சென்னையில் தொழிலதிபர், நகை வியாபாரி வீடுகளில் இ.டி சோதனை: பின்னணி என்ன?

சைதாப்பேட்டையில், ரியல்எஸ்டேட் அதிபர் ராமகிருஷ்ண ரெட்டி என்பவர் வீட்டில் சோதனை அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சைதாப்பேட்டையில், ரியல்எஸ்டேட் அதிபர் ராமகிருஷ்ண ரெட்டி என்பவர் வீட்டில் சோதனை அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
Raifd

சென்னையில் கடந்த சில தினங்களாக போத்தீஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில், இன்று சைதாப்பேட்டையில், ரியல்எஸ்டேட் அதிபர் ராமகிருஷ்ண ரெட்டி என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisment

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியில் பலரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், மறுபக்கம், அமலாக்கத்துறை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக போத்தீஸ் நிறுவனத்தில் பல இடங்களில் அமலாகத்துறையினர் சோதனை நடத்தியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது சைதாப்பேட்டையில், ரியல்எஸ்டேட் அதிபர் ராமகிருஷ்ண ரெட்டி என்பவர் வீட்டில் சோதனை அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், சௌக்கார்பேட்டையில் நகைக்கடை நடத்தும், மோகன்லால் காத்ரியின் புரசைவாக்கம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் பாதுகாப்புக்காக சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். 3 வாகனங்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சைதாப்பேட்டையை சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டி, எம்.ஏ.ஆர்.ஜி. லிமிட்டெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார், அதேபோல், சௌக்கார்பேட்டையில’, நகைக்கடை நடத்தும், மோகன்லால் காத்ரி தங்கத்தை மொத்த விலைக்கு விற்கும் தொழிலை செய்து வருகிறார். இதனிடையே சென்னையில் தொழிலதிபர், நகை வியாபாரி வீடுகள் மற்றும் அவர்களின் தொடர்புடைய அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை அதிகரித்துள்ளது,

Advertisment
Advertisements
tamilnadu news

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: