கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் யானைகள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. அதேபோல் இந்த பகுதிகளில் அவ்வப்போது யானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் வந்து அட்டகாசம் செய்வது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், வால்பாறையை அடுத்த சிறுக்குன்றா எஸ்டேட்.எல்.டி. பகுதியில் இரவு கூட்டமாக வந்த யானைகள் அங்கிருந்த ரேஷன் கடையை உடைத்து அதிலிருந்த அரிசி பருப்பு களை அள்ளி வீசி சென்றது.
பின்பு பரமேஸ்வரன் என்பவர் நடத்தி வந்த மளிகை கடையை உடைத்து மளிகை பொருட்கள் திபண்டங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியது. இதனை அறிந்த அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் கடையை சேதபடுத்திய யானைகளை கூச்சலிட்டு அங்கிருந்து விரட்டியதை தொடர்ந்து யானைகள் அருகிலிருந்த வன பகுதிக்கு சென்று தஞ்சமடைந்தன.
மேலும் குரங்குமுடி பகல் நேரத்தில் தேயிலைத் காட்டில் முகாமிட்டுள்ளது ஹைபாரெஸ்ட், சோலையார் பாலாஜி கோவில், சின்ன கல்லார் பகுதிகளில் குழுவாக யானைகள் சுற்றி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“