களை பவுன்சர்கள் விடுதிக்கு வெளியே அனுப்பியுள்ளனர். ஆனால் இந்த வாகனங்களை சாலையோரம் நிறுத்தக்கூடாது என பவுன்சர்கள் உடன் போக்குவரத்து போலீசார் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
-
May 30, 2025 08:42 IST
எரிந்து எலும்புக்கூடான கார்
சென்னை எழும்பூரில், சாலையில் காவலர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்ற நிலையில், அந்த கார் திடீரென நெருப்பு எரிந்துள்ளது, இதனால் அதிர்ச்சியாக காவலர் உடனடியாக தனது குடும்பத்துடன் இறங்கியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
-
May 30, 2025 07:57 IST
அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்றும் ஆலோசனை
அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். காலை மற்றும் மாலையில் நடைபெறும் இந்த சந்திப்பில், 40 மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளன, ஏற்கனவே நேற்று காலை மற்றும் மாலை 42 மாவட்ட நிர்வாகிகளுடன் பழனிச்சாமி ஆலோசனை நடத்தியிருந்தார்.
-
May 30, 2025 07:53 IST
குற்றாலத்தில் இன்று 6-வது நாளாக அருவிகளில் குளிக்கத் தடை
தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறையவில்லை. இதன் காரணமாக இன்று 6-வது நாளாக அருவிகளில் குளிக்கத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.