Advertisment

விவசாயிகள் சங்க கூட்டம் - ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை செலுத்தி புறப்பட்ட தமிழக விவசாயிகள்

நாளை (அக்டோபர் 22) மைசூரில் நடைபெறவுள்ள விவசாயிகள் சங்க கூட்டத்தில் பங்கேற்கவுள்ள விவசாயிகள், ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் புறப்பட்டுச் சென்றனர்.

author-image
WebDesk
New Update
Farmers meeting

மைசூரில் நாளைய தினம் (அக்டோபர் 22) விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Advertisment

இதில், கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 20 விவசாயிகள், தஞ்சையில் உள்ள ராஜராஜ  சோழனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், "தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 2018-ஆம் ஆண்டு முதல் ராசி மணல் அணை கட்டுவதற்காக பல்வேறு போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தி வருகிறோம். ராசி மணல் அணைக் கட்டுமான இடம் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது என்பதை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தி, 2019-ம் ஆண்டு ராசி மணலில் அடிக்கல் நாட்டினோம். தொடர்ந்து தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறோம்.

இந்நிலையில் கடந்த ஆக. 27-ம் தேதி தஞ்சாவூரில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு எட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டோம். அதனை தொடர்ந்து ராசிமணல் பகுதியை பார்வையிட்டு, கர்நாடக விவசாயிகள் அணை கட்டுவதற்கான சாதகமான சூழல் உள்ளதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, மைசூரில் 2-ம் கட்டமாக, நாளை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அதன்படி எங்கள் பயணம் வெற்றிபெறும்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Farmers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment