தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 432 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் தினசரி கொரோனா எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 432 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,489 ஆக உள்ளது.
சென்னையில் 117 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து கோவையில் 46 பேரும் , செங்கல்பட்டில் 40 மற்றும் கன்னியாகுமரியில் 27 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்னையில் 115 பேர் மருத்துவமனையில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 41 பெர் ஆக்ஸிஜன் வழங்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வயதானவர்கள் மற்றும் மற்ற நோய்கள் உள்ள நபர்கள் மட்மே உயிரிழக்கின்றனர் என்று சுதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரணியம் தெரிவித்துள்ளார்.