முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில், தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தங்கள் சொந்த மாநில நலன்களை கைவிட்டு, தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக டெல்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவர்கள், எங்களுக்கு போதனை செய்ய உரிமை இல்லை. தமிழ்நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை, நமது விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள்.
அச்சுறுத்தல் எங்கள் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது. உங்கள் டெல்லி எஜமானர்களிடம் அவர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் வேலை செய்யாது என்று சொல்லுங்கள். எழுதப்பட்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு தீர்வைத் தவிர வேறு எதையும் நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், அரசியலமைப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை குரல் எழுப்புவோம் என்று பதிவிட்டுள்ளார்.
க.சண்முகவடிவேல்