வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக, நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரியிலிருந்து 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
மேலும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முன்னெடுக்கப்படும். இதற்கு தேவையான அளவிலான படிவங்களை வைத்திருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“