பல்லவன், வைகை ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

ரயில்வே பயணிகள் இவ்வாறான மாற்றங்களை கருத்தில் கொண்டு தங்களது பயண திட்டங்களை முன்னரே மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

author-image
WebDesk
New Update
kanyakumari to telangana special train for summer holidays Tamil News

மதுரை ‘வைகை’ விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் ‘வைகை’ (12635) விரைவு ரயில் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் பகல் 1.45க்கு புறப்பட வேண்டியிருந்த நிலையில், சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரயில் தாம்பரத்தில் இருந்து பகல் 2.15க்கு பயணத்தை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisment

அதேபோல், காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி இயக்கப்படும் ‘பல்லவன்’ (12606) விரைவு ரயில் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். காலை 5.40க்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் இந்த ரயில், தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பயணிகள் இவ்வாறான மாற்றங்களை கருத்தில் கொண்டு தங்களது பயண திட்டங்களை முன்னரே மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: