பேருந்து, மெட்ரோ, ரயிலுக்கு ஒரே செயலி: நாளை தொடங்கி வைக்கும் மு.க.ஸ்டாலின்

சென்னை நகரில் அனைத்து வகையான பொது போக்குவரத்தையும் ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் ஸ்மார்ட்போன் செயலியான இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை நகரில் அனைத்து வகையான பொது போக்குவரத்தையும் ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் ஸ்மார்ட்போன் செயலியான இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
stalin

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தால் (CUMTA) உருவாக்கப்பட்ட 'சென்னை ஒன்' செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (செபடம்பர் 22) அறிமுகப்படுத்தவுள்ளார். இந்த செயலி,  சென்னை நகரில் அனைத்து வகையான பொது போக்குவரத்தையும் ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் ஸ்மார்ட்போன் செயலியான இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து அரசாங்க வெளியீட்டின்படி, இந்த செயலி சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் 2-வது அதிகாரக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும். "இந்தக் கூட்டத்தின் போது, முதல்வர், இந்த செயலியைத் தொடங்குவதோடு மட்டுமல்லாமல், அடுத்த 25 ஆண்டுகளுக்கு நகரத்தில் நிலையான போக்குவரத்தை உறுதி செய்யும் விரிவான இயக்கத் திட்டத்தையும் (CMP) அங்கீகரிப்பார்," என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 'சென்னை ஒன்' செயலி பொதுவான க்யூஆர் (QR)இயக்கப்பட்ட டிக்கெட்டுகளை உறுதி செய்யும், இதனால் பயணிகள் ரயில்கள், மெட்ரோ ரயில், டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்களில் ஒரே டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பயணிக்க முடியும். இது பயணிகள் பேருந்துகள் மற்றும் ரயில்களின் நேரங்களை நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ளவும் உதவும்.

யுபிஐ (UPI) கட்டணங்களைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை வாங்கலாம். இந்த செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பிற மொழிகளிலும் பயனபடுத்தும் வகையில் வடிவமைக்கப்படடுள்ளது. இந்த செயலி தொடங்கப்பட்டவுடன், பயணிகள் டிக்கெட்டுகளை வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements
Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: