/tamil-ie/media/media_files/uploads/2023/08/Coimbatore-1.jpg)
கோயம்புத்தூர் மைக்ரோ கல்லூரி
சிறந்த திறன் வாய்ந்த மாணவ மாணவிகளுக்கு வாழ்க்கையின் புதிய மாற்றத்திற்குரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய விருதுகள் தங்களின் வளர்ச்சி பாதைக்கு வழிவகுக்கும் என மாணவி மாணவிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
கோவை சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் கே.ஜி.ஐ.எஸ்.எல் மைக்ரோ கல்லூரியில் பயின்ற மாணவ,மாணவிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நல்ல வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இந்த கல்லூரியின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாழ்க்கையின் புதிய மாற்றத்திற்குரிய விருது எனும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மைக்ரோ கல்லூரி முதன் முறையாக இந்தியாவின் பல முக்கிய நகரங்களான சேலம், மதுரை, பாண்டிச்சேரி, திருச்சி, பாலக்காடு, கொச்சின், திருவனந்தபுரம், மைசூர், மங்களூர், ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பை என 13 புதிய கிளை நிறுவனங்கள் துவங்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த திறன் வாய்ந்த மாணவ,மாணவிகள் வாழ்க்கையின் புதிய மாற்றத்திற்குரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அசோக் பக்தவத்சலம் தலைமை தாங்கினார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.