My V3 Ads நிறுவனத்தின் ஊழியர்கள் கைது : கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு

எம்.ஒய்.வி3 நிறுவனத்தின் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மனு கொடுக்க வந்தனர்

எம்.ஒய்.வி3 நிறுவனத்தின் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மனு கொடுக்க வந்தனர்

author-image
WebDesk
New Update
Police Coimbatore
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

கோவையில் My V3 Ads நிறுவனத்தின் மீது அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்க வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் வருவார்கள் என்ற தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

"MYV3"எட்ஸ்நிறுவனர் மற்றும் உறுப்பினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மதியம் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஆதரவாகவும, எம்.ஒய்.வி3 நிறுவனத்தின் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மனு கொடுக்க வந்த எம்.ஒய்.வி3 ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுளளது. இதனிடையே மேலும் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்த "MYV3"எட்ஸ் உறுப்பினர்கள் இருவரை போலீசார் காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். மேலும் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தசில "MYV3"எட்ஸ் சேர்ந்த பெண் உறுப்பினர்களைகாவல்துறையினர் பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: