Coimbatore, Madurai, Trichy News: பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சி: ஒரு நாள் கூடுதலாக நீட்டிப்பு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
agri

4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

  • Jun 11, 2025 22:15 IST

    பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சி, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒரு நாள் கூடுதலாக நீட்டிப்பு

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த 2 நாட்கள் வேளாண் கண்காட்சி, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒரு நாள் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள், இயற்கை நல ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் கண்காட்சியை பார்வையிட வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 11, 2025 20:05 IST

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள மாசு: 2 வாரங்களுக்குள் குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுகளை அகற்றி சீரமைப்பது குறித்து முடிவெடுக்க 2 வாரங்களுக்குள் ஒரு குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளரைத் தலைமையில் இந்த குழுவை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.



  • Advertisment
  • Jun 11, 2025 18:47 IST

    ”வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது”

    தோளில் துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 11) ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றினார்.



  • Jun 11, 2025 18:35 IST

    பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி மேலும் உயர்வு

    விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு தாயாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது. எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Jun 11, 2025 18:03 IST

    திருச்சி: கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

    லால்குடியில் 2021-ல் கிருபன்ராஜ் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கவியரசன், கலைவாணன், பிரேம் நிவாஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.



  • Jun 11, 2025 18:01 IST

    தாம்பரம்- திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

    தாம்பரம் - திருவனந்தபுரம் இடையேயான வாராந்திர சிறப்பு ஏசி ரயில் சேவை ஜூன் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை தோறும் தாம்பரத்தில் இருந்து இரவு 7:30 மணிக்கு புறப்படும், மறுநாள் காலை 11:30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும். திருவனந்தபுரம் வடக்கில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 07:40 மணிக்கு தாம்பரம் வந்தடையும். 



  • Jun 11, 2025 17:44 IST

    வெடி விபத்தால் 2 பேர் பலி- பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து

    விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு தாயாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது. எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். உரிய பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ளாமல் செயல்பட்டு, விபத்துக்கு காரணமாக இருந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.



  • Jun 11, 2025 17:34 IST

    பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வேன் ஓட்டுநர் கைது

    மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பெரம்பூர் அடுத்த சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் மதுமோகன் போக்சோவில் கைதாகினார்.



  • Jun 11, 2025 17:13 IST

    வார இறுதி நாட்களை ஒட்டி 1,135 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

    வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,135 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது.



  • Jun 11, 2025 17:07 IST

    கனமழை எச்சரிக்கை: 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

    4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.



    • Jun 11, 2025 15:58 IST

      பட்டாசு ஆலை விபத்து: ஸ்டாலின் நிவாரணம்

      விருதுநகர், வடகரை கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி; 4 பேர் படுகாயம்
      உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சமும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 நிவாரணமும் முதல்வர் அறிவிப்பு



    • Jun 11, 2025 14:49 IST

      உழவு என்பது தொழில் அல்ல; அது நம் பண்பாடு - ஸ்டாலின்

      உழவு என்பது தொழில் மட்டுமல்ல; அது நமது பண்பாடு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அவர், அனைத்து விவசாயிகளுக்கும் அ.தி.மு.க ஆட்சி துரோகம் செய்ததாக விமர்சித்துள்ளார்.



    • Jun 11, 2025 14:27 IST

      8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

      தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



    • Jun 11, 2025 14:02 IST

      சிறுதானிய உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் - ஸ்டாலின்

      சிறுதானிய உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை திறந்து வைத்து அவர் உரையாற்றினார்.



    • Jun 11, 2025 13:36 IST

      சிறுமிக்கு பாலியல் தொல்லை - 3 பேர் கைது

      காஞ்சிபுரம் அருகே பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், கைது செய்யப்பட்ட சிறுவர்களை, கூர்நோக்கு பள்ளியில் சேர்த்த நிலையில், இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.



    • Jun 11, 2025 13:16 IST

      ஈரோட்டில் வேளாண் கண்காட்சி - தொடங்கி வைத்த ஸ்டாலின்

      ஈரோடு மாவட்டத்தில் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



    • Jun 11, 2025 12:15 IST

      திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் நியமனம்..!!

      வடக்கு மாவட்ட பாமக தலைவராக பி.எஸ்.பழனி நியமனம்செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளராக வேணு.பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டார்.



    • Jun 11, 2025 12:01 IST

      காரியாப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக இருவர் கைது!!

      விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை பலி கொண்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போர்மேன் மற்றும் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் ராஜா சந்திரசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.



    • Jun 11, 2025 11:50 IST

      ஒன்றிய அரசைக் கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்..!!

      சின்னமுட்டம் நாட்டு படகு மீனவர்கள் ஒன்றிய அரசைக் கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். கடல் வளத்தை அழிக்கும் இயற்கை எரிவாயு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்துவதற்கு சின்னமுட்டத்தில் ஒன்றிய அரசு திட்டங்களை கண்டித்து கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



    • Jun 11, 2025 11:32 IST

      பாறை குழியில் குப்பை கொட்டினால்  அபராதம் 

      கோயம்புத்தூர் மாவட்டம் காணியாலம்பாளையத்தில் பாறை குழியில் குப்பை கொட்ட அனுமதித்த உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர் மயில்சாமிக்கு ரூ.25,000 அபராதம் விதித்து ஊராட்சி தனி அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார்.



    • Jun 11, 2025 10:38 IST

      விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் பலி 

      விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வடகரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.



    • Jun 11, 2025 10:28 IST

      தமிழ்நாட்டில் 2 நாட்கள் ரெட் அலர்ட் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை 

      தமிழ்நாட்டில் ஜூன் 14, 15 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21 செ.மீ.-க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 13, 16, 17 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்தது.



    • Jun 11, 2025 09:43 IST

      சந்தைக்கு திடீர் சீல்: காய்கறிகளை சாலையில் கொட்டிய விவசாயிகள் 

      தென்காசி சங்கரன் கோவில் அருகே, தனியார் இடத்தில் இயங்கி வந்த காய்கறி சந்தைக்கு சீல் வைத்ததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், முன்னறிவிப்பின்றி சந்தைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததாக குற்றம் சாட்டிய விவசாயிகள், காய்கறிகளை சாலையில் கொட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



    • Jun 11, 2025 08:53 IST

      மதுரையில் உதவி மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

      மதுரை ஆரப்பாளையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் கணேசனை, உதவி மேலாளர் மாரிமுத்து காலணியால் தாக்கிய விவகாரம் தொடர்பாக, போக்குவரத்துக் கழக உதவி மேலாளர்  மாரிமுத்து உள்ளிட்ட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு



    Tamilnadu

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: