Advertisment

குப்பை கொட்டுவதால் நீர்நிலைகள் பாதிப்பு : கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் மீது விவசாயிகள் புகார்

பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டுவதால் விவசாயம் மற்றும் நீர்நிலைகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுத்துள்ளது.

author-image
WebDesk
Oct 09, 2023 19:53 IST
New Update
Coimbatore Farmers

கோயம்புத்தூர் விவசாயிகள்

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதி கோட்டூர் மலையாண்டி பட்டினம், மதிப்பாதை வழிதடத்தில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கடந்த சில நாட்களாக விவசாய நிலம் மற்றும் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் கொட்டுவதாகவும் இதனால் விவசாயம் மற்றும் நீர்நிலைகள்  கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

Advertisment

மேலும் இது சம்பந்தமாக மாவட்ட வருவாய் அலுவலர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு இவ்விடத்தில் குப்பைகளை கொட்ட கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவது சிமெண்ட் கால்கள் கட்டி இடையூறு செய்து வருவதாகவும் இத்தகைய செயல்களை தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment