Advertisment

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்

New covid regulations In tamilnadu : தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சம் தொட்டு வரும் நிலையில், நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
News Highlights : கொரோனா தடுப்பு நடவடிக்கை; இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்கு நாள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் புதிய கட்டப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒருபுறம் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில் அதிக கொரோனா தொற்று பாதிப்பு உள்ள மாநிலங்களின் பட்டியலில் ஒன்றான தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில். பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் படி அத்தியாவசிய பொருட்கள் விற்பனைகடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் 12 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில் ஹோட்டல்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையும். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஹோட்டல்களில் சாப்பிட அனுமதி இல்லை என்றும் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தும் கனிசமாக குறைக்கப்பட்டது. இந்த புதிய கட்டப்பாடுகள் வரும் 24-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் புதிய கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் காய்கறிகள், மற்றும் இறைச்சிக்கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பகல் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மே 17-ந் தேதி முதல் மாவட்டத்திற்கு உள்ளே மற்றும் மாவட்டத்திற்கு வெளியே செல்லும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 17-ந்தேதி காலை 6 மணிக்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவில் டாஸ்மாக் கடைகளுக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment