போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் : கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சிறப்பு அந்தஸ்து

கோவை மகளிர் நீதிமன்றம் கூடுதல் போக்சோ சிறப்பு நீதிமன்றமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன

கோவை மகளிர் நீதிமன்றம் கூடுதல் போக்சோ சிறப்பு நீதிமன்றமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன

author-image
WebDesk
New Update
போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் : கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சிறப்பு அந்தஸ்து

பி.ரஹ்மான் கோவை

கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து 80"க்கும் மேற்பட்ட வழக்குகள் மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

Advertisment

பெண் சிறார்கள் மீதான பாலியல் குற்ற செயல்கள் தொடர்பாக, பதிவாகும் வழக்குகளை விசாரிக்க, கோவையில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் செயல்படுகிறது. கோவை மாவட்டத்தில், ஆண்டுதோறும் அதிக போக்சோ வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதில் நடப்பு ஆண்டில் நவம்பர் வரை 400"க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்தாண்டை விட, 180 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க கூடுதல் போக்சோ நீதிமன்றங்கள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மகளிர் நீதிமன்றத்தில் சுமார் 40 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.

இதனால் மகளிர் நீதிமன்றம் கூடுதல் போக்சோ சிறப்பு நீதிமன்றமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, குழந்தை திருமணம் உள்ளிட்ட 80 போக்சோ வழக்குகள் மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: