ஆன்லைன் ட்ரேடிங் (TRADING) மூலம் ரூபாய் 10,61,500 பண மோசடியில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த யூனூஸ் என்பவரை சைபர் க்ரைம் போலீசார் சார் கைது செய்தனர்
கடலூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மனுதாரரிடம், ஆன்லைன் ட்ரேடிங் (TRADING) மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி ரூ.10,61.500 பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக பெறப்பட்ட புகார் மனுவை பெற்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டன, இந்த விசாரணையில்,வழக்கில் தொடர்புடைய குற்றவாளி யூனூஸ் என்பவர் மலப்புரம் பகுதி, கேரளா மாநிலத்தில் இருப்பதாக தெரிய வந்ததது.
இதனையத்து அடுத்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரகுபதி வழிகாட்டுதலின் படி இணையவழி குற்ற காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்த யூனிஸை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு தெரிந்தவர்களிடமிருந்து வங்கி கணக்குகளை பெற்று சைபர் குற்றவாளிகளுக்கு கமிஷன் அடிப்படையில் விற்று வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-III –ல் ஆஜர்படுத்தப்பட்ட யூனிஸ் இன்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் இதுபோன்ற சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க அவரவர்களது வங்கி கணக்கு விபரங்களையோ மற்றும் செல்போன் எண், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு ஆதாரங்களையோ, சுய விபரங்களையோ முகம் தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம் என்றும் சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டியும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.