Chennai News Highlights: அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்க ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Teachers

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

இந்தியரின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு: இந்திய விண்வெளி வீரர், சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேரின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, ஃபால்கான் ராக்கெட்டில் திரவ ஆக்ஸிஜன் கசிவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக நேற்று புறப்பட வேண்டிய பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்று மாலை புறப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது இந்த பயணமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

  • Jun 11, 2025 23:39 IST

    தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு - தொடக்க கல்வி இயக்குநர் அறிவிப்பு

    தமிழ்நாட்டில் அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்க ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2025-26ல் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.91.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.



  • Jun 11, 2025 22:09 IST

    சென்னை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

    சென்னை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை,கைதான 13 பேரில் 6 பேருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு 6 பேரையும் அழைத்துச் சென்ற போலீசார்.



  • Advertisment
    Advertisements
  • Jun 11, 2025 21:25 IST

    சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சீரானது  - மெட்ரோ ரயில் நிர்வாகம் 

    சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை சீரடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. விம்கோ நகர் டிப்போ - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் வழக்கம்போல் தொடங்கியுள்ளன. கிரீன் லைனில் சென்னை சென்ட்ரல் - செயின்ட் தாமஸ் மவுண்ட் இடையேயான ரயில் சேவை வழக்கம்போல் இயங்குகிறது. சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான (கோயம்பேடு வழி, கிரீன் லைன்) நேரடி மெட்ரோ ரயில் சேவை ரத்து. பயணிகள் விமான நிலையத்தை அடைய ஆலந்தூர் நிலையத்திலிருந்து மாறிக்கொள்ளக் கோருகிறோம் - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.



  • Jun 11, 2025 21:18 IST

    கீழடி அறிக்கை வெளியிட சிறிதும் தயங்கவில்லை; தமிழக அரசு ஏன் தயங்குகிறது?  - மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

    கீழடி அகழாய்வு குறித்த கூடுதல் தரவுகளைக் கோரும்போது மத்திய அரசுக்கு தரவுகளை அளிக்க தமிழக அரசு ஏன் தயங்குகிறது என்பது தனக்குப் புரியவில்லை என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். "தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்; பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையாக அறிவியலின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.

    மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத், "நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சற்றும் தயங்கவில்லை. உண்மையில், இது போன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம்," என்று கூறினார். மேலும், "இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல் பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை," என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



  • Jun 11, 2025 20:01 IST

    சீன பொருள்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா 55% வரி விதிப்பு

    அமெரிக்கா, சீனப் பொருட்கள் இறக்குமதிக்கான வரியை 55% ஆக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்கப் பொருட்கள் மீதான இறக்குமதிக்கு 10% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. இது இரு தரப்பிலும் பரஸ்பர வர்த்தக தடைகளை அதிகப்படுத்துகிறது.



  • Jun 11, 2025 19:57 IST

    ‘பாடல்களைப் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்’ - நா.த.க முன்னாள் நிர்வாகி புகார்

    நா.த.க முன்னாள் நிர்வாகி ரமேஷ் நெல்லை காவல் ஆணையரிடம் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்தார். எனது பாடல்களைப் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும். கட்சியில் இருந்தபோது பாடல் எழுதி இசையமைத்தேன். இப்போது கட்சியில் இருந்து விலகிவிட்டேன். பாடல்களைப் பயன்படுத்தும் சீமான் எனக்கு ராயல்டி தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.



