கூலி படம் பார்த்து ரிவ்யூ எழுதத் தெரிந்த உதயநிதிக்கு தூய்மைப் பணியாளர்களை சந்திக்க நேரம் இல்லையா? சுப. உதயகுமாரன் கேள்வி

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக நடிகை சனம் ஷெட்டி மற்றும் அம்பிகா இருவரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக நடிகை சனம் ஷெட்டி மற்றும் அம்பிகா இருவரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
Udhayanithi Udhayakuamr

சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத தி.மு.கவில், உதயநிதி ஸ்டாலின், கூலி படத்தை பார்த்து கருத்து சொல்ல நேரம் இருக்கிறதா என்று சுப உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

சென்னையில் முக்கிய பகுதிகளில், தூய்மை செய்யும் பணியை தனியாருக்கு கொடுத்த தி.மு.க அரசை கண்டித்தும், தங்களுக்கு பணி நிரந்தரம் கோரியும், தூய்மை பணியாளர்கள், கடந்த 10 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு, தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு அளித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட விஜய், போராட்ட குழுவை சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இது தொடர்பான வீடியோ பதிவும் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது.

இதனைத் தொடர்ந்து சனம் ஷெட்டி, போராட்ட குழுவினருடன் களமிறங்கிய, அவர்களுக்கு ஆதரவாக பேசியது பலரின் கவனத்தை ஈர்த்துது. அதேபோல். நடிகை அம்பிகாவும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக பேசியது இணையத்தில் வைரலாக பரவியது. இதன் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு, ஆதருவு பெருகி வரும் நிலையில், தி.மு.க. அரசுக்கு எதிராக கருத்துக்கள் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில், தற்போது தூத்துக்குடி சுப உதயகுமார், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சினிமாக்காரன் அரசியலுக்கு சரியாக மாட்டான் என்று சொல்வதற்கு காரணம் இதுதான் தோழர்களே. ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் தூய்மைத் தொழிலாளர்களை நேரில் சென்று சந்திக்க பத்து நிமிடம் கிடைக்கவில்லை மாண்புமிகு துணை முதல்வருக்கு. ஆனால் "கூலி" படம் பார்த்து கருத்துச் சொல்ல மூன்று, நான்கு மணிநேரம் கிடைக்கிறது. அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். நாம்தான் சரியில்லை! என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

முதல்வர், துணை முதல்வர் என யாரும், தூய்மை பணியாளர்களை இதுவரை சந்திக்காத நிலையில், இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாளை வெளியாக உள்ள ரஜினிகாந்தின் கூலி படத்தின், ரிலீஸ்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதை குறிப்பிட்டு தற்போது உதயகுமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: