'மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்': ஓபன் மைக்கில் வெளுத்து வாங்கிய எஸ்.பி

சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக்,இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு உட்பட 7 பேர் வேலுார் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்

சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக்,இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு உட்பட 7 பேர் வேலுார் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்

author-image
WebDesk
New Update
Police

சிதம்பரம், லாட்டரி விற்பனை விவகாரத்தில் காவல் துறை அதிகாரிகளை, மைக்கில், ஓபன் மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்' என, எஸ்.பி., வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த பிர பெரிய லாட்டரி வியாபாரி நசீர், 56, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். இதற்கு போலீ சார் உடந்தையாக இருந்ததாக வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ராகார்க் வரை புகார் சென்றது.

தொடர்ந்து, கடலுார் எஸ்.பி., ஜெயகுமார் உத்தரவின்படி, தனிப்படை போலீசார் நசீரை பிடித்தனர்.  இதில், போலீஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை பல லட்சம் ரூபாய் மாமூல் வழங்கியதாக அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்தார். இது தொடர் பாக, சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக்,இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு உட்பட 7 பேர் வேலுார் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்

இந்நிலையில், கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு,திட்டக்குடி உள்ளிட்ட ஏழு உட்கோட்ட காவல் அதிகாரிகளையும் மைக்கில் அழைத்தார் எஸ்.பி., ஜெயகுமார். அப்போது அவர் பேசுகையில், 'சிதம்பரம் பகுதியில் காலம் காலமாக லாட்டரி விற்பனையில் போலீசார் மாமூல் வசூலித்து வந்தது தெரிகிறது. இதில் விதி விலக்காக ஒருசில அதிகாரி கள் மட்டும் நேர்மையாக பணியாற்றி வருகின்றனர்.

Advertisment
Advertisements

இனியும் லாட்டரி விற்பனையாளர்களிடம்  தொடர்புகொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாக, வேறு மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுவர். 'லாட்டரி, கஞ்சா விற்பனைக்காக மாமூல் வாங்குபவர்கள், பிச்சை எடுத்து சாப்பிடலாம்' என, கடுமையாக எச்சரித்தார். போலீசாரை, எஸ்.பி., மைக்கில் இப்படி பேசியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாபு ராஜேந்திரன் கடலூர்

tamilnadu news

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: