/indian-express-tamil/media/media_files/2025/09/14/vijay-bsdh-2025-09-14-00-03-13.jpg)
விஜயின் அரசியல் வருகையால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, தமிழகத்தில் அண்ணா, பெரியார் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
மதுரை தமுக்கத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி), பொது நுாலக இயக்ககம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவின் 8-ம் நாளான இன்று (13/09/2025) விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, ‘தெற்கின் எழுச்சி’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., விஜய் அரசியலுக்கு வருவது குறித்து எங்களுக்குக் கவலையில்லை. விஜயின் அரசியல் வருகையால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் அரசியல் செய்ய நினைக்கும் யாரும் அண்ணா, பெரியார் ஆகியோரின் வழியையும், அவர்களின் சிந்தனையையும் தவிர்த்து முடியாது என்று பேசினார்.
இந்த நிகழ்வில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மாநகர் திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.