தமிழகத்தில் நேற்றைய தினத்தில் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களாக கொரோனா தொற்று பெரிதாக அதிகரிக்கவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மரணமடைந்தார், கிட்டதட்ட 4 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற முதல் மரணம் இது. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி 40 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 9 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் சேலத்தில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் 257 பேர் கொரோனா தொற்றுக்கு சிசிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் 63 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 57 பேர் கொரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் . 2,690 பேரிடம் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.