Advertisment

பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை: கோவையில் துணிகரம்; போலீஸ் விசாரணை!

கோவையில் பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
coimbatore Robbery

கோவையில், ஹோட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் செல்வராஜ் என்பவரின் வீட்டில் முதல் மாடியில் குமார்- சங்கீதா தம்பதி வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் பூ மார்க்கெட் பகுதியில் உணவகம் நடத்தி வரும் நிலையில், நேற்று வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு உணவகத்திற்கு சென்று விட்டனர். இவர்கள் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்டு, பிற்பகலில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் முதல் தளத்தில் இருந்து குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்துக்கொண்டு கீழே வந்துள்ளனர்.

அந்த நேரத்தில், வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் அவர்களைப் பார்த்து நீங்கள் யார்? என்று கேட்டு உள்ளார். உடனடியாக அங்கு இருந்து இருவரும் தப்பிச் சென்றனர். வீட்டின் முதல் தளத்திற்கு சென்ற செல்வராஜ் பார்த்த போது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து குமாருக்கு தகவல் தெரிவித்தார். அங்க வந்த குமார் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 60 பவுன் தங்க நகை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதுகுறித்து ஆர்.எஸ் புரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து திருடர்களைத் தேடி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment