நான் முதல்வன் திட்டத்தில் படித்து மத்திய அரசு பணி: கடலூர் மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

நான் முதல்வன் தொலைநோக்கு பார்வை திட்டம் கல்வி நிறுவனங்களின் அளவிலும், சமூக அளவிலும் பயனுள்ள பாதையை உருவாக்கியுள்ளது என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

நான் முதல்வன் தொலைநோக்கு பார்வை திட்டம் கல்வி நிறுவனங்களின் அளவிலும், சமூக அளவிலும் பயனுள்ள பாதையை உருவாக்கியுள்ளது என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Naan Muthal

கடலூர் மாவட்டத்தில், நிறைந்தது மனம்“ நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக  பயனடைந்த செல்வி சரண்யாவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் பாராட்டி கேடயம் வழங்கினார்

Advertisment

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக பயனடைந்து ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் தேர்ச்சி பெற்ற செல்வி சரண்யாவை நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் .சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (24.04.2025) பாராட்டி கேடயம் வழங்கினார்.

இது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார், கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு பார்வை திட்டமான "நான் முதல்வன், திட்டத்தின் கீழ், "உயர்வுக்குப் படி திட்டம் வாயிலாக மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்வி சேர்வதற்காக எடுக்கப்படும் முன்னோடி முயற்சியாகும். நான் முதல்வன் தொலைநோக்கு பார்வை திட்டம் கல்வி நிறுவனங்களின் அளவிலும், சமூக அளவிலும் பயனுள்ள பாதையை உருவாக்கியுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் விரிவான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்குவதும், மாணவர்களுக்குக் கிடைக்கும் பல்வேறு கல்வி வாய்ப்புகள், உதவித்தொகை மற்றும் ஆதரவு சேவைகள் பற்றிய தகவல்கள் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டிடவும், திறன் மேம்பட்ட மாணவர்களை உருவாக்கிடவும், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரித்திடவும இத்திட்டம் வழி செய்கிறது.

Advertisment
Advertisements

நான் முதல்வன் என்னும் சிறப்புத்திட்டம் ஏற்படுத்தப்பட்டு 2022-23ஆம் கல்வியாண்டில் 4,643 பொறியில் கல்லூரி மாணவர்களுக்கும் 27,653 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் என மொத்தம் 32,296 மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டது. 2023-24ஆம் கல்வியாண்டில் 5,437 பொறியில் கல்லுரி மாணவர்களுக்கும் 28,010 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும், 8,417 தொழிற்பயிற்சி மாணவர்கள் என மொத்தம் 41,864 மாணவர்கள் திறன் பயிற்சி வழங்கப்பட்டது. 

2024-25ஆம் கல்வியாண்டில் 6,303 பொறியில் கல்லுரி மாணவர்களுக்கும் 26,246 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும், 6,963 தொழிற்பயிற்சி மாணவர்கள் என மொத்தம் 39,512 மாணவர்கள் திறன் பயிற்சி வழங்கப்பட்டது என மொத்தம் 1,13,582 மாணாக்கர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில் 5,091 நபர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். எனவே, இதுபோன்ற  அரசின் திட்டங்களை பயன்படுத்தி மாணவ, மாணவியர்கள் தங்களது வாழ்வினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.

நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்த செல்வி சரண்யா கூறுகையில்,  நான் பண்ருட்டி வட்டம், பத்திரக்கோட்டை பகுதியில் வசித்து வருகிறேன். இளங்கலை வேளாண்மை படித்துள்ளேன். நான் 3 வருடக காலமாக ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விற்கு விடாமுயற்சியுடன் படித்து வந்தேன். கடந்த 2 வருடங்களாக நான் முதல்வன் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.7,500 உதவித்தொகை பெற்று படித்து வந்தேன்.

2024 நடைபெற்ற ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் இந்திய அளவில் 125 ஆவது இடத்தினை பெற்றுள்ளேன். எனக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்விற்கு பயில உதவித்தொகை பெற பேரூதவியாக இருந்த நான் முதல்வன் திட்டத்தினை வழங்கிய  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: