/indian-express-tamil/media/media_files/2025/06/14/J6FZAQa9TRqkSA144FG4.jpg)
கோவை விமான நிலையத்தில் இன்று காலை வழக்கமான மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனைகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பெண் பயணி சரளா ராமகிருஷ்ணன் என்பவரின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டபோது,அவர் கொண்டு வந்த பையில் 9 mm வகை தோட்டா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து சரளா ராமகிருஷ்ணன் என்ற அந்த பெண் பயணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பீளமேடு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணை பீளமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், விசாரணை மேற்கொள்ளனர்.
விசாரணையில் அவர் கோவையைச் சேர்ந்த பிரபல அறக்கட்டளையான ராமகிருஷ்ணா குழும அறக்கட்டளையின் அறங்காவல் மனைவி என்பதும் பெங்களூருக்கு கிளம்பிய பொழுது துப்பாக்கி தோட்டா இருந்தததை கவனிக்காமல் எடுத்து வந்து இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இது குறித்து அவரிடம் பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.