/indian-express-tamil/media/media_files/LfyFenBsH3slBKDEi6Kh.jpg)
கோவை இருகூர் சுங்கம் காங்கிரஸ் அலுவலகம்
கோவை இருகூர் சுங்கம் மைதானத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மனித மலத்தை தண்ணீரில் கலந்து வீசப்பட்ட நிலையில்,அதிமுக கிளை செயலாளர் இல்லத்திலும் இதேபோல் மனித மலம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான கோவை சிங்காநல்லூர் பகுதியில் கழிவறை சுத்தம் செய்யும் ஒப்பந்ததாரர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓப்பந்ததாரர்கள் முறையாக கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளை செய்யவில்லை என காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.இதனிடையே அதிமுக கிளை செயலாளர் பன்னீர்செல்வம் ராதாகிருஷ்ணன் பிரகாஷ் ஆகியோருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அதிமுக கிளை செயலாளர் பன்னீர் செல்வம் வீட்டிலும், இருகூர் சுங்கம் மைதானத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திலும் மனித மலத்தை வீசி சென்றுள்ளனர்.இது குறித்துகாங்கிரஸ் மற்றும் அதிமுக பிரமுகர்கள் அளித்த புகாரின் பேரில் ஒப்பந்ததாரர்கள் ராதாகிருஷ்ணன் பிரகாஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.