ஆங்கிலம் தெரிந்தாலும் அமைச்சர்கள் இந்தியில் பேசுகிறார்கள்: கார்த்திக் சிதம்பரம் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ளது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் சிறப்பாகக் கற்றுக் கொண்டால் வாழ்வில் முன்னேற முடியும்.

author-image
WebDesk
New Update
Karti Chidambaram

மும்மொழிக் கொள்கை தமிழகத்துக்கு தேவையில்லை – கார்த்திக் சிதம்பரம்
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை தேவையில்லை என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தினார்.

Advertisment

மானாமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம், “தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ளது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் சிறப்பாகக் கற்றுக் கொண்டால் வாழ்வில் முன்னேற முடியும். எனது மகளும் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலேயே கல்வி கற்றார். எனவே, தமிழகத்திற்கே சிறப்பாகப் பயன்படும் இந்தக் கொள்கை மாற்றமின்றி தொடர வேண்டும்.

மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி கண்டனம்

மேலும், “நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்த அதிகாரிகள் கூட வேண்டுமென்றே ஹிந்தியில் பேசுகிறார்கள். பாஜக அரசு தமிழக பள்ளிகளில் இந்தி திணிப்பை கொண்டு வந்தால், அதன்மூலம் அவர்கள் விரும்பும் சித்தாந்தங்களை பரப்ப முயற்சிக்கும் அபாயம் உள்ளது. தமிழக மக்கள் இதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

Advertisment
Advertisements

பாஜகவை தமிழக மக்கள் நிராகரிக்கிறார்கள்

தமிழகத்தில் பாஜகவிற்கு எந்தவிதமான ஆதரவும் இல்லை. அவர்கள் மிஸ்டு கால் இயக்கம் நடத்தினாலும், கையெழுத்து இயக்கம் நடத்தினாலும் மக்கள் அவர்களை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு கட்சியும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தமிழக மக்கள் பாஜகவையும், அதனுடன் கூட்டணி வைக்கும் கட்சியையும் நிராகரிப்பார்கள்.

இந்தியா” கூட்டணி வலுவாக உள்ளது

2026 சட்டமன்ற தேர்தல் குறித்து தற்போது கூற முடியாது. எனினும், ‘இந்தியா’ கூட்டணியில் எந்தக் கட்சியும் விலகப் போவதில்லை. எதிரணியில் இருப்பவர்கள் யாருடன் கூட்டணி சேரப் போகிறார்கள் என்பது அவர்களுடைய விருப்பம்” என அவர் விளக்கம் அளித்தார்.

ரயில்வே கேள்விக்கு பதில் இல்லை

தமிழகத்திற்குத் தேவையான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கு பலமுறை கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இங்கு இருக்கும் ரயில்வே பொது மேலாளருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பது தெரிகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: