/indian-express-tamil/media/media_files/wUsy4pWbNJ2OVK5sy3Bx.jpg)
கணவன் மனைவி தீக்குளிக்க முயற்சி
கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். அந்த வகையில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு டீசல் கேனுடன் வந்த முருகேசன் என்பவர் தன் மனைவியுடன் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை மேலே ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி மேலே தண்ணீரை ஊற்றி முருகேசன் மற்றும் அவரது மனைவியை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தனது தற்கொலை முயற்சி குறித்து முருகேசன் கூறுகையில், கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறேன். கோவிலின் செயல் அலுவலர் கனகராஜ், நான் இருக்கும்போது இன்னொரு நபரை அந்த பணிக்கு அமர்த்தி விட்டார்.
இதனால் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. செயல் அலுவலர் கனகராஜ் தனது பணியை பிடுங்கிவிட்டார். கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து தான் தற்கொலை முயற்சி ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us