  • Jun 11, 2025 19:33 IST

    சாதி, மதம் இல்லை சான்றிதழ் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை 

    சென்னை உயர் நீதிமன்றம், "சாதி, மதம் இல்லை" என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

    "சாதி, மதம் இல்லை" என சான்றிதழ் கோரிய மனுதாரர் சந்தோஷ் என்பவரை சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது. மேலும், சமூக வாழ்க்கை, அரசியல், கல்வி, வேலைவாய்ப்பில் சாதி, மதம் இன்னும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



  • Jun 11, 2025 19:31 IST

    மீனம்பாக்கம் - ஏர்போர்ட் ரயில் நிலையம் இடையே தொழில்நுட்பக் கோளாறு; மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

    சென்னை மெட்ரோ ரயிலில், மீனம்பாக்கம் - விமான நிலையம் ரயில் நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவை பாதிப்பு. மாலை 5 மணியளவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விமான நிலையம் செல்லும் மெட்ரோ பயணிகள் மீனம்பாக்கத்திலேயே இறக்கி விடப்படுவதால் அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசலோடு காணப்படுகிறது. மீனம்பாக்கத்தில் இருந்து வெறும் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விமான நிலையம் வரை ஆட்டோவில் செல்ல நபருக்கு ரூ. 150 வரை வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.



  • Jun 11, 2025 18:46 IST

    திருப்பதி கோயில் உண்டியலில் ரூ.4.30 கோடி காணிக்கை

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 80,894 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 32,508 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.4.30 கோடி கிடைத்தது.



  • Jun 11, 2025 18:17 IST

    ”எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்?”

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜன், நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார். மக்கள் நலத்திட்டம் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில் தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது ஆணவமும் திமிரும்? 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • Jun 11, 2025 18:04 IST

    மத்திய அரசை கண்டித்து 18-ந்தேதி ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி

    தமிழ் மக்களின் வரலாற்றை மூடி மறைக்கும் மத்திய அரசை கண்டித்து ஜூன் 18ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். கீழடி அகழாய்வு குறித்து ஆதாரங்களை சரியாகத் தந்தும் தடுத்து நிறுத்துவதன் பின்னணி என்ன?. மத்திய அரசை கண்டித்து ஜூன் 18ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்தார்.



  • Jun 11, 2025 18:00 IST

    சென்னை விமான நிலையத்திற்கான மெட்ரோ நிறுத்தம்

    சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமான நிலையத்திற்கான ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், விம்கோ நகர் டிப்போவிற்கும் மீனம்பாக்கத்திற்கும் இடையிலான சேவைகள் வழக்கம் போல் இயங்குகின்றன. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என சென்னை மெட்ரோ நிறுவனம் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளது.



  • Jun 11, 2025 17:33 IST

    தைவானில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    தைவானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹுவாலியன் நகருக்கு தெற்கில் 71 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 31.1 கிலோ மீட்டர் ஆழ்த்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Jun 11, 2025 17:32 IST

    நீர்நிலை ஆக்கிரமிப்பு - சென்னை ஐகோர்ட்டு கண்டனம்

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நீர்நிலையில் கட்டிய வீட்டை காலி செய்யக் கோரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தவை எதிர்த்தும், உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பதை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டடங்களை அகற்றாத அதிகாரிகளின் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.



  • Jun 11, 2025 17:19 IST

    ஜம்மு-காஷ்மீர்: சட்டசபை வளாகத்தில் திடீர் தீ விபத்து

    ஜம்முவில் உள்ள சட்டசபை வளாகத்தில் முகப்பு அறை பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், சோபாக்கள் உள்பட பல பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் தீயை போராடி கட்டுப்படுத்தினர். இதனால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

     



  • Jun 11, 2025 17:11 IST

    ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ்-ஐகோர்ட் பரிந்துரை

    ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை அளித்துள்ளது. ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்து திருப்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரும் மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.



  • Jun 11, 2025 17:11 IST

    23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தென்காசி, நீலகிரி, கோவை, நெல்லை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 11, 2025 17:10 IST

    ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ்

    சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யபப்ட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்தி பேசிய பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்றும் பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.



  • Jun 11, 2025 17:01 IST

    கேரளா: வெடித்துச் சிதறும் அபாயத்தில் சிங்கப்பூர் கப்பல்

    கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.



  • Jun 11, 2025 16:58 IST

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மா.சு கடிதம்

    மாநில ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50% இடங்களை தக்க வைக்ககப்பட்டு, மாநில அளவிலான நீட் எஸ்.எஸ். கலாந்தாய்வில் 2வது சுற்றில் கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய வேண்டும். - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்



  • Jun 11, 2025 16:40 IST

    இரு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரண்டு ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



  • Jun 11, 2025 16:40 IST

    அமெரிக்காவில் இந்திய மாணவர் கட்டாய வெளியேற்றம்

    அரியானாவைச் சேர்ந்த நபர் விசா இல்லாமல் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளார். நேவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் கைவிலங்கிடப்பட்டு, தரையில் மண்டியிட வைத்து கட்டாய வெளியேற்றப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப் படுகிறார்.



  • Jun 11, 2025 16:37 IST

    விஜய் எங்கள் வீட்டு பையன்- பிரேமலதா விஜயகாந்த்

    விஜய் எங்கள் வீட்டு பையன் தான். அரசியல் நிலைப்பாட்டை விஜயிடம் தான் கேட்க வேண்டும் –

     பிரேமலதா விஜயகாந்த்



  • Jun 11, 2025 16:18 IST

    ஆசிரியை கனகலட்சுமியை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ்



  • Jun 11, 2025 15:32 IST

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் பேட்டி

    Credit: Sun News



  • Jun 11, 2025 14:55 IST

    'மனுஷி' திரைப்படம் மறுஆய்வு செய்யப்படும் - தணிக்கை வாரியம் உறுதி

    'மனுஷி' திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து இயக்குநர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், 'மனுஷி' திரைப்படத்தை பார்வையிட்டு இன்று மறு ஆய்வு செய்யப்படும் எனவும், திரைப்படத்தின் ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் உறுதியளித்துள்ளது.



  • Jun 11, 2025 14:36 IST

    ரயிலில் தட்கல் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயம் என இந்திய ரயில்வே துறை அறிவிப்பு

    ரயிலில் தட்கல் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயம் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 1 முதல் ஐ.ஆர்.சி.டி.சி-யில் ஆதார் எண்ணை பயன்படுத்தி பரிசோதனை செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டுமே தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.



  • Jun 11, 2025 14:07 IST

    கடன் வழங்குவதில் புதிய நடைமுறைக்கு சீமான் கண்டனம்

    விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். மேலும், கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் புதிய நடைமுறையை அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசே கடுமையான விதிமுறையை விதித்திருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Jun 11, 2025 13:40 IST

    பா.ஜ.க கூட்டணியில் இ.பி.எஸ் நீடிப்பாரா? - அப்பாவு கேள்வி

    பா.ஜ.க கூட்டணியில் இ.பி.எஸ் நீடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, சுயமாக சிந்திக்க கூடியவர் எனவும், அவர் நல்ல முடிவை எடுப்பார் என்றும் அப்பாவு கூறியுள்ளார்.



  • Jun 11, 2025 13:10 IST

    தேர்தலில் தனித்து போட்டியிட தே.மு.தி.க-விற்கு பயம் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் 

    தேர்தலில் தனித்து போட்டியிட தே.மு.தி.க-விற்கு பயம் இல்லை என்று அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலங்களவை சீட் தருவதாக அ.தி.மு.க எழுதி தந்த கடிதத்தை நாகரீகம் கருதி வெளியிடாமல் உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 11, 2025 12:41 IST

    கூட்டணி குறித்து முடிவு செய்ய கால அவகாசம் தேவை: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

    கூட்டணி குறித்து முடிவு செய்ய கால அவகாசம் தேவை என பிரேமலதா பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதி தந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடாமல் உள்ளோம். தேமுதிக தனித்து போட்டியிடுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும் என தெரிவித்தார்.



  • Jun 11, 2025 12:33 IST

    அன்புமணி தலைமையின்கீழ் செயல்படுவேன்: பா.ம.க. செயற்குழு உறுப்பினர் சத்ரியசேகர்

    அன்புமணி தலைமையின்கீழ் செயல்படுவேன் என பா.ம.க. செயற்குழு உறுப்பினர் சத்ரியசேகர் தெரிவித்துள்ளார். ராமதாஸ் தலைமையில் இருந்து விலகியதாக சத்ரியசேகர் கடிதம் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • Jun 11, 2025 12:22 IST

    தமிழ்நாட்டில் ஈபிஎஸ் தலைமையில் தான் ஆட்சி அமையும் : பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

    தமிழ்நாட்டில் ஈபிஎஸ் தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஈபிஎஸ் முதல்வர் ஆவார் என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவீர்களா என்ற கேள்விக்கு அதை அப்போது பார்த்து கொள்ளலாம் எனவும் அவர் பதில் அளித்தார்.



  • Jun 11, 2025 12:16 IST

    பாஜக கூட்டணியை தோற்கடிப்பதில் மாற்றம் இல்லை: பெ.சண்முகம்

    பாஜக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டில் மாற்றம் இல்லை பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். கூடுதல் தொகுதி கேட்பது எங்கள் விருப்பம்?; திமுகதான் அதை முடிவுசெய்யும். கீழடி அகழாய்வு அறிக்கையை மாற்றி கொடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு நினைப்பது ஏற்கதக்கது அல்ல. முருக பக்தர்கள் மாநாட்டை பயன்படுத்தி பெரிய கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.



  • Jun 11, 2025 12:16 IST

    2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது தேமுதிக

    2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது தேமுதிக. இன்று நடந்த மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், ” 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து நிர்வாகிகள் செயல்பட வேண்டும். கிளைக்கழகம் வரை நேரடியாக களத்திற்கு சென்று அனைவரும் பணியாற்ற வேண்டும்” என்று தேமுதிக நிர்வாகிகளுக்கு பிரேமலதா அறிவுரை வழங்கினார்.



  • Jun 11, 2025 12:00 IST

    கன்னட நடிகர் சிவராஜ்குமாரை வாழ்த்தி ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வீடியோ வெளியீடு..!!

    கன்னட நடிகர் சிவராஜ்குமாரை வாழ்த்தி ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் சிவராஜ்குமார் எப்போதும் எனக்கு ஒரு மகனைப் போல நான் அவருக்கு சித்தப்பா போல. இது வெறும் வீடியோவிற்காக சொல்லப்படுவது அல்ல கிட்டத்தட்ட 45 வருடத்திற்கு மேல் உள்ள உறவு. சிவராஜ்குமார் திரைத்துறையில் கால்தடம் பதித்து 40 ஆண்டுகள் நிறைவை அடுத்து கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.



  • Jun 11, 2025 12:00 IST

    விடுபட்ட மகளிர்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் -துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

    திமுக ஆட்சியில் மகளிருக்காக எண்ணற்ற திட்டங்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் மகளிர் சுய உதவி குழு தின விழாவில் பேசிய உதயநிதி,”பெண் விடுதலையே மகளிருக்கான முன்னேற்றம் என முழங்கியதுதான் திராவிட இயக்கம். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்கள் காவல்நிலையம் என அனைத்தையும் உருவாக்கியது திமுக. விடுபட்ட மகளிர்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.



  • Jun 11, 2025 11:52 IST

    நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது : ஐகோர்ட்

    நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆர்.ஏ.புரத்தில் நீர் நிலையில் கட்டிய வீட்டை காலி செய்ய வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. செல்வி என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Jun 11, 2025 11:49 IST

    பெண் விடுதலையே மகளிருக்கான முன்னேற்றம் - உதயநிதி ஸ்டாலின்

    பெண் விடுதலையே மகளிருக்கான முன்னேற்றம் என முழங்கியதுதான் திராவிட இயக்கம்.  பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்கள் காவல்நிலையம் என அனைத்தையும் உருவாக்கியது திமுக என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 



  • Jun 11, 2025 11:46 IST

    புதுச்சேரியில் பிரபல ரவுடி சத்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சத்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ரெயின்போ நகரில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 3 இளைஞர்களை வெட்டிக் கொலை செய்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவின் பேரில் ரவுடி சத்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.



