ரயில்வே பாலத்தின் அடியில் மழை நீரில் சிக்கிய அரசு பேருந்து: பயணிகள் பத்திரமாக மீட்பு

கோவையில் ரயில்வே பாலத்தின் அடியில் மழை நீரில் அரசு பேருந்து சிக்கிக்கொண்ட நிலையில், அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கோவையில் ரயில்வே பாலத்தின் அடியில் மழை நீரில் அரசு பேருந்து சிக்கிக்கொண்ட நிலையில், அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Bus Water

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை சுமார் 5 மணி அளவில் இருந்து கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

Advertisment

காந்திபுரம், சித்தாபுதூர், சாய்பாபா காலனி, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாய்பாபா காலனி சிவானந்த காலனி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் தேங்கிய மழை நீரில் அரசு பேருந்து மாட்டிக் கொண்டது. அதில் பயணித்த பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்ட நிலையில், பேருந்தை வெளியே எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்றைய தினம் பெய்த கன மழையில் இதே காலத்தில் தனியார் பேருந்து ஒன்று மாட்டிக் கொண்டது குறிப்பிடப்பட்டது.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

tamilnadu news

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: