Advertisment

பரோட்டா சுட்ட அமைச்சர்; துணிக்கு இஸ்திரி போட்ட முன்னாள் அமைச்சர்: ஈரோட்டில் தி.மு.க- அ.தி.மு.க பிரசாரம் மும்முரம்

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும பிப்ரவரி 27ந் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பரோட்டா சுட்ட அமைச்சர்; துணிக்கு இஸ்திரி போட்ட முன்னாள் அமைச்சர்: ஈரோட்டில் தி.மு.க- அ.தி.மு.க பிரசாரம் மும்முரம்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்த வரும் நிலையில், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்களது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரததில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருநத காங்கிரஸ் கட்சியின் ஈவெரா தமிழ்மகன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீர் மரணமடைந்த நிலையில், காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும பிப்ரவரி 27ந் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது.

இதில் திமுக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மரணமடைந்த முன்னாள்சட்டமன்ற உறுப்பினரின் அப்பா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்ட பலர் இந்த தேர்தலில் போட்டியிடும் நிலையில், அமமுக தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணி சார்பில் திமுக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும், அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியான பாஜக தலைவர்கள் என பலரும் தங்களது வேட்பாளருக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளருக்காக பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொகுதியில் உள்ள பரோட்ட கடை ஒன்றில் பரோட்டா சுட்டு வாங்கு சேகரித்தார். பரோட்ட கட்டையை எடுத்து மாவை தேய்த்து எண்ணெய்யில் செஞ்சி மஸ்தான் பரோட்ட சுட்ட வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தேர்தலுககாக திமுக சார்பில் 11 அமைச்சர்கள் பிரச்சார களத்தில் உள்ளனர்.

அதேபோல் அதிமுக சார்பில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கச்சேரி சாலையில், ஒரு இஸ்திரி கடையில துணிகளுக்கு போட்டும், டீக்கடையில் மக்களுக்கு டீ போட்டு கொடுத்தும் வாக்கு சேகரித்தார்.

சட்டசபை தேர்தலுக்காக பலரும் இந்த மாதிரியான வித்தியாசமான பிரச்சாரததில் ஈடுபட்டது வைரலாக பரவிய நிலையில், தற்போது இடைத்தேர்தலுக்காக இந்நாள் அமைச்சரும் முன்னாள் அமைச்சரும் பரோட்டா சுட்டும், இஸ்திரி போட்டு கொடுத்தும் வாக்கு சேகரித்த வீடியோ பதிவுகள் ணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil’’

Erode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment