/indian-express-tamil/media/media_files/2025/04/21/MPmJnNJPXYjdWzZAxhT2.jpg)
உடல் ஊனத்தை பற்றி தரக் குறைவாக பேசும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் மாற்றுத்திறனாளிகள், வெயிலில் காத்து இருந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.
கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு வாழ்விட வாரிய குடியிருப்புவாசிகள் தன்னை தரக்குறைவாக நடத்துவதாகவும், குடி தண்ணீர் இணைப்பு குடியிருப்புகளில் இல்லாததால் பொதுக் குழாய்களில் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும், பொதுக் குழாய்களில் மற்றவர்களுடன் போட்டி போட்டு குடிநீர் பிடிக்க முடியாத, சூழல் இருப்பதால் குடி தண்ணீர் பிடிக்கும் போது தங்களை மற்ற குடியிருப்பு வாசிகள் தரக்குறைவாக நடத்துவதாக, மாற்றுத் திறனாளிகள். வேதனையுடன் தெரிவிக்கின்றனர்
மேலும் தங்களுக்கு என பிரத்தியேக குடிநீர் இணைப்பை வழங்கிட வேண்டும் தங்களை தரக் குறைவாக பேசுபவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் நூற்றுக்கு மேற்பட்டோர் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்தனர். அப்போது அலுவலகத்திற்குள் செல்ல முடியாத நிலையில் வெயிலிலேயே அரை மணி நேரத்திற்கு மேலாக காத்து இருந்து மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேரில் வந்தால் தான் நாங்கள் செல்வோம் என அவர்கள் காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து மனு பெற்றார். அப்போது தங்களை தரக்குறைவாக நடத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒவ்வொரு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளிலும் உள்ள சங்க நிர்வாகிகள் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை கேட்டு அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அவர்கள் மனு அளித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.