கோவையில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு: சி.சி.டிவியில் பதிவான காட்சிகள்

ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் செயினை திருடியது நதியா (38) அவர் நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மேலும் என்பதும் இவர் மீது உக்கடத்தில் ஏற்கனவே வழக்கு உள்ளது தெரியவந்தது.

ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் செயினை திருடியது நதியா (38) அவர் நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மேலும் என்பதும் இவர் மீது உக்கடத்தில் ஏற்கனவே வழக்கு உள்ளது தெரியவந்தது.

author-image
WebDesk
New Update
Chani Ngh

கோவையில் பேருந்தில் மூதாட்டியிடம் இருந்து செயினை திருடும் பெண் பேருந்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கோவை நீலிகோணம்பாளையம் சக்தி நகர் சேர்ந்த லட்சுமி (73) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூலூரில் உள்ள மகளை பார்த்து விட்டு தனியார் பேருந்தில் கோவை நோக்கி வந்து உள்ளார். அப்போது அருகில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பேருந்தில் லட்சுமி அருகே அமர்ந்து இருந்தார்.
பின்னர் அவர் லட்சுமி அணிந்து இருந்த செயின் கொக்கி கழண்டு இருப்பதாக தெரிவித்து, செயினை கழட்டி தனது பரிசில் வைத்து உள்ளார். மேலும் ராமநாதபுரம் சந்திப்பில் இறங்கிய லட்சுமி பரிசை சோதனை செய்த போது அதில் இருந்து செயின் மாயமாக இருந்தது.

இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் செயினை திருடியது நதியா (38) அவர் நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மேலும் என்பதும் இவர் மீது உக்கடத்தில் ஏற்கனவே வழக்கு உள்ளது தெரியவந்தது. பின்னர் போலீசார் நதியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  அந்தப் பேருந்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் மூதாட்டியிடம் இருந்து நித்தியா திருடும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: