சென்னையில் கனமழை... சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூறை சரிந்து விபத்து : மீட்பு பணிகள் தீவிரம்

கனமழை காரணமாக சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கனமழை காரணமாக சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

author-image
WebDesk
New Update
Petrol Bunk

சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க்

சென்னை சைதாப்பேட்டையில் கனமழை காரணமாக பெட்டோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மழைக்கு ஒதுங்கிய 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Advertisment

சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், இன்று மாலை 6 மணி முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால், பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கனமழை காரணமாக சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், மழைக்காக பெட்ரோல் பங்கில் ஒதுங்கியிருந்த 3 பேர் பலத்த காயமடைந்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுளள நிலையில், மீட்பு பணிகளில் மீட்கப்படும் நபர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி இரு சக்கர வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மழைக்கு ஒதுங்கியவர்கள் விபத்தில் சிக்கியது சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: