/indian-express-tamil/media/media_files/wfMVRWsQu9X98Nh0e2tr.jpg)
புளியஞ்சோலை சுற்றுலா தளம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பிரபல சுற்றுலா தளமான புளியஞ்சோலைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தின் பிரபல சுற்றுலா தளமானதாக துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலையில் தண்ணீர் வரத்து ஆர்ப்பரிப்பதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நீரோடைகளுக்குச்செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். புளியஞ்சோலையின் நீர் பிடிப்பு பகுதியான நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை பெய்து வருகிறது.
இதன்ன் காரணமாக நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்பட்டதால் கொல்லிமலையின் கடைமடையாக இருக்கும் புளியஞ்சோலைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் நலன் கருதி புளியஞ்சோலை நீரோடைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை வதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், நீர்வரத்து குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என திருச்சி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.