வனச் சரகத்தில் யானை தாக்கி ஒருவர் பலி: வனத் துறை விசாரணை

பல்லடத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரை காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பல்லடத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரை காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

author-image
WebDesk
New Update
Elephant death

யானை தாக்கி ஒருவர் பலி

கோவை மதுக்கரை வனச் சராகத்தில் உள்ள வெண்ணல் பெருமாள் கோவில் அருகே உள்ள மூலக்காடுபதியில் வனம் பணியாளர்கள் யானை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பல்லடத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரை காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.

Advertisment

இது குறித்து அருகில் இருந்தவர்களிடம் இது குறித்து விசாரித்த போது அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அருகில் உள்ள கோவில் வளாகத்தில் தனியாக தங்கி வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த இடமானது காப்பு காட்டில் இருந்து சுமார் 150"மீட்டர் தொலைவில் உள்ளது என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வனப் பணியாளர்கள் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: