தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக இன்று தனி விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார் .
Advertisment
விமான நிலையத்தில் முதல்வரை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என் .நேரு, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், காவல் துறை கூடுதல் இயக்குநர் தாமரை கண்ணன், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர். வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
Advertisment
Advertisements
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் உற்சாக வரவேற்பு பெற்று, கரூரில் நாளை நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில் அல்லூர் சேவை மையத்தை சார்ந்த பெண்கள் முதல்வரின் வாகனத்தை மறித்து நன்றி தெரிவித்தனர். அதேபோல் குளித்தலையிலும் திமுக வினர் பெரும் வரவேற்பு கொடுத்தனர்.
க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news