  • Jun 11, 2025 11:30 IST

    கர்நாடகா: எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் வீடுகளில் சோதனை

    கர்நாடக மாநிலம் பெல்லாரியில் எம்.பி. மற்றும் 2 எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெல்லாரி எம்.பி. துக்காராம், பெல்லாரி எம்எல்ஏ நர பாரத் ரெட்டி, காம்ப்லி தொகுதி எம்.எல்.ஏ. கணேஷ் வீட்டில் சோதனை நடைபெற்றது. பெல்லாரி ஊரக தொகுதி எம்.எல்.ஏ. நாகேந்திராவின் நெருங்கிய கூட்டாளியின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.



  • Jun 11, 2025 11:22 IST

    2026-ல் இ.பி.எஸ் தலைமையில் தான் ஆட்சி - நயினார் நாகேந்திரன் உறுதி 

    "2026ல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம்" என்று பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 



  • Jun 11, 2025 11:19 IST

     தே.மு.தி.க மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை

    சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச் செயலாளர் பிரேமலதா ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றைய ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். 29 தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் 14ம் தேதி வரை ஆலோசனை நடைபெற உள்ளது.



  • Jun 11, 2025 10:53 IST

    சாலைகள் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கிய சென்னை மாநகராட்சி!

    சென்னையில் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னரே 3644 சாலைகளை சீரமைக்க ரூ.391 கோடி ஒதுக்கீடு செய்தது மாநகராட்சி. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி சாலைப் பணிகளை மேற்கொண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.



  • Jun 11, 2025 10:43 IST

    கீழடியை கருவறுக்க பா.ஜ.க முயற்சி - வைகோ

    "தமிழ் மக்களின் தாய்மாடியான கீழடியை கருவறுக்க அனைத்து வேலைகளையும் பா.ஜ.க அரசு செய்கிறது. கீழடியை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கும் மத்திய அரசு, இல்லாத சம்ஸ்கிருத நாகரிகத்தை தேடுகிறது. ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் என சம்ஸ்கிருத பண்பாட்டை நிறுவத் துடிக்கிறது. தமிழ், தமிழரின் தொன்மை வரலாற்றை இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிப்போம்." என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 



  • Jun 11, 2025 10:28 IST

    தமிழ்நாட்டில் 2 நாட்கள் ரெட் அலர்ட் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை 

    தமிழ்நாட்டில் ஜூன் 14, 15 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21 செ.மீ.-க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 13, 16, 17 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்தது.



  • Jun 11, 2025 10:24 IST

    இருசக்கர வாகனம் மோதி கட்டட தொழிலாளி உயிரிழப்பு

    சென்னையை அடுத்த சேலையூரில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனம் மோதியதில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தொழிலாளி தாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.



  • Jun 11, 2025 10:18 IST

    தங்கம் விலை உயர்வு 

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.119க்கு விற்பனையாகிறது.



  • Jun 11, 2025 10:08 IST

    ‘கள்’ உணவு அல்ல கொடிய விஷம் – புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி

    கள்ளின் ஆபத்துத் தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியாக தவறான பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில் ‘கள் உணவு’ என்று ஒரு சிலர் வரும் 15ம் தேதி கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்கள். கள் மதுவே தவிர, அது உணவாகாது. 

    கள் உடம்புக்கு நல்லது என்று தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பப்படுகிறது. கள்ளின் ஆபத்துத் தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியாக தவறான பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். கள் இறக்க அனுமதித்தால் கிராமம் தோறும் நாட்டுச் சாராயம் காய்ச்சுதல் அதிகரிக்கும். இதன் போக்கு எப்படி, எங்கு போய் முடியும்? கள் இறக்கும் போராட்டம் நடத்துவதும் அதை பொது வழியில் குடித்துக் காட்டுவதும் சட்டவிரோதமே. அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 



  • Jun 11, 2025 09:38 IST

    விரைவில் நிரப்பப்படும் கிராம உதவியாளர் பணியிடங்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

    தமிழகத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். திருத்தப்பட்ட வழைகாட்டு நெறிமுறைகளின்படி பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து விரைவில் அறிவிப்பு வெளியிட்டு பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கபடுக்கிறது.



Tamilnadu Live News Udpate Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: