Advertisment

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்கள் நாட்டின் கண்கள். மாணவர்களின் நலனுக்காக தன்னார்வலர்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் மூலம் தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது

author-image
WebDesk
New Update
அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து அவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்யக்கூடாது. மாணவர்கள்  நாட்டின் கண்கள் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Advertisment

தமிழக அரசு சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கூறுகையில்,

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு வகுப்புகள் முழுமையாக நடத்தப்படவில்லை. அதனால் தேர்ச்சி விகிதம் என்பது குறைந்துள்ளது. இந்த ஆண்டு குறித்த காலத்தில் வகுப்புகள் தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக நடத்தப்படுவதால் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து அவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்யக்கூடாது.

மாணவர்கள் நாட்டின் கண்கள். மாணவர்களின் நலனுக்காக தன்னார்வலர்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் மூலம் தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது தேர்வு மதிப்பெண்களை வைத்து மாணவர்கள் தவறான முடிவுக்கு செல்லக்கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu Anbil Mahesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment