Coimbatore, Madurai, Trichy News Highlights: திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் குடமுழுக்கு விழா தேதி அறிவிப்பு

Coimbatore, Madurai, Trichy News Live- 6 June 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 6 June 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tiruchendur temple
  • Jun 06, 2025 20:35 IST

    திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு தேதி அறிவிப்பு

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் குடமுழுக்கு விழா வரும் ஜூலை மாதம் 7-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.



  • Jun 06, 2025 19:55 IST

    கிருஷ்ணகிரி சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் அரசுப் பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். புறவழிச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் குமார், பேருந்து ஓட்டுநர் பரமசிவம் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோருக்கு மத்தார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



  • Advertisment
  • Jun 06, 2025 19:09 IST

    கணக்கில் வராத 15,000 லிட்டர் டீசல் - போக்குவரத்து ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்

    நெல்லை மண்டல போக்குவரத்து கழகத்தில் நடந்த தணிக்கை அறிக்கை அடிப்படையில் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 15,000 லிட்டர் டீசல் குறித்த தகவல் கணக்கில் வராததால் மண்டல போக்குவரத்துக் கழக அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். 



  • Jun 06, 2025 19:07 IST

    திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக, அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஆணை

    திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் உள்ள முதல் எட்டு பழைய இராஜ வாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசன நிலங்களின், 2025-2026-ஆம் ஆண்டு முதல் போக பாசனத்திற்காக, அமராவதி அணையிலிருந்து, அமராவதி ஆற்று மதகு வழியாக 07.06.2025 முதல் 20.10.2025 வரை 135 நாட்களில், 80 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும். 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில், வினாடிக்கு 300 கன அடி வீதம் 2073.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.



  • Advertisment
    Advertisements
  • Jun 06, 2025 18:59 IST

    இருசக்கர வாகனம்  மோதி விபத்து: சாலையை கடக்க முயன்ற முதியவர் படுகாயம்

    கோவை மாவட்டம் அன்னூர் சக்தி சாலையில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்த முதியவர் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம்  மோதி விபத்துக்குள்ளானது.

    கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது அன்னூர் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் வழியாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து சாலை கடக்க முயன்ற முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்  சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jun 06, 2025 17:22 IST

    ஈமு கோழி நிறுவன உரிமையாளருக்கு சிறை

    ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சுசி ஈமு கோழி நிறுவனம்
    நாடு முழுவதும் பலரிடம் மோசடி செய்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், அந்நிறுவன உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம் விதித்து முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.



  • Jun 06, 2025 16:47 IST

    திருவண்ணாமலை மலையில் கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி

    திருவண்ணாமலை, மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? மாவட்ட ஆட்சியர் வரும் 20ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jun 06, 2025 15:50 IST

    லேட்டாக திறக்கப்பட்ட காவல்நிலையம் - பொதுமக்கள் அவதி

    திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்று காலை 11 மணி வரை திறக்கப்படாமல் இருந்ததால், புகாரளிக்க வந்தவர்கள் அவதி; இதுகுறித்து அங்கிருந்த காவல்துறையினரிடம் விளக்கம் கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டனர். 



  • Jun 06, 2025 14:34 IST

    தி.மலை கிரிவலப் பாதையில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற நடவடிக்கை

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிவலப்பாதையில் 1935 கட்டுமானங்கள் அனுமதியின்றி இருப்பதாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 



  • Jun 06, 2025 14:32 IST

    ஊருக்குள் உலா வரு காட்டெருமை

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை வனத்தை ஒட்டிய கிராமத்தில் காட்டெருமை கூட்டம் தஞ்சமடைந்துள்ளது; அவை வயல்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மக்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு, விரைவில் காட்டெருமை கூட்டம் வனத்திற்குள் அனுப்பி வைக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். 



  • Jun 06, 2025 14:03 IST

    தமிழகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் ஜூன் 10,11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜூன் 11 ஆம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் ஜூன் 12 ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூரிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  



  • Jun 06, 2025 13:24 IST

    படம் வெளியாகும் நேரத்தில் கமல் ஹாசன் இது போன்ற கருத்தை தவிர்த்திருக்கலாம் – டி.டி.வி. தினகரன் 

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் நடைபெற்ற அ.ம.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கமல் ஹாசன் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை, படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை சொல்லாமல் தவிர்த்திருக்கலாம் என்று கூறினார்.



  • Jun 06, 2025 11:29 IST

    அமித் ஷா - அன்புமணி சந்திப்பு இதுவரை திட்டமில்லை; நயினார் நாகேந்திரன்

    அமித் ஷா - அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டமில்லை. ராமதாஸ் – அன்புமணி பேச்சுவார்த்தையில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் தெரிவித்துள்ளார்



  • Jun 06, 2025 10:22 IST

    தருமபுரி அருகே விபத்தில் சிக்கிய மலையாள நடிகர்

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கார் விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ படுகாயம் அடைந்தார்.

    குடும்பத்தோடு காரில் பெங்களூரு நோக்கி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது கோர விபத்து நடந்தது. இந்த விபத்தில் டாம் சாக்கோவின் தந்தை சி.ஓ.சாக்கோ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

    விபத்தில் படுகாயம் அடைந்த ஷைன் டாம் சாக்கோ, தாயார் மரியா கார்மலுக்கு தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



  • Jun 06, 2025 10:14 IST

    சடலம் மாற்றி அனுப்பப்பட்ட விவகாரம்: மருத்துவர் இடமாற்றம்

    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சடலம் மாற்றி அனுப்பப்பட்ட விவகாரத்தில், பணியில் இருந்த மருத்துவரை இடமாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் நடவடிக்கை

    திருத்தணி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ராஜேந்திரன் சடலத்தை, வேறொருவரின் சடலத்திற்குப் பதிலாக பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டு, ராஜேந்திரனின் குடும்பத்தினர் போராட்டம் செய்யும் நிலை ஏற்பட்டது



  • Jun 06, 2025 09:44 IST

    புதுக்கோட்டை ஆட்டு சந்தையில் களைகட்டிய விற்பனை

    புதுக்கோட்டை ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, இன்று விற்பனை களைகட்டியது

    Pudukottai



  • Jun 06, 2025 09:33 IST

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

    மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து 4,741 கன அடியாக குறைந்தது. அணையின் நீர் மட்டம் 113.41 அடியாகவும், நீர் இருப்பு 83.349 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றம்



  • Jun 06, 2025 09:15 IST

    ஆம்னி பேருந்து லாரி மீது மோதி விபத்து

    சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் விருதாச்சலம் சாலை மேம்பாலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து - 10 பேர் படுகாயம்

    Trichy



  • Jun 06, 2025 09:15 IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குறைந்த நீர்வரத்து

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 6000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5500 கன அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்ததால் நீர்வரத்து படிப்பாக குறைந்து வருகிறது.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: