Coimbatore, Madurai, Trichy News: முருகன் மாநாடு - உலக சாதனைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

Coimbatore, Madurai, Trichy News Live- 21 June 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 21 June 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madurain
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் கரையோரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • Jun 21, 2025 20:51 IST

    காவல் நிலையத்தில் பூஜை செய்த திருநங்கைகள்

    சேலம் அழகாபுரம் பகுதியில், காவல் நிலையத்தில் திருநங்கைகளை அழைத்து வந்து காவல் ஆய்வாளர் பூஜை செய்துள்ளார். பூஜை தட்டுடன் திருநங்கைகள் ஒவ்வொரு அறையாக சென்று பூஜை செய்யும் வீடியோ  இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன 



  • Jun 21, 2025 20:50 IST

    முருகன் மாநாடு - உலக சாதனைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

    மதுரையில் நடைபெற உள்ள முருகன் மாநாட்டில், 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை செய்யும் நிகழ்வு உலக சாதனை படைப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்



  • Advertisment
  • Jun 21, 2025 17:04 IST

    யோகி ஆதித்யநாத் வருகை ரத்து

    மதுரையில் நாளை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிப்பு.



  • Jun 21, 2025 16:08 IST

    வால்பாறை அ.தி.மு.க எம்.எல்.ஏ மரணம் 

    வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி உடல்நல குறைவால் உயிரிழந்தார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 

     



  • Advertisment
    Advertisements
  • Jun 21, 2025 15:51 IST

    சிறுமியின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

    கோவை, வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், சிறுமியின் சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்ட பின்னர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.



  • Jun 21, 2025 15:12 IST

    மீன்பிடி திருவிழாவில் ஒருவர் உயிரிழப்பு

    சிவகங்கை அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவின் போது கேசம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



  • Jun 21, 2025 14:43 IST

    குழந்தையை வீசிச் சென்ற சம்பவம்; மாணவி சரண் - ஒருவர் கைது

    கடந்த ஜூன் 11-ஆம் தேதி திருத்தணி அரசு மருத்துவமனை அருகே தொப்புள்கொடியுடன் முட்புதரில் குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில், 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சரணடைந்துள்ளார். அதன்படி, வயது குறைவாக இருந்து கொண்டு கர்ப்பம் என மருத்துவமனைக்கு சென்றால் சிக்கல் உருவாகும் எனக் கருதி, சுயப்பிரவசம் பார்த்து குழந்தையை வீசிச் சென்றதாக மாணவி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான கருணா என்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.



  • Jun 21, 2025 13:41 IST

    சிங்கம்புணரி: மீன்பிடித் திருவிழாவில் ஒருவர் பலி 

    சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவில் பாலசுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்தார். மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையில் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு பாலசுப்பிரமணியன் கீழே விழுந்துள்ளார்.



  • Jun 21, 2025 13:37 IST

    திருமங்கலம் சார்-பதிவாளர் மீது விசாரணைக்கு உத்தரவு

    திருமங்கலம் சார்-பதிவாளர் பாண்டியராஜன் மீதான புகாரில் விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை திருமங்கலம் பத்திரப் பதிவு அலுவலர் மோசடியாக விற்பனை செய்ததாக புகார் கூறப்படுகிறது. பதிவுத்துறை தலைவர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பதிவுத்துறை மட்டுமின்றி லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.



  • Jun 21, 2025 12:29 IST

    என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் தெரியாது 'அனுமான்'தான் தெரியும் - நமீதா

    சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பாஜக நிர்வாகி நமீதா கலந்துகொண்டார். பள்ளி மாணவ, மாணவியர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டு யோகா செய்தனர். பின்னர் பேசிய நமீதா, "யோகா 5,000 ஆண்டுகள் பழமையானது. நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலைக் கட்டுப்பாட்டோடு வைத்தபின் தான் யோகா பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது. அனைவரும் யோகா செய்யுங்கள். அது மனதிற்கும் உடலுக்கும் நல்லது.

    என் குழந்தைகளோடு நான் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. என் தாய் மொழியில்தான் பேசுவேன். ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான். ஆனால் அதற்கு முன் கண்டிப்பாக தாய்மொழி முக்கியம். என் குழந்தைக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் எல்லாம் தெரியாது, ஜெய் அனுமன்தான் தெரியும். இதை நான் பெருமையாக தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார் 



  • Jun 21, 2025 11:52 IST

    ஈஷா யோகா மையத்தில் இந்திய ஆயுதப்படை வீரர்கள் யோகா

    கோயம்புத்தூர், ஈஷா யோகா மையத்தில் யோகாவில் பங்கேற்இந்திய ஆயுதப்படை வீரர்கள்



  • Jun 21, 2025 11:07 IST

    காட்டு யானையை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகளை களமிறக்கிய வனத்துறையினர்

    நீலகிரி: பிதர்காட்டில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வரும் காட்டு யானையை விரட்டுவதற்காக ஜம்போ, கிருஷ்ணா என்ற 2 கும்கி யானைகளை களமிறக்கிய வனத்துறையினர்

    காட்டு யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட திட்டம்



  • Jun 21, 2025 10:58 IST

    சிவகங்கை மீன்பிடி திருவிழா

    Video Credit: Sun News



  • Jun 21, 2025 10:41 IST

    வால்பாறை அருகே சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை: தேடும் பணி தீவிரம்

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்ற நிலையில், தற்போது சிறுமி அணிந்திருந்த ஆடை மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்த தொடர் மழை காரணமாக சிறுமியை தேடும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது தேடும் பணி துவங்கப்பட்டுள்ளது.
    மேலும் காவல்துறை மற்றும் வனத்துறையினர் வீரா மற்றும் வைரவா ஆகிய இரண்டு மோப்ப நாய்களை கொண்டு சிறுமியை தேடி வருகின்றனர். தொடர்ந்து ட்ரோன் கேமரா உதவியுடன் உடலை தேடும்பணி தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 



  • Jun 21, 2025 09:47 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8,218 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 16,341 கன அடியாகவும் சனிக்கிழமை காலை வினாடிக்கு 18,220 கன அடியாகவும் அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் நேற்று காலை 113.57 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 113.69 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர் இருப்பு 83.76 டிஎம்சியாக உள்ளது.

     



  • Jun 21, 2025 09:25 IST

    குடும்பப் பிரச்னையில் 3 பேர் வெட்டிக் கொலை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குடும்பப் பிரச்னையில் மனைவி, 2 மகள்களை வெட்டிக் கொன்ற கணவன் போலீசில் சரண் அடைந்தார். திருவிருந்தாள்புரத்தில் மனைவி பூங்கொடி, மகள்கள் ஜெயதுர்கா, ஜெயலட்சுமி அதிகாலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மூவரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Jun 21, 2025 09:20 IST

    முட்டை லோடு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது

    உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூரில் முட்டை லோடு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ரூ.5 லட்சம் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சேதம் அடைந்தன. பொதுமக்கள் உடையாத முட்டைகளை அள்ளிச் செல்வதால் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.



  • Jun 21, 2025 09:15 IST

    மருதமலை முருகன் கோயிலில் லிஃப்ட் வசதி

    கோவை மருதமலையில் அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வந்தடைய மலைப் பாதை, படிக்கட்டுப் பாதைகள் உள்ளன. மலை மீது வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் 150 படிக்கட்டுகளை கடந்து, 35 மீட்டர் உயரத்துக்கு மேலே சென்று சுவாமியை தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, பக்தர்கள் வசதிக்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.5.20 கோடி மதிப்பில் லிஃப்ட் (மின் தூக்கி) அமைக்கும் பணிகள் கடந்தாண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராஜகோபுரம் படிக்கட்டை ஒட்டியுள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில், 2 லிப்ட்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.



  • Jun 21, 2025 09:14 IST

    மாமல்லபுரத்தில் கட்டணமின்றி அனுமதி இலவசம்

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க தொல்லியல்துறை இன்று அனுமதி அளித்துள்ளது.



  • Jun 21, 2025 09:13 IST

    விழுப்புரம்: வாய்க்கால் தரைப்பாலம் உடைந்தது

    விழுப்புரம் மாவட்டம் அனிச்சம் பாளையம் சாலையில் உள்ள கோலியனூரான் வாய்க்கால் தரைப்பாலம் உடைந்ததால் அப்பகுத்தியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அனிச்சம்பாளையம், எம்.குச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்து செல்ல முடியாததால் பொதுமக்கள் வேலைக்கு மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



  • Jun 21, 2025 09:10 IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

    நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் கரையோரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

     



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: