/tamil-ie/media/media_files/uploads/2022/03/dayalu.jpg)
Tamilnadu News Update : முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தாயாளு அம்மாள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியான தாயாளு அம்மாள் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக உல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதி இறப்பதற்கு முன்பாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கூட தாயாளு அம்மாள் வீல்சேரில்தான் வந்தார்.
மேலும் தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக பொதுநிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்த தாயாளுஅம்மாள் தற்போது வயதுமூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இது வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் மாலையில் வீடு திரும்பிவிடுவார் என்று கூறப்படுகிறது
தற்போது மருத்துவமனையில் அவருடன் மு.க.அழகிரி. செல்வி, தமிழரசு ஆகியோர் உடன் இருக்கின்றனர். ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள தாயாளு அம்மாள் கடந்த 2018-ம் ஆண்டு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.