கோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடத்தப்படுகிறது. இதற்கான வாடிவாசல், கேலரி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
பைபாஸ் சாலையில் ஒட்டி காளையை வீரர்கள் அடக்கம் சிலை அமைக்கப்பட்டு செல்பி பாயிண்ட் திறக்கப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். 750 காளைகளை அடக்க 500 வீரர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். பத்தாயிரம் பேர் அமரும் வகையில் கேலரி அமைக்கப்பட்டு உள்ளது.
அதிக காளைகளை அடக்கும் முதல் மூன்று வீரர்களுக்கு முறையை கார், பைக், ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்படுகிறது. சிறந்த காளைகளுக்கும் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ரூபாய் ஐயாயிரம் மதிப்பு உள்ள சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை அடுத்து மதுக்கரை அருகே செட்டிபாளையத்தில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் காளைகளின் உரிமையாளர்கள், மற்றும் மாடுபிடி வீரர்கள் தங்கள் விவரங்களை coimbatore.nic.in என்ற இணையதள பக்கத்தில் இன்று பிற்பகலுக்குள் பதிவு செய்ய வேண்டும், விழா குழுவினர், காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.