/tamil-ie/media/media_files/uploads/2022/12/MK-Stalin-4-5-1-2-1.webp)
தமிழகத்தில் மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் இருந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூறியதாவது, "நாடு முழுவதும் இருந்து தினசரி வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பசி போக்கும் வகையில், 'முப்பொழுதும் இப்பொழுதும் பக்தி பசியுடன் வருபவர்களுக்கு அன்னதானம்' அளிக்கும் விழாவினை துவக்கி வைத்ததற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பக்தர்கள் சார்பாகவும், திருவண்ணாமலை மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.