மோன்தா புயல் நகரும் பாதை: கரையைக் கடக்கும் இடம் எது?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற படிப்படியாக மாறிய நிலையில், தற்போது புயலாக வலு பெற்றுள்ளது. மோன்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல், மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற படிப்படியாக மாறிய நிலையில், தற்போது புயலாக வலு பெற்றுள்ளது. மோன்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல், மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.

author-image
WebDesk
New Update
rain

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11.30 மணியளவில் புயலாக மாறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோன்தா புயல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில், நகர்ந்து வருவவதாகவும் சென்னையில் இருந்து 560 கி.மீ தொலைவில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்தடுத்த நாட்களில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற படிப்படியாக மாறிய நிலையில், தற்போது புயலாக வலு பெற்றுள்ளது. மோன்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல், மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.

காலை 5.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 600 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், ஆந்திராவின் காகிநாடாவில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 680 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்த இந்த புயல், அடுத்த சில மணி நேரங்களில் சென்னையில் இருந்து 550 கி.மீ. கிழக்குதென்கிழக்கே நிலை கொண்டுள்ளதாகவும், அடுத்த 12 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியின் மேல் தொடர்ந்து நகர்ந்து செல்லும் என்ற கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை காலை தீவிர சூறாவளி புயலாக மாறும் மோந்தா வடக்கு வடமேற்கே நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே நாளை மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment
Advertisements

இந்த புயல் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புயல் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கரைக்கு திரும்பும்படி முன்பே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: