தீபாவளி கொண்டாட்டத்தில் விபரீதம்: மதுரையில் கண் பார்வையை பறிகொடுத்த 4 குழந்தைகள்!

பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட காயம் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட காயம் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
eye liner

நாடு முழுவதிலும் கடந்த 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடிய இந்த பண்டிகையில், பட்டாசுகள் வெடிக்கும் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment

தீபாவளி பண்டிகை தொடங்கும் முன்னரே தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான பல வழிகாட்டுதல்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனாலும் வழிகாட்டுதல்களை மீறி பட்டாசு வெடிக்கும் போது பல்வேறு விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தன.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி முதல் 3ம் தேதி வரை பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட காயம் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டு, மதுரையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Whats

Advertisment
Advertisements

இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உரிய சிகிச்சை பலனின்றி 4 குழந்தைகளுக்கு முற்றிலும் கண் பாதிப்பு ஏற்பட்டு கண்கள் அகற்றப்பட்டு உள்ளதாக பிரபல தனியார் மருத்துவமனை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்த நான்கு குழந்தைகளுக்கு கண் பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: