/indian-express-tamil/media/media_files/2024/11/06/TDPI2HJUMI2xMP6J3aUR.jpg)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் இரண்டு நாள் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இன்று சென்னை திரும்பினார். இன்று காலை கலைஞர் நூலாக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்து அடைந்து அங்கிருந்து சென்னை புறப்பட்டார்.
சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக நிர்வாகிகள் அமைச்சர்கள் என பலரும் விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விமான நிலையப் பகுதியில் சாலைகளில் இரு புறங்களிலும் இருந்த பொதுமக்களும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் முதலமைச்சரை வழி அனுப்ப வந்திருந்த கோவை தெற்கு தொகுதி திமுக பொதுக்குழு உறுப்பினர் கதிர் என்பவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை மீட்ட திமுக தொண்டர்கள் